பச்சை வண்ண பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கியுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாவை ராஜா வை

Pachchai Vanna Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்…
என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்…
செடி கொடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்…
நான் இலை தழையோடு என் விரல் கோர்த்தேன்…

ஆண் : ஹே… புல்லின் மேலே பாதம் வைக்காமல்…
செல்கின்றேன் பெண்ணே…
உன் சொல்லை கேட்ட பின்னே…

ஆண் : ஹே… பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்…
என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்…

BGM

ஆண் : என் கால் ஒன்றில் முள் குத்தினால்…
அவள் முள்ளுக்கு நோய் பார்க்கிறாள்…
வாய் கொண்டு பேசாத காய் தாங்கும் மரம் ஒன்றை…
தாயென்று சொன்னாலே எனை ஈர்க்கிறாய்…

ஆண் : நான் கிளை ஒன்றில் உந்தன் கை பார்க்கிறேன்…
அதன் ஓரத்தில் லேசாய் கீறல்கள் கண்டாலே…
என் நெஞ்சில் வலி கொள்கிறேன்…

ஆண் : இதய சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன்…
ஹே… நானும் மரமாக ஏன் வரம் கேட்டேன்…
இதய சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன்…
ஹே… நானும் மரமாக ஏன் வரம் கேட்டேன்…
ஏன் வரம் கேட்டேன்…

BGM

ஆண் : என் வீடெங்கும் காடாக்கினாய்…
என் காட்டுக்குள் கிளி ஆகினாய்…
கிளியொன்றின் கீற்றாகி இலை ஒன்றின் மூச்சாகி…
முகில் ஒன்றின் பேச்சாகி என்னை வீழ்கிறாய்…

ஆண் : ஆண் கூட்டங்கள் இங்கே ஏராளமாய்…
நான் நீரற்று நின்றேன்…
நீ வந்து வீழ்ந்தாய்…
என் வேறெங்கும் தாராளமாய்…

ஆண் : மழை நனைத்த பின்னே நான் சிலிர்க்கின்றேன்…
என் நெஞ்சுக்குள்ளே ஏதோ நான் துளிர்கின்றேன்…
மழை நனைத்த பின்னே நான் சிலிர்க்கின்றேன்…
என் நெஞ்சுக்குள்ளே ஏதோ நான் துளிர்கின்றேன்…
நான் துளிர்கின்றேன்…

ஆண் : ஹே… பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்…
என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்…
செடி கொடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்…
நான் இலை தழையோடு என் விரல் கோர்த்தேன்…

ஆண் : ஹே… புல்லின் மேலே பாதம் வைக்காமல்…
செல்கின்றேன் பெண்ணே…
உன் சொல்லை கேட்ட பின்னே…

ஆண் : ஹே… பச்சை வண்ண பூவே…
ஹே பச்சை வண்ண பூவே…

BGM


Notes : Pachchai Vanna Song Lyrics in Tamil. This Song from Vai Raja Vai (2015). Song Lyrics penned by Madhan Karky. பச்சை வண்ண பூவே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top