nila-kaikiradhu-song-lyrics

நிலா காய்கிறது (பெண்)

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிணிஏ. ஆர். ரகுமான்இந்திரா

Nila Kaikiradhu (Female) Song Lyrics in Tamil


பெண் : ஆ… ஆஅ… ஆஅ…
ஆஆ… ஆஅ… ஆஅ… ஆஅ…

—BGM—

பெண் : நிலா காய்கிறது…
நேரம் தேய்கிறது…
யாரும் ரசிக்கவில்லையே…
இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்…

பெண் : தென்றல் போகின்றது…
சோலை சிரிக்கின்றது…
யாரும் சுகிக்கவில்லையே…
சின்ன கைகள் மட்டும் உன்னை தீண்டும்…

பெண் : காற்று வீசும் வெய்யில் காயும் காயும்…
அதில் மாற்றம் ஏதும் இல்லையே…
ஆஆ… வானும் மண்ணும் நம்மை வாழ சொல்லும்…
அந்த வாழ்த்து ஓயவில்லை என்றென்றும் வானில்…

பெண் : நிலா காய்கிறது…
நேரம் தேய்கிறது…
யாரும் ரசிக்கவில்லையே…
இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்…

குழு (பெண்கள்) : ச ம க பா…
பா ம ப மா க ரி சா ரி சா நி…
ச ம க பா பா ம ப மா…
ச ம க பா பா ம ப மா க ரி க ரி சா நி…
ச ம க பா ச த மா…

பெண் : ஆஅ… ஆஆ…

குழு (பெண்கள்) : க க ம நி நி த சா நி த ப ம…
க க ம நி நி த சா நி த ப ம…

பெண் : அதோ போகின்றது ஆசை மேகம்…
மழையை கேட்டுக்கொள்ளுங்கள்…

குழு (பெண்கள்) : சரிகரிக ககமா…

பெண் : இதோ கேட்கின்றது குயிலின் பாடல்…
இசையை கேட்டுக்கொள்ளுங்கள்…

குழு (பெண்கள்) : சரிகரிக ககமா…

பெண் : இந்த பூமியே பூவனம்…
உங்கள் பூக்களை தேடுங்கள்…
இந்த வாழ்க்கையே சீதனம்…
உந்தன் தேவையை கேளுங்கள்…

பெண் : நிலா காய்கிறது…
நேரம் தேய்கிறது…
யாரும் ரசிக்கவில்லையே…
இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்…

பெண் : தென்றல் போகின்றது…
சோலை சிரிக்கின்றது…
யாரும் சுகிக்கவில்லையே…
சின்ன கைகள் மட்டும் உன்னை தீண்டும்…


Notes : Nila Kaikiradhu (Female) Song Lyrics in Tamil. This Song from Indira (1995). Song Lyrics penned by Vairamuthu. நிலா காய்கிறது (பெண்) பாடல் வரிகள்.