பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
எம்.பி.சிவம் | டி.எம்.சௌந்தரராஜன் | டி.எம்.சௌந்தரராஜன் | முருகன் பாடல்கள் |
Muruganai Kooppittu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : முருகனை கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு…
முற்றிய வினை தீருமே…
முருகனை கூப்பிட்டு…
ஆண் : முருகனை கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு…
முற்றிய வினை தீருமே…
உடல் பற்றிய பிணி ஆறுமே…
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று…
இனிதுற மெத்த இன்பம் சேருமே…
அப்பன் முருகனை கூப்பிட்டு…
—BGM—
ஆண் : குமரனை கும்பிட்டு கொண்டாடுவோருக்கு…
குமரனை கும்பிட்டு கொண்டாடுவோருக்கு…
குறைகள் யாவும் போகுமே…
அவர் குடும்பம் தழைத்தோங்குமே…
ஆண் : குமரனை கும்பிட்டு கொண்டாடுவோருக்கு…
குறைகள் யாவும் போகுமே…
அவர் குடும்பம் தழைத்தோங்குமே…
ஆண் : சூர சமர வேலாயுதம் பக்கத்துணை கொண்டால்…
சகல பயம் நீங்கும்…
ஐயன் முருகனைக் கூப்பிட்டு…
—BGM—
ஆண் : அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால்…
முருகா… முருகா…
அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால்…
அருகில் ஓடி வருவார்…
அன்பு பெருகி அருள் புரிவார்…
அந்தக் கருணை உருவான குருபரன் என்றுமே…
கைவிடாமல் ஆளுவார்…
அப்பன் முருகனைக் கூப்பிட்டு…
—BGM—
ஆண் : கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு…
கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு…
காரியம் கைகூடுமே பகை மாறி உறவாடுமே…
—BGM—
ஆண் : கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு…
காரியம் கைகூடுமே பகை மாறி உறவாடுமே…
சிவ மைந்தன் அருளாலே மெய்யறிவு உண்டாகி…
மேன்மை உயர்வாகுமே…
ஐயன் முருகனைக் கூப்பிட்டு…
ஆண் : முருகனை கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு…
முற்றிய வினை தீருமே…
முருகனை கூப்பிட்டு…
முருகா…
Notes : Muruganai Kooppittu Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by M.P. Sivam. முருகனை கூப்பிட்டு பாடல் வரிகள்.