பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
தமிழ் நம்பி | டி.எம்.சௌந்தரராஜன் | டி.எம்.சௌந்தரராஜன் | முருகன் பாடல்கள் |
Manimudi Oraaru Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு…
பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி…
வரும் பக்தர்கள் தொகை பல நூறு கோடி…
—BGM—
ஆண் : மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு…
பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி…
வரும் பக்தர்கள் தொகை பல நூறு கோடி…
ஆண் : சிவனுக்கு ஐந்தெழுத்து செல்வனுக்கு ஆறெழுத்து…
சிவனுக்கு ஐந்தெழுத்து செல்வனுக்கு ஆறெழுத்து…
அவனுக்கு அருள் தரச் செல்லும் போது…
உன் பவனியை விளக்கிடப் பாடல் ஏது…
ஆண் : மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு…
பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி…
வரும் பக்தர்கள் தொகை பல நூறு கோடி…
—BGM—
ஆண் : கயிலையில் தாய் இருக்க…
கண் முன்னே நீ இருக்க…
கயிலையில் தாய் இருக்க…
கண் முன்னே நீ இருக்க…
மயிலுடன் உலவிடும் ஆறு வீடு…
உன் மனந்தனில் தொண்டர்க்குக் கோடி வீடு…
மனந்தனில் தொண்டர்க்குக் கோடி வீடு…
ஆண் : மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு…
பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி…
வரும் பக்தர்கள் தொகை பல நூறு கோடி…
—BGM—
ஆண் : கணபதி தலை வாசல்…
கந்தனுக்கு மலை வாசல்…
கணபதி தலை வாசல்…
கந்தனுக்கு மலை வாசல்…
துணைவியர் இருபுறம் உன்னைச் சேர…
உடன் தொண்டர்கள் பல்லாண்டு வாழ்த்துக் கூற…
தொண்டர்கள் பல்லாண்டு வாழ்த்துக் கூற…
ஆண் : மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு…
பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி…
வரும் பக்தர்கள் தொகை பல நூறு கோடி…
—BGM—
Notes : Manimudi Oraaru Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Tamil Nambi. மணிமுடி ஓராறு பாடல் வரிகள்.