kelamal-kaiyile-song-lyrics

கேளாமல் கையிலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஸ்ரீராம் பார்த்தசாரதி & சைந்தவிஏ.ஆர்.ரகுமான்அழகிய தமிழ் மகன்

Kelamal Kaiyile Song Lyrics in Tamil


பெண் : கேளாமல் கையிலே…
வந்தாயே காதலே…

BGM

பெண் : கேட்டு ரசித்த பாடல் ஒன்றை…
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட…
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை…
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட…

பெண் : என்னை உன்னை எண்ணிதானோ…
எழுதியது போலவே தோன்ற…
என்னை உன்னை எண்ணிதானோ…
எழுதியது போலவே தோன்ற…

ஆண் : கேளாமல் கையிலே…
வந்தாயே காதலே…
என் பேரை கூவிடும்…
உன் பேரும் கோகிலம்…

பெண் : கோகிலம் கோகிலம் கோகிலம்…
நெஞ்சிலே காதலின் கால் தடம்…

பெண் : கேளாமல் கையிலே…
வந்தாயே காதலே…
என் ராமன் நீ எனில்…
உன் கையில் நான் அணில்…

BGM

ஆண் : இனிமேல் இனி மேல் இந்த…
நானும் நான் இல்லை…
போய் வா போய் வா என்றே…
எனக்கே விடைகள் தந்தேன்…

பெண் : மெலிதாய் மெலிதாய் நான் இருந்தேன்…
மிக எளிதாய் எங்கும் நடந்தேன்…
இன்று உன்னை நெஞ்சில் சுமந்தேன்…
நான் நடந்தேன் நடந்ததும் விழுந்தேன்…

ஆண் : கூந்தல் என்னும் ஏணி ஏறி…
முத்தமிட ஆசைகள் உண்டு…

பெண் : நெற்றி மூக்கு உதடு என்று…
இறங்கி வர படிகளும் உண்டு…

ஆண் : கேளாமல் கையிலே…
வந்தாயே காதலே…
என் பேரை கூவிடும்…
உன் பேரும் கோகிலம்…

பெண் : பார்த்தும் பாராமலே…
போகும் மேகங்களே…
பார்த்தும் பாராமலே…
போகும் மேகங்களே…

பெண் : ஏதோ நடக்கின்றதே…
குதித்து போவதேன் நில்லுங்களேன்…
பார்த்தும் பாராமலே…
போகும் மேகங்களே…

பெண் : கண்ணை கண்ணை சிமிட்டும்…
நொடியில் உன் உருவம்…
மறையும் மறையும்…
அதனால் இமைகள் வேண்டாம் என்பேன்…

ஆண் : பார்வை ஒன்றால் உன்னை அள்ளி…
என் கண்ணின் சிறையில் அடைப்பேன்…
அதில் நிரந்தரமாய் நீ இருக்க…
இமைகள் வேண்டும் என்பேன்…

பெண் : மேற்கு திசையை நோக்கி நடந்தால்…
இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமோ…

ஆண் : தூங்கும் தேவை ஏதும் இன்றி…
கனவுகளும் கைகளில் விழுமா…

பெண் : கேளாமல் கையிலே…
வந்தாயே காதலே…
என் ராமன் நீ எனில்…
உன் கையில் நான் அணில்…

ஆண் : கோகிலம் கோகிலம் கோகிலம்…
நெஞ்சிலே காதலின் கால் தடம்…

பெண் : கோகிலம் கோகிலம் கோகிலம்…
நெஞ்சிலே காதலின் கால் தடம்…


Notes : Kelamal Kaiyile Song Lyrics in Tamil. This Song from Azhagiya Tamil Magan (2007). Song Lyrics penned by Thamarai. கேளாமல் கையிலே பாடல் வரிகள்.