பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | கே.எஸ். சித்ரா & கே. ஜே. யேசுதாஸ் | இளையராஜா | மனதில் உறுதி வேண்டும் |
Kanna Varuvaayaa Song Lyrics in Tamil
—BGM—
பெண் : கண்ணா வருவாயா கண்ணா வருவாயா…
மீரா கேட்கிறாள்…
மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்…
மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து…
பெண் : கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்…
குழு : கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…
—BGM—
ஆண் : ஆ… நீல வானும் நிலவும் நீரும்…
நீயென காண்கிறேன்…
பெண் : உண்ணும்போதும் உறங்கும்போதும்…
உன் முகம் பார்க்கிறேன்…
ஆண் : கண்ணன் வந்து நீந்திடாது…
காய்ந்து போகும் பாற்கடல்…
பெண் : உன்னை இங்கு ஆடை போல…
ஏற்றுக்கொள்ளும் பூவுடல்…
ஆண் : வேறில்லையே பிருந்தாவனம்…
பெண் : விடிந்தாலும் நம் ஆலிங்கனம்…
ஆண் : சொர்க்கம் இதுவோ…
ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்…
மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து…
ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்…
—BGM—
ஆண் : மல்லிகைப் பஞ்சணை இட்டு…
மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா…
மல்லிகைப் பஞ்சணை இட்டு…
மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா…
பெண் : மன்மத மந்திரம் சொல்லி…
வந்தனள் சுந்தரவள்ளி ராகம் சேர்க்கவா…
மன்மத மந்திரம் சொல்லி…
வந்தனள் சுந்தரவள்ளி ராகம் சேர்க்கவா…
ஆண் : கொடி இடை ஒடிவதன் முன்னம்…
மடியினில் எடுத்திடவா…
பெண் : மலர்விழி மயங்கிடும் வண்ணம்…
மதுரசம் கொடுத்திடவா…
ஆண் : இரவு முழுதும் உறவு மழையிலே…
பெண் : இருவர் உடலும் நனையும் பொழுதிலே…
ஆண் : ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே…
பெண் : கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்…
ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்…
பெண் : மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து…
ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்…
குழு : கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…
Notes : Kanna Varuvaayaa Song Lyrics in Tamil. This Song from Manathil Uruthi Vendum (1987). Song Lyrics penned by Vaali. கண்ணா வருவாயா பாடல் வரிகள்.