ரெட்டக்கிளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜா & கே.எஸ். சித்ராஇளையராஜாகிராமத்து மின்னல்

Rettai Kili Song Lyrics in Tamil


ஆண் : ஏ… விடியாத பொழுதாச்சு…
அடியே விழி கூட சுமையாச்சு…
கண்ணீரு கடலாச்சு… உன் எண்ணம் படகாச்சு…
நீ உள்ள மனம்தானே எப்போதும் சிறையாச்சு…

BGM

பெண் : ரெட்டக்கிளி சுத்தி வந்த தோப்புக்குள்ள…
ஒத்தையில இந்தக்கிளி சுத்துதம்மா…

பெண் : தனியா இது இருந்தா மனம் உறங்காது…
துணையே உன்னை இழந்தா இங்கு வாழ்வேது…

பெண் : என் ஆசை ராசா அன்பென்ன லேசா…
என் ஆசை ராசா இவ அன்பென்ன லேசா…

பெண் : ரெட்டக்கிளி சுத்தி வந்த தோப்புக்குள்ள…
ஒத்தையில இந்தக்கிளி சுத்துதம்மா…

BGM

பெண் : காத்தாலே ஆடி வரும் சிறு ஓலைக் காத்தாடி…
கயிறு அறுந்து போனதென்ன ராசா உன் கையாலே…
காத்தாலே ஆடி வரும் சிறு ஓலைக் காத்தாடி…
கயிறு அறுந்து போனதென்ன ராசா உன் கையாலே…

ஆண் : ஏ… தேனே ஒன்னாலதானே புண்ணாகித்தான்…
போனேன் இப்போது நானே…

ஆண் : பூவான நெஞ்சம் இது வீணாச்சு உன்னால…
பூ மாலை வெயிலில சருகாச்சு தன்னால…

ஆண் : என் வீட்டு ரோசா அன்பென்ன லேசா…
என் வீட்டு ரோசா என் அன்பென்ன லேசா…

பெண் : ரெட்டக்கிளி சுத்தி வந்த தோப்புக்குள்ள…

—BGM—

ஆண் : கண்ணீரு வந்து வந்து காவேரி போலாச்சு…
கண்ணான பொண் மனசு கல்லாகிப் போயாச்சு…
கண்ணீரு வந்து வந்து காவேரி போலாச்சு…
கண்ணான பொண் மனசு கல்லாகிப் போயாச்சு…

பெண் : பூங்காத்து இப்ப என்னப் பாத்து வதைக்கிறது…
என்ன என்ன கூத்து தண்ணி கொஞ்சம் ஊத்து…

ஆண் : போராடும் நெஞ்சுக்குள்ளே ஏதேதோ உண்டாச்சு…
நீரோடும் கங்கை நதி ஏன் இப்போ ரெண்டாச்சு…

பெண் : என் ஆசை ராசா அன்பென்ன லேசா…
என் ஆசை ராசா இவ அன்பென்ன லேசா…

பெண் : ரெட்டக்கிளி சுத்தி வந்த தோப்புக்குள்ள…
ஒத்தையில இந்தக்கிளி சுத்துதம்மா…

பெண் : தனியா இது இருந்தா மனம் உறங்காது…
துணையே உன்னை இழந்தா இங்கு வாழ்வேது…

பெண் : என் ஆசை ராசா அன்பென்ன லேசா…
என் ஆசை ராசா இவ அன்பென்ன லேசா…


Notes : Rettai Kili Song Lyrics in Tamil. This Song from Gramatthu Minnal (1987). Song Lyrics penned by Gangai Amaran. ரெட்டக்கிளி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top