காலமெனும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
காளி சித்ததாசன்L.R. ஈஸ்வரிசோமு & கஜாஅம்மன் பாடல்கள்

Kalamennum Theril Song Lyrics in Tamil


பெண் : காலமெல்லாம் காத்திருந்தாலும்…
காணக் கிடைக்காதவள் கருமாரி…
கனிந்துருகி உள்ளம் நொந்தவர்க்கு…
கணத்திலே காட்சி தந்திடுவாள் தேவி கருமாரி…

BGM

பெண் : காலமெனும் தேரிலேறி கருமாரி நீ வருகையிலே…
காணக் கண் கூசுதம்மா கோடி ஜோதி தெரியுதம்மா…

BGM-

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பூரண நிலவினிலே பொன்மேனி ஒளி விடவே…
புற்றினிலே தோன்றுவாள் எங்கள் கருமாரியம்மா…
புண்பட்ட மனதிலெல்லாம் பூரணமாய் நிறைந்திடவே…
பொங்கிடும் செல்வமெல்லாம் தந்திடுவாள் கருமாரி…

பெண் : காலமெனும் தேரிலேறி கருமாரி நீ வருகையிலே…
காணக் கண் கூசுதம்மா கோடி ஜோதி தெரியுதம்மா…

BGM

பெண் : கருநாகமாய் வந்திடுவாள் கைகுவித்த பேருக்கு…
காட்சியும் கொடுத்திடுவாள் எங்கள் கருமாரியம்மா…
திரிசூலம் ஏந்திடுவாள் திருநீறு அணிந்திடுவாள்…
திரிசூலம் ஏந்திடுவாள் திருநீறு அணிந்திடுவாள்…
தீராத நோயெல்லாம் தீர்த்திடுவாள் கருமாரி…

பெண் : சரவிளக்கு சுடர்விடவே…
சாற்றிய மாலையெல்லாம் உருமறைக்க…
கற்பூரம் காட்டியே கை தொழுதால்…
கண் திறந்து பார்த்திடுவாள் எங்கள் கருமாரி…

BGM

பெண் : கிணிமணி கிலுகிலுக்க…
கால் சலங்கை சலசலக்க…

BGM

பெண் : உடலெங்கும் சிலுசிலுக்க…
உன் சிரிப்பொலி கேட்குதம்மா…
எங்கள் சிந்தையும் குளிருதம்மா…
எங்கள் சிந்தையும் குளிருதம்மா…

BGM

பெண் : கருணை உள்ளம் கொண்டவளே எங்கள் கருமாரி…
கண்ணாயிரம் கொண்டவளே எங்கள் கருமாரி…
பொன்னாபரணம் பூண்டவளே எங்கள் கருமாரி…
பண்ணாயிரம் பாட வந்தோம் எங்கள் கருமாரி…
பண்ணாயிரம் பாட வந்தோம் எங்கள் கருமாரி…

பெண் : காலமெனும் தேரிலேறி கருமாரி நீ வருகையிலே…
காணக் கண் கூசுதம்மா கோடி ஜோதி தெரியுதம்மா…
கோடி ஜோதி தெரியுதம்மா…
கோடி ஜோதி தெரியுதம்மா…


Notes : Kalamennum Theril Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Kaali Siddhadasan. காலமெனும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading