பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கலை குமார் | ஹரிஹரன் & சுஜாதா மோகன் | எஸ். ஏ. ராஜ்குமார் | பாட்டாளி |
Kadhal Azhaga Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : காதல் அழகா காதல் பெண் அழகா…
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்…
—BGM—
பெண் : கண்கள் அழகா கன்னங்கள் அழகா…
கவிதை எழுதிட நான் ஏங்கினேன்…
ஆண் : என் காதல் கல்வெட்டில்…
நம் பேர் செதுக்குவேன்…
பெண் : என் நெஞ்சின் வெல்வெட்டில்…
உன்னை பதுக்குவேன்…
ஆண் : அந்த வெண்ணிலாவிலே உந்தன் படத்தயே…
ஒட்டி விட்டு வருவேன்…
பெண் : காதல் அழகா காதல் பெண் அழகா…
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்…
—BGM—
ஆண் : லட்சம் பூக்கள் ஒட்டி வைத்த சிற்பம்…
பக்கம் வந்தும் கண்ணில் என்ன வெட்கம்…
என்னை தீண்டாயோ…
நீ என்னை தீண்டாயோ…
—BGM—
பெண் : ஊசி மல்லி பார்வை என்னை கிள்ளும்…
உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று அல்லும்…
மின்னல் தோன்றாதோ…
வண்ண மின்னல் தோன்றாதோ…
ஆண் : கையோடு கை கோர்த்தால்…
அச்சம்தான் விலகாதோ…
பெண் : ஓயாமல் நீ பார்த்தால்…
மச்சம்தான் நகராதோ…
ஆண் : உன் கண்ணின் மீன்களை பார்த்து விட்டதால்…
சைவ வாழ்க்கை வாழ்வேன்…
பெண் : காதல் அழகா காதல் பெண் அழகா…
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்…
ஆண் : ஆஅ… கண்கள் அழகா கன்னங்கள் அழகா…
கவிதை எழுதிட நான் ஏங்கினேன்…
—BGM—
பெண் : என்னை உன்னில் அடகு வைக்க வருவேன்…
சின்ன சின்ன முத்த வட்டி தருவேன்…
காதல் கடன்தானே…
இது காதல் கடன்தானே…
—BGM—
ஆண் : இச்சு இச்சு சத்தம் என்னைத்தானே…
கிச்சு கிச்சு மூட்ட சொக்கி போவேன்…
காதல் கடல்தானே…
இது காதல் கடல்தானே…
பெண் : உன் ஆடை நானாக…
கெஞ்சிதான் கேட்பேனே…
ஆண் : உதட்டாலே மறுத்தாலும்…
உள்ளார ரசிப்பேனே…
பெண் : அட காதல் பாடம்தான் முடிந்து போனதே…
பரீட்சை எழுதலாமா…
ஆண் : ஏ… காதல் அழகா காதல் பெண் அழகா…
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்…
பெண் : கண்கள் அழகா கன்னங்கள் அழகா…
கவிதை எழுதிட நான் ஏங்கினேன்…
ஆண் : என் காதல் கல்வெட்டில்…
நம் பேர் செதுக்குவேன்…
பெண் : என் நெஞ்சின் வெல்வெட்டில்…
உன்னை பதுக்குவேன்…
ஆண் : அந்த வெண்ணிலவிலே உந்தன் படத்தயே…
ஒட்டி விட்டு வருவேன்…
—BGM—
Notes : Kadhal Azhaga Song Lyrics in Tamil. This Song from Paattali (1999). Song Lyrics penned by Kalaikkumar. காதல் அழகா பாடல் வரிகள்.