பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
டி. ராஜேந்தர் | டி.எம்.சௌந்தரராஜன் | டி. ராஜேந்தர் | ஒரு தலை ராகம் |
En Kathai Mudiyum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : என் கதை முடியும் நேரம் இது…
என்பதை சொல்லும் ராகம் இது…
—BGM—
ஆண் : என் கதை முடியும் நேரம் இது…
என்பதை சொல்லும் ராகம் இது…
ஆண் : அன்பினில் வாழும் உள்ளம் இது…
அணையே இல்லா வெள்ளம் இது…
அன்பினில் வாழும் உள்ளம் இது…
அணையே இல்லா வெள்ளம் இது…
—BGM—
ஆண் : இதயத்தில் ரகசியம் இருக்கின்றது…
அது இதழினில் பிறந்திட தவிக்கின்றது…
—BGM—
ஆண் : உலகத்தை என் மனம் வெறுக்கின்றது…
அதில் உறவென்று அவளை நினைக்கின்றது…
உலகத்தை என் மனம் வெறுக்கின்றது…
அதில் உறவென்று அவளை நினைக்கின்றது…
—BGM—
ஆண் : பேதமை நிறைந்தது என் வாழ்வு…
அதில் பேதையும் வரைந்தது சில கோடு…
—BGM—
ஆண் : பித்தென்று சிரிப்பது உள் நினைவு…
அதன் வித்தொன்று போட்டது அவள் உறவு…
பித்தென்று சிரிப்பது உள் நினைவு…
அதன் வித்தொன்று போட்டது அவள் உறவு…
—BGM—
ஆண் : உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே…
அதில் பிரிவுகள் என்பது இருக்காதே…
—BGM—
ஆண் : ஒளியாய் தெரிவது வெறும் கனவு…
அதன் உருவாய் எரிவது என் மனது…
ஒளியாய் தெரிவது வெறும் கனவு…
அதன் உருவாய் எரிவது என் மனது…
—BGM—
ஆண் : ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள்…
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்…
—BGM—
ஆண் : துயில் நினைவினை மறக்கும் விழி தந்தாள்…
துயில் நினைவினை மறக்கும் விழி தந்தாள்…
துயர் கடலினை படைக்கும் நீர் தந்தாள்…
ஆண் : ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள்…
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்…
Notes : En Kathai Mudiyum Song Lyrics in Tamil. This Song from Oru Thalai Ragam (1980). Song Lyrics penned by T. Rajendar. என் கதை முடியும் பாடல் வரிகள்.