Dolu Dolu Than Song Lyrics in Tamil

டோலு டோலுதான் அடிக்கிறான்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ரஞ்சித் & சுசித்ராமணி சர்மாபோக்கிரி

Dolu Dolu Than Song Lyrics in Tamil


BGM

பெண் : டோலு டோலுதான் அடிக்கிறான்…
இரு தோளும் தோளும்தான் உரசுறான்…
மேலும் கீழுமாய் இழுக்குறான்…
முப்பாலும் கலந்து என்ன கலக்குறான்…

பெண் : புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்…
மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்…
முன்னும் பின்னும்தான் முழுமையா…
நான் சொர்க்க நரகத்தின் கலவையா…

பெண் : பெண் இடையும் இறைவனும் ஒன்றுதான்…
ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை…

ஆண் : அய்ல அய்ல அடி ஆரியமாலா…
அகன்ற விழிகள் என்ன கூரிய வேலா…
ஒய்லா ஒய்லா நீ சில்மிஷ தேளா…
சிரிக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா…

பெண் : கோலா கோலா கோலா…
கோலா கோலா கோலா…

BGM

பெண் : சுட சுட மழையை…
குளு குளு வெயிலை…
முதல் முறை உலகத்தில் கண்டேனே…

பெண் : வெள்ளை நிற இரவை…
கரு நிற பகலை…
முதல் முறை பார்த்தேனே…

ஆண் : இடிகளை உரசி புயல்களை அலசி…
நடந்தவன் நான்தானே…
இது என்ன மாயம் மலர் ஒன்றை பறிக்க…
முதல் முறை பயந்தேனே…

பெண் : நீ ஞனன நமன…
ஆண் : யா ஆ…
பெண் : நான் யரல வளல…
ஆண் : யா ஆ…

பெண் : நீ உடைந்து உருக…
ஆண் : யா ஆ…
பெண் : நான் உணர்ந்து பருக…

BGM

பெண் : வலப்பக்கம் சுழலும் பூமிப்பந்து திரும்பி…
இடப்பக்கம் சுழலுது உன்னாலே…
கைப்பிடி அளவு இருக்கின்ற இதயம்…
விரிந்தது குடை போலே…

ஆண் : இருபது வருஷம் பறவையைப் போலே…
சுற்றிச் சுற்றி திரிந்தேனே…
இரண்டொரு நொடியில் உனக்குள்ளே விழுந்து…
முழுவதும் தொலைந்தேனே…

பெண் : நீ எனக்குள் நுழைய…
ஆண் : யா ஆ…
பெண் : நான் உனக்குள் வளைய…
ஆண் : யா ஆ…

பெண் : நாம் நமக்குள் கரைய…
ஆண் : யா ஆ…
பெண் : நம் உலகம் உறைய…

பெண் : புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்…
மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்…
முன்னும் பின்னும்தான் முழுமையா…
நான் சொர்க்க நரகத்தின் கலவையா…

பெண் : பெண் இடையும் இறைவனும் ஒன்று தான்…
ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை…

ஆண் : அய்ல அய்ல அடி ஆரியமாலா…
அகன்ற விழிகள் என்ன கூரிய வேலா…
ஒய்லா ஒய்லா நீ சில்மிஷ தேளா…
சிரிக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா…

பெண் : கோலா கோலா கோலா…
கோலா கோலா கோலா…


Notes : Dolu Dolu Than Song Lyrics in Tamil. This Song from Pokkiri (2007). Song Lyrics penned by Pa. Vijay. டோலு டோலுதான் அடிக்கிறான் பாடல் வரிகள்.