பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | பிரதீப் குமார் | டி. இமான் | கடைக்குட்டி சிங்கம் |
Sengathire Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே…
சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே…
செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே…
சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே…
ஆண் : உயிர் வேதனை தரும் வார்த்தையை…
உறவே நீ பேசுவதோ…
குயில் வீட்டையே குடை சாய்த்திட…
புயல் காற்று வீசுவதோ…
ஆண் : விதியின் ஆட்டம் ஓயாதே…
எதுவும் விளையாட்டே வாடாதே…
ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே…
சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே…
—BGM—
ஆண் : அன்னை மடி மீது தூங்கையிலே…
தொல்லைகளும் ஏதடா… ஆ…
தந்தை நம்மை தாங்கும் வேளையிலே…
கைகளிலே வானடா…
ஆண் : தெரு மண்ணோடு நாம் நடந்தாலுமே…
அழுக்கில்லாமலே இருந்தோமடா…
நிலை கண்ணாடியில் சிறு கீறல் போல்…
பல துண்டாயின்று உடைந்தோமடா…
ஆண் : வயதாகும் போது நாமே…
வழி மாறி போகிறோமே…
ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே…
சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே…
—BGM—
ஆண் : மொட்டு விடும் பூவை காட்டுவது…
எப்பொழுதும் வாசமே…
உள்ளவரை வாழ தேவை எது…
உண்மையிலே பாசமே…
ஆண் : எதை சொன்னாலுமே தவறாகவே…
பொருள் கொள்வோரிடம் நலம் ஏதடா…
உறவில்லாமலே ஒரு ஜீவனும்…
உயிர் வாழாதென உணர்வோமடா…
ஆண் : வயலோடு வாழ நாமே…
வரப்பாக மாறுவோமே…
ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே…
சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே…
Notes : Sengathire Song Lyrics in Tamil. This Song from Kadaikutty Singam (2018). Song Lyrics penned by Yugabharathi. செங்கதிரே பாடல் வரிகள்.