ஆண் : மகள்கள் கேட்பவற்றை முடிந்த வரை… முடியாது என்று சொல்லி விட கூடாது என்கிற… வாழ்க்கையைதான் அப்பாக்கள்… வாழ ஆசை படுகிறார்கள்…
—BGM—
ஆண் : யாருக்கும் தோழன் இல்லை தோழன் இல்லை… வாழ்க்கை தோழன் இல்லையே… கேட்ட போது கேட்கும் யாவும்… வாரி வாரி தந்திட…
ஆண் : கடந்து வருவேன் கண்மணி… பனியில் உன் நனைந்த உருவம் பார்க்கிறேன்… தொடர்ந்து துரத்தும் துயரங்கள்… விரட்டுதே வேட்டையாடி கூறு போட்டு போகுதே…
ஆண் : செல்ல பொம்மை வெல்லக் கட்டி… என்னை காக்கும் தெய்வமே… தொட்டு வீசும் பட்டு தென்றல்… நெஞ்சை முட்டும் மேகமே…
ஆண் : சொன்ன தேதி சொன்ன நேரம்… உன்னை வந்து சேருவேன்… இல்லை என்று ஆகும் போது… என்னை நானே கொல்லுவேன்…
—BGM—
Notes : Yaarukkum Thozhan Illai Song Lyrics in Tamil. This Song from Thangameenkal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. யாருக்கும் தோழன்பாடல் வரிகள்.
ஆண் : அப்பாக்களை பிரியா மகள்கள்… அதிர்ஷ்டசாலிகள்… மகள்களை பிரியா அப்பாக்கள்… பாக்கியவான்கள்… ஆனால் அப்படி எல்லாம் தந்து விட… வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை…
—BGM—
ஆண் : நதி வெள்ளம் மேலே… என் மீனே மீனே… நீ நீந்திய பொன் நினைவுகள்… நெஞ்சில் நிழலாடும்…
ஆண் : முன் அந்தி நிலவில்… என் மானே மானே… நீ ஓடிய மென் சுவடுகள்… மீண்டும் உனைக் கேட்கும்…
ஆண் : அடி என் கண்ணின் இரு கருவிழிகள்… உன் முகத்தை தேடுதடி… கண்ணீர் துளிகள் காட்சியை மறைக்குதடி…
ஆண் : என் காட்டில் ஒரு மழை வந்ததும்… மகரந்த ஈரங்கள் காயும் முன்னே… இடி மின்னல் விழுந்து காடே எறிந்ததடி…
ஆண் : நதி வெள்ளம் மேலே… என் மீனே மீனே… நீ நீந்திய பொன் நினைவுகள்… நெஞ்சில் நிழலாடும்…
ஆண் : முன் அந்தி நிலவில்… என் மானே மானே… நீ ஓடிய மென் சுவடுகள்… மீண்டும் உனைக் கேட்கும்…
—BGM—
ஆண் : அலைந்திடும் மேகம் அதைப் போல… இந்த வாழ்க்கையே… காற்றின் வழியில் போகின்றோம்…
ஆண் : கலைந்திடும் கோலம் என்ற போதிலும்… அதிகாலையில் வாசலில் வண்ணம் விதைக்கின்றோம்…
ஆண் : உயிரே உன்னை பிரிந்தேன்… உடனே நானும் இறந்தேன்… உடல் தான் அங்கு வாழும்… நீதானே எந்தன் உயிரே…
ஆண் : நதி வெள்ளம் மேலே… என் மீனே மீனே… நீ நீந்திய பொன் நினைவுகள்… நெஞ்சில் நிழலாடும்…
ஆண் : முன் அந்தி நிலவில்… என் மானே மானே… நீ ஓடிய மென் சுவடுகள்… மீண்டும் உனைக் கேட்கும்…
—BGM—
ஆண் : மலர் ஒன்று விழுந்தால்… அதை ஏந்த பலர் ஓடுவார்… இலைகள் விழுந்தால் சருகாகும்…
ஆண் : வரியவன் வாழ்க்கை… இலை போல என்ற போதிலும்… சருகுகள் ஒரு நாள் உரமாகும்…
ஆண் : உயிரே உன்னை பிரிந்தேன்… உடனே நானும் இறந்தேன்… உடல்தான் அங்கு வாழும்… நீதானே எந்தன் உயிரே…
ஆண் : நதி வெள்ளம் மேலே… என் மீனே மீனே… நீ நீந்திய பொன் நினைவுகள்… நெஞ்சில் நிழலாடும்…
ஆண் : முன் அந்தி நிலவில்… என் மானே மானே… நீ ஓடிய மென் சுவடுகள்… மீண்டும் உனைக் கேட்கும்…
—BGM—
Notes : Nathi Vellam Song Lyrics in Tamil. This Song from Thangameenkal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. நதி வெள்ளம்பாடல் வரிகள்.
ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய்… அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்… அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்… அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்…
ஆண் : இரு நெஞ்சம் இணைந்து பேசிட… உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை… சிறு புல்லில் உறங்கும் பனியில்… தெரியும் மழையின் அழகோ தாங்கவில்லை…
ஆண் : உந்தன் கைகள் பிடித்து போகும் வழி… அது போதவில்லை இன்னும் வேண்டுமடி… இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே… எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி…
ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய்… அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்… அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்… அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்…
—BGM—
ஆண் : தூரத்து மரங்கள் பார்க்குதடி… தேவதை இவளா கேக்குதடி… தன்னிலை மறந்தா பூக்குதடி… காற்றினில் வாசம் தூக்குதடி…
ஆண் : அடி கோவில் எதற்கு… தெய்வங்கள் எதற்கு… உனது புன்னகை போதுமடி… இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே… எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி…
ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய்… அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…
—BGM—
ஆண் : உன் முகம் பார்த்தால் தோணுதடி… வானத்து நிலவு சின்னதடி… மேகத்தில் மறைந்தே பார்க்குதடி… உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி… அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து… வீட்டுக்கு அனுப்பு நல்லபடி…
ஆண் : இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே… எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி…
ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய்… அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்… ஆனந்த யாழை மீட்டுகிறாய்… அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…
Notes : Aanandha Yaazhai Song Lyrics in Tamil. This Song from Thangameenkal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. ஆனந்த யாழைபாடல் வரிகள்.