Category Archives: தங்கமீன்கள்

தங்கமீன்கள்

யாருக்கும் தோழன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்அல்போன்ஸ் ஜோசப்யுவன் ஷங்கர் ராஜாதங்கமீன்கள்

Yaarukkum Thozhan Illai Song Lyrics in Tamil


ஆண் : மகள்கள் கேட்பவற்றை முடிந்த வரை…
முடியாது என்று சொல்லி விட கூடாது என்கிற…
வாழ்க்கையைதான் அப்பாக்கள்…
வாழ ஆசை படுகிறார்கள்…

BGM

ஆண் : யாருக்கும் தோழன் இல்லை தோழன் இல்லை…
வாழ்க்கை தோழன் இல்லையே…
கேட்ட போது கேட்கும் யாவும்…
வாரி வாரி தந்திட…

ஆண் : கடந்து வருவேன் கண்மணி…
பனியில் உன் நனைந்த உருவம் பார்க்கிறேன்…
தொடர்ந்து துரத்தும் துயரங்கள்…
விரட்டுதே வேட்டையாடி கூறு போட்டு போகுதே…

ஆண் : செல்ல பொம்மை வெல்லக் கட்டி…
என்னை காக்கும் தெய்வமே…
தொட்டு வீசும் பட்டு தென்றல்…
நெஞ்சை முட்டும் மேகமே…

ஆண் : சொன்ன தேதி சொன்ன நேரம்…
உன்னை வந்து சேருவேன்…
இல்லை என்று ஆகும் போது…
என்னை நானே கொல்லுவேன்…

BGM


Notes : Yaarukkum Thozhan Illai Song Lyrics in Tamil. This Song from Thangameenkal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. யாருக்கும் தோழன் பாடல் வரிகள்.


நதி வெள்ளம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ராகுல் நம்பியார்யுவன் ஷங்கர் ராஜாதங்கமீன்கள்

Nathi Vellam Song Lyrics in Tamil


ஆண் : அப்பாக்களை பிரியா மகள்கள்…
அதிர்ஷ்டசாலிகள்…
மகள்களை பிரியா அப்பாக்கள்…
பாக்கியவான்கள்…
ஆனால் அப்படி எல்லாம் தந்து விட…
வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை…

BGM

ஆண் : நதி வெள்ளம் மேலே…
என் மீனே மீனே…
நீ நீந்திய பொன் நினைவுகள்…
நெஞ்சில் நிழலாடும்…

ஆண் : முன் அந்தி நிலவில்…
என் மானே மானே…
நீ ஓடிய மென் சுவடுகள்…
மீண்டும் உனைக் கேட்கும்…

ஆண் : அடி என் கண்ணின் இரு கருவிழிகள்…
உன் முகத்தை தேடுதடி…
கண்ணீர் துளிகள் காட்சியை மறைக்குதடி…

ஆண் : என் காட்டில் ஒரு மழை வந்ததும்…
மகரந்த ஈரங்கள் காயும் முன்னே…
இடி மின்னல் விழுந்து காடே எறிந்ததடி…

ஆண் : நதி வெள்ளம் மேலே…
என் மீனே மீனே…
நீ நீந்திய பொன் நினைவுகள்…
நெஞ்சில் நிழலாடும்…

ஆண் : முன் அந்தி நிலவில்…
என் மானே மானே…
நீ ஓடிய மென் சுவடுகள்…
மீண்டும் உனைக் கேட்கும்…

BGM

ஆண் : அலைந்திடும் மேகம் அதைப் போல…
இந்த வாழ்க்கையே…
காற்றின் வழியில் போகின்றோம்…

ஆண் : கலைந்திடும் கோலம் என்ற போதிலும்…
அதிகாலையில் வாசலில் வண்ணம் விதைக்கின்றோம்…

ஆண் : உயிரே உன்னை பிரிந்தேன்…
உடனே நானும் இறந்தேன்…
உடல் தான் அங்கு வாழும்…
நீதானே எந்தன் உயிரே…

ஆண் : நதி வெள்ளம் மேலே…
என் மீனே மீனே…
நீ நீந்திய பொன் நினைவுகள்…
நெஞ்சில் நிழலாடும்…

ஆண் : முன் அந்தி நிலவில்…
என் மானே மானே…
நீ ஓடிய மென் சுவடுகள்…
மீண்டும் உனைக் கேட்கும்…

BGM

ஆண் : மலர் ஒன்று விழுந்தால்…
அதை ஏந்த பலர் ஓடுவார்…
இலைகள் விழுந்தால் சருகாகும்…

ஆண் : வரியவன் வாழ்க்கை…
இலை போல என்ற போதிலும்…
சருகுகள் ஒரு நாள் உரமாகும்…

ஆண் : உயிரே உன்னை பிரிந்தேன்…
உடனே நானும் இறந்தேன்…
உடல்தான் அங்கு வாழும்…
நீதானே எந்தன் உயிரே…

ஆண் : நதி வெள்ளம் மேலே…
என் மீனே மீனே…
நீ நீந்திய பொன் நினைவுகள்…
நெஞ்சில் நிழலாடும்…

ஆண் : முன் அந்தி நிலவில்…
என் மானே மானே…
நீ ஓடிய மென் சுவடுகள்…
மீண்டும் உனைக் கேட்கும்…

BGM


Notes : Nathi Vellam Song Lyrics in Tamil. This Song from Thangameenkal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. நதி வெள்ளம் பாடல் வரிகள்.


ப்ர்ஸ்ட் லாஸ்ட்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பேபி சாதனா & பேபி சஞ்சனாயுவன் ஷங்கர் ராஜாதங்கமீன்கள்

First Last Song Lyrics in Tamil


ஆண் : அப்பாக்களும் பிள்ளைகளும்…
போகமாட்டேன் என்று…
அடம் பிடிக்கிற ஒரே இடம்…
பள்ளிக்கூடம் மட்டும்தான்…

BGM

பெண் : ஓ ஓஹோ ஓயே…
ஓ ஓஹோ ஓயே…

பெண் : ப்ர்ஸ்ட் லாஸ்ட் பாஸ் பெயில்…
ஹோம்வொர்க் எக்ஸாம் கொஸ்டீன் பேப்பர்…
யாரு கண்டு பிடிச்சா…

BGM

பெண் : மக்கு பிளாஸ்திரி ஸ்டுபிட் இடியட்…
ஸ்டாண்ட் அப் ஆன் தி பெஞ்ச் எல்லாம்…
யாரு கண்டு பிடிச்சா…

BGM

பெண் : மன்டே டியூஸ்டே வெனஸ்டே தர்ஸ்டே…
ஃப்ரைடே வரைக்கும்…
ஸ்கூல் வைக்க யாரு கண்டு பிடிச்சா…

குழு : ஸ்கூலு போகதான் புடிக்கல…
எக்ஸாம் எழுதவும் புடிக்கல…
எந்த பாடமும் நா படிக்கல…
நா முட்டி போட போறேன்…

குழு : நைட் முழுவதும் படிக்கிறேன்…
நா கிளாஸ் வந்ததும் மறக்கிறேன்…
ரைட் ராங் எது முழிக்கிறேன்…
நா பெயில் ஆக போறேன்…

பெண் : ஓஹே ஹோயே வி வான்ட் டு ப்ளை…
ஓஹே ஹோயே வேர் இஸ் தி ஸ்கை…

குழு : ஓஹே ஹோயே வி வான்ட் டு ப்ளை…
ஓஹே ஹோயே வேர் இஸ் தி ஸ்கை…

BGM

பெண் : சயின்ஸ் மேக்ஸ் சோசியல் சயின்ஸ்
சப்ஜெக்ட் எல்லாம் இங்கிலீஷ்ல படிக்க…
யாரு கண்டு புடிச்சா ஓ காட்…
யாரு கண்டு பிடிச்சா…

பெண் : தமிழ்ல பேசும் பசங்கள பாத்தா…
தலையில கொட்டி பைன போட…
யாரு கண்டு பிடிச்சா ஓ காட்…
யாரு கண்டு பிடிச்சா…

குழு : கேம்ஸ் ஆடவும் டைம் இல்ல…
கார்டூன் பாக்கவும் டைம் இல்ல…
எக்ஸாம் நடக்குற டைமுல…
நா என்ன பண்ண போறேன்…

குழு : பீஸ் கட்டிதான் படிக்கிறேன்…
நா பியூஸ் ஆகிதான் நிக்குறேன்…
வேஸ்ட் பேப்பர கொஸ்டீனா…
நா தூக்கி போட போறேன்…

பெண் : ஓஹே ஹோயே வி வான்ட் டு ப்ளை…
ஓஹே ஹோயே வேர் இஸ் தி ஸ்கை…

குழு : ஓஹே ஹோயே வி வான்ட் டு ப்ளை…
ஓஹே ஹோயே வேர் இஸ் தி ஸ்கை…

—BGM—

பெண் : பட்டர்ப்ளைய கைத்துல கட்டி…
ப்ரீடம் பத்தி பாடம் நடத்த…
யாரு கண்டு பிடிச்சா ஓ காட்…
யாரு கண்டு பிடிச்சா…

பெண் : செங்கல் மேல செங்கல் அடுக்கி…
ஸ்டுடென்ட்ஸ் சைடுல பொங்கல் வைக்க…
யாரு கண்டு பிடிச்சாஓ காட்…
யாரு கண்டு பிடிச்சா…

குழு : பாட்டி கதையும்தான் கேக்கல…
பிரண்ட் கூடையும் பேசல…
நா பெண்டு கைன்டு போறேன்…

குழு : இந்த ஸ்கூலயும் பிடிக்கல…
எந்த ஸ்கூலயும் பிடிக்கல…
விட்டு விடுங்கடா படிக்கல…
நா பெயில் ஆக போறேன்…

பெண் : ஓஹே ஹோயே வி வான்ட் டு ப்ளை…
ஓஹே ஹோயே வேர் இஸ் தி ஸ்கை…

குழு : ஓஹே ஹோயே வி வான்ட் டு ப்ளை…
ஓஹே ஹோயே வேர் இஸ் தி ஸ்கை…

BGM


Notes : First Last Song Lyrics in Tamil. This Song from Thangameenkal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. ப்ர்ஸ்ட் லாஸ்ட் பாடல் வரிகள்.


aanandha-yaazhai-song-lyrics

ஆனந்த யாழை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஸ்ரீராம் பார்த்தசாரதியுவன் ஷங்கர் ராஜாதங்கமீன்கள்

Aanandha Yaazhai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய்…
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்…
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்…

ஆண் : இரு நெஞ்சம் இணைந்து பேசிட…
உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை…
சிறு புல்லில் உறங்கும் பனியில்…
தெரியும் மழையின் அழகோ தாங்கவில்லை…

ஆண் : உந்தன் கைகள் பிடித்து போகும் வழி…
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி…
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே…
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி…

ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய்…
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்…
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்…

BGM

ஆண் : தூரத்து மரங்கள் பார்க்குதடி…
தேவதை இவளா கேக்குதடி…
தன்னிலை மறந்தா பூக்குதடி…
காற்றினில் வாசம் தூக்குதடி…

ஆண் : அடி கோவில் எதற்கு…
தெய்வங்கள் எதற்கு…
உனது புன்னகை போதுமடி…
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே…
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி…

ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய்…
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…

BGM

ஆண் : உன் முகம் பார்த்தால் தோணுதடி…
வானத்து நிலவு சின்னதடி…
மேகத்தில் மறைந்தே பார்க்குதடி…
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி…
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து…
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி…

ஆண் : இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே…
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி…

ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய்…
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…
ஆனந்த யாழை மீட்டுகிறாய்…
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…


Notes : Aanandha Yaazhai Song Lyrics in Tamil. This Song from Thangameenkal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. ஆனந்த யாழை பாடல் வரிகள்.