Category Archives: ராமன் தேடிய சீதை

என்ன புள்ள செஞ்ச

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஜெயந்தாவித்யாசாகர்வித்யாசாகர்ராமன் தேடிய சீதை

Enne Pulla Song Lyrics in Tamil


ஆண் : என்ன புள்ள செஞ்ச நீ… ஹோய்…
பாவி பய நெஞ்ச நீ…
என்ன புள்ள செஞ்ச நீ… ஹோய்…
பாவி பய நெஞ்ச நீ…

ஆண் : பார்க்கையிலே சொக்க வச்ச…
பறக்கத்தான் றெக்க வச்ச…
திக்க வச்ச தெனற வச்ச…
திசையதான் உணர வச்ச…
தெற்க வச்ச வள்ளுவனா ஒத்தையிலே நிக்க வச்ச…

ஆண் : என்ன புள்ள செஞ்ச நீ… ஹோய்…
பாவி பய நெஞ்ச நீ…

BGM

ஆண் : கொள்ளகாரன் நானே கொள்ளயாகி போனேன்… ஏ…
மிச்சம் மீதி ஏதும் இல்ல எல்லாம் தொலைச்சேனே…

ஆண் : தேதி போல நாளும் தேஞ்சு போகும் தேகம்…
நான் தேஞ்ச போதும் வளருதே காதல் தேயாம…

ஆண் : தண்ணீரில் உண்டாகும் மீன்கள்…
ஏன் தண்ணீரில் வேகின்ற மாயம்…
உன்னாலே வாழ்கின்ற நெஞ்சு…
ஏன் உன்னாலே ஏன் இந்த காயம்…

ஆண் : என் வாழ்க்கையே நீ வந்துதான் ஆரம்பமே ஆகும்…

ஆண் : என்ன புள்ள செஞ்ச நீ…
பாவி பய நெஞ்ச நீ…

BGM

ஆண் : ஒன்ன பாத்த வேள உடம்பும் செங்கல் சூலை…
ஏ செம்பரப்பு அருவியா நீயே வந்தாயே…
பாத மண்ண பிசைஞ்சே பான போல வளைஞ்சேன்…
ஏ என்ன நீயே என்னிடமே மாத்தி தந்தாயே…

ஆண் : எப்போதும் உன் பேரை சொல்லி…
என் உள் நாக்கும் தண்டோரா போடும்…
உப்பாத்தில் மீனாக தானே…
ஏ… அப்போதும் உன் பிம்பம் ஆடும்…

ஆண் : என் வாழ்க்கையே நீ வந்துதான் ஆரம்பமே ஆகும்…

ஆண் : என்ன புள்ள செஞ்ச நீ…
பாவி பய நெஞ்ச நீ…
என்ன புள்ள செஞ்ச நீ…
பாவி பய நெஞ்ச நீ…

ஆண் : பார்க்கையிலே சொக்க வச்ச…
பறக்கத்தான் றெக்க வச்ச…
திக்க வச்ச தெனற வச்ச…
திசையதான் உணர வச்ச…
தெற்க வச்ச வள்ளுவனா ஒத்தையிலே நிக்க வச்ச…


Notes : Enne Pulla Song Lyrics in Tamil. This Song from Raman Thediya Seethai (2008). Song Lyrics penned by Jeyantha. என்ன புள்ள செஞ்ச பாடல் வரிகள்.


இப்பவே இப்பவே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாமது பாலகிருஷ்ணன் & ஹரிணிவித்யாசாகர்ராமன் தேடிய சீதை

Ippavae Ippavae Song Lyrics in Tamil


BGM

ஆண் : இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே…
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே…

ஆண் : கண்ணை மூடி உன்னைக் கண்ட அப்பவே அப்பவே…
கைவளையல் ஓசை கேட்டால் அப்பவே அப்பவே…
ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே…
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே…

பெண் : இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே…
ஆண் : இப்பவே இப்பவே பேசணும் இப்பவே…

BGM

ஆண் : வெள்ளச் சேதம் வந்தால் கூட தப்பிக் கொள்ளலாம்…
உள்ளச்சேதம் வந்து விட்டால் என்ன செய்வது…

பெண் : முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால் ரத்தம் மட்டும் தான்…
உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன் நித்தம் யுத்தம் தான்…

ஆண் : சொல்லித் தீரா இன்பம் கண்டு…
எந்தன் நெஞ்சு கூத்தாட‌…

பெண் : மின்னல் கண்ட தாழை போல…
உன்னால் நானும் பூத்தாட‌…

ஆண் : உன்னைக் கண்டேன் என்னைக் காணோம்…
என்னைக் காண உன்னை நானும்…

பெண் : இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே…
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே…

BGM

ஆண் : எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்ல திருப்பம்…
இனி உந்தன் கையைப் பற்றிக் கொண்டே செல்ல விருப்பம்…

பெண் : நெஞ்சவயல் எங்கும் உன்னை நட்டு வைக்கிறேன்…
நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்…

ஆண் : உன்னைக் காண நானும் வந்தால்…
சாலை எல்லாம் பூஞ்சோலை…

பெண் : உன்னை நீங்கி போகும் நேரம்…
சோலை கூட தார்ப்பாலை…

ஆண் : மண்ணுக்குள்ளே வேரைப் போலே…
நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான்…

பெண் : இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே…
ஆண் : இப்பவே இப்பவே பேசணும் இப்பவே…

BGM

பெண் : கண்ணுக்குள்ள உன்னைக் கண்ட அப்பவே அப்பவே…
ஆண் : கைவளையல் ஓசை கேட்டால் அப்பவே அப்பவே…

பெண் : ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே…
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே…


Notes : Ippavae Ippavae Song Lyrics in Tamil. This Song from Raman Thediya Seethai (2008). Song Lyrics penned by Viveka. இப்பவே இப்பவே பாடல் வரிகள்.


mazhai-nindra-song-lyrics-in-tamil

மழை நின்ற பின்பும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்கல்யாணிவித்யாசாகர்ராமன் தேடிய சீதை

Mazhai Nindra Song Lyrics in Tamil


BGM

பெண் : மழை நின்ற பின்பும் தூரல் போல…
உனை மறந்த பின்பும் காதல்…
அலை கடந்த பின்பும் ஈரம் போல…
உனை பிரிந்த பின்பும் காதல்…

பெண் : எனக்கும் காதல் பிறந்திருக்கு…
அதற்கு உன் பேர் வைக்கட்டுமா… ஹோய்…
எனக்குள் இதயம் தனித்திருக்கு…
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா…

பெண் : மழை நின்ற பின்பும் தூரல் போல…
உனை மறந்த பின்பும் காதல்…
அலை கடந்த பின்பும் ஈரம் போல…
உனை பிரிந்த பின்பும் காதல்…

BGM

பெண் : நீர் துளிகள் நிலம் விழுந்தால்…
பூக்கள் மெல்ல தலை அசைக்கும்…
என் மனதில் நீ நுழைந்தால்…
மௌனம் கூட இசை அமைக்கும்…

பெண் : பூங்குயில்கள் மறைந்திருந்தால்…
கூவும் ஓசை மறைவதில்லை…
தாமரையாய் நான் இருந்தும்…
தாகம் இன்னும் அடங்கவில்லை…

பெண் : வானும் இணைந்து நடக்கும்…
இந்த பயணத்தில் என்ன நடக்கும்…
வானம் இருக்கும் வரைக்கும்…
இந்த வானவில் உன்னுடன் இருக்கும்…

பெண் : மழை துளி பனி துளி கலைந்த பின்னே…
அது மறுபடி இரண்டென பிரிந்திடுமோ…

பெண் : மழை நின்ற பின்பும் தூரல் போல…
உனை மறந்த பின்பும் காதல்…
அலை கடந்த பின்பும் ஈரம் போல…
உனை பிரிந்த பின்பும் காதல்…

BGM

பெண் : கண்ணிமைகள் கை தட்டியே…
உன்னை மெல்ல அழைக்கிறதே…
உன் செவியில் விழவில்லையா…
உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே…

பெண் : உன்னருகே நான் இருந்தும்…
உண்மை சொல்ல துணிவு இல்லை…
கைகளிலே விரல் இருந்தும்…
கைகள் கோர்க்க முடியவில்லை…

பெண் : உன்னை எனக்கு பிடிக்கும்…
அதை சொல்வதில்தானே தயக்கம்…
நீயே சொல்லும் வரைக்கும்…
என் காதலும் காத்து கிடக்கும்…

பெண் : தினம் தினம் கனவினில் வந்துவிடு…
நம் திருமண அழைப்பிதழ் தந்துவிடு…

பெண் : மழை நின்ற பின்பும் தூரல் போல…
உனை மறந்த பின்பும் காதல்…
அலை கடந்த பின்பும் ஈரம் போல…
உனை பிரிந்த பின்பும் காதல்…

பெண் : எனக்கும் காதல் பிறந்திருக்கு…
அதற்கு உன் பேர் வைக்கட்டுமா… ஹோய்…
எனக்குள் இதயம் தனித்திருக்கு…
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா…


Notes : Mazhai Nindra Song Lyrics in Tamil. This Song from Raman Thediya Seethai (2008). Song Lyrics penned by Kabilan. மழை நின்ற பின்பும் பாடல் வரிகள்.