Category Archives: யாரடி நீ மோகினி

யாரடி நீ மோகினி

Oh Baby Song Lyrics in Tamil

ஓ பேபி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்நவீன் மாதவ், ஹரிசரண், பார்கவி பிள்ளை & ஆண்ட்ரியா ஜெரெமையாயுவன் ஷங்கர் ராஜாயாரடி நீ மோகினி

Oh Baby Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓ பேபி ஓ பேபி ஓ பேபி ஓ பேபி…
யூ ஆர் சோ செக்ஸி…
ஓ பேபி ஓ பேபி ஓ பேபி ஓ பேபி…
யூ ஆர் யூ டச் மீ…

ஆண் : கண்ணிலே தீயை வைத்தாய்…
நெஞ்சிலே பூவை வைத்தாய்…
என்னிலே உன்னை வைத்தாய்…
உன்னிலே என்னை தைத்தாய்…

ஆண் : அழகாலே தூண்டில் வைத்தாய்…
ஓ பெண்ணே பெண்ணே…
அகப்பட்டேன் தேம்ப வைத்தாய்…

ஆண் : மின்னலை போய் தொட்டேனே…
என் கண்ணே கண்ணே…
கையோடு காயம் வைத்தாய்…

பெண் : ஓ பேபி ஓ பேபி ஓ பேபி ஓ பேபி…
யூ ஆர் சோ செக்ஸி…
ஓ பேபி ஓ பேபி ஓ பேபி ஓ பேபி…
யூ ஆர் யூ டச் மீ…

BGM

ஆண் : பஞ்சாய் பஞ்சாய் என்னை காற்றில் விட்டாய்…
நஞ்சாய் நஞ்சாய் நீயும் காதல் தந்தாய்…
அன்பே அன்பே என்ன பாவம் செய்தேன்…
கல்லாய் மண்ணாய் காலின் ஓரம் கிடந்தேன்…

பெண் : காதல் என்றால் நண்பா…
அது கண்ணீரில் ஓடம்…
கண்ணை கட்டிக்கொண்டு…
அட என்னடா பாடம்…

ஆண் : ஓ பெண்ணே மறந்தாய்…
நெஞ்சில் முள்ளாய் கலந்தாய்…
முன்பு உன்னாலே நான் பிறந்தேன்…
இன்று மண்ணோடு நான் சரிந்தேன்…

ஆண் : அழகாலே தூண்டில் வைத்தாய்…
ஓ பெண்ணே பெண்ணே…
அகப்பட்டேன் தேம்ப வைத்தாய்…

ஆண் : மின்னலை போய் தொட்டேனே…
என் கண்ணே கண்ணே…
கையோடு காயம் வைத்தாய்…

BGM

ஆண் : நீயே நீயே ஆசை தந்து போனாய்…
ஏனோ ஏனோ மோசம் செய்து போனாய்…
உன்னை இன்று காதலித்த சாபம்…
வாழும் காலம் வந்து வந்து போகும்…

ஆண் : காதல் காயம் தந்தாய்…
நீ காரணம் கேட்காதே…
வேரை கேட்டு என்றும்…
அட பூக்கள் பூக்காதே…

ஆண் : ஓ பெண்ணே பிாிந்தாய்…
தேடும் போதே தொலைந்தாய்…
காதல் காட்டாற்று வெள்ளம் தானம்மா…
அதில் காணாமல் போனேன் நானம்மா…

பெண் : ஓ பேபி ஓ பேபி ஓ பேபி ஓ பேபி…
யூ ஆர் சோ செக்ஸி…
ஓ பேபி ஓ பேபி ஓ பேபி ஓ பேபி…
யூ ஆர் யூ டச் மீ…

BGM


Notes : Oh Baby Song Lyrics in Tamil. This Song from Yaaradi Nee Mohini (2008). Song Lyrics penned by Na. Muthu Kumar. ஓ பேபி பாடல் வரிகள்.


ஒரு நாளுக்குள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & ரீட்டாயுவன் ஷங்கர் ராஜாயாரடி நீ மோகினி

Oru Naalaikkul Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு நாளுக்குள் எத்தனை கனவு…
உன் பார்வையில் விழுகிற பொழுது…
தொடு வானத்தைத் தொடுகிற உறவு…
ஓஓ ஓஓ… ஓஹோ ஓ ஓ ஓ…

ஆண் : ஒரு நாளுக்குள் எத்தனை கனவு…
உன் பார்வையில் விழுகின்ற பொழுது…
தொடு வானத்தைத் தொடுகின்ற உணர்வு…
ஓஓ ஓஓஹோ…

பெண் : ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்…
இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்…
இந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம்…
என்றாலும் கால்கள் மிதக்கும்… ஓஹோ…

ஆண் : ஒரு நாளுக்குள் எத்தனை கனவு…
உன் பார்வையில் விழுகிற பொழுது…
தொடு வானத்தைத் தொடுகிற உறவு…
ஓஓ ஓஓ… ஓஹோ ஓ ஓ ஓ…

BGM

ஆண் : நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய்…
நான் பேசிட வார்த்தைகள் நீ குடுத்தாய்…
நீ காதலா இல்லை கடவுளா…
புரியாமல் திணறிப் போனேன்…

ஆண் : யாரேனும் அழைத்தால் ஒரு முறைதான்…
நீதானோ என்றே திரும்பிடுவேன்…
தினம் இரவினில் உன் அருகினில்…
உறங்காமல் உறங்கிப் போவேன்…

பெண் : இது ஏதோ புரியா உணர்வு
இதைப் புரிந்திட முயன்றிடும் பொழுது…
ஒரு பனிமலை ஒரு எரிமலை…
விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்…

BGM

ஆண் : ஒரு நாளுக்குள் எத்தனை கனவு…
உன் பார்வையில் விழுகிற பொழுது…
தொடு வானத்தைத் தொடுகிற உறவு…
ஓஓ ஓஓ… ஓஹோ ஓ ஓ ஓ…

BGM

ஆண் : நதியாலே பூக்கும் மரங்களுக்கு…
நதி மீது இருக்கும் காதலினை…
நதி அறியுமா கொஞ்சம் புரியுமா…
கரையோட கனவுகள் எல்லாம்…

ஆண் : உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால்…
அவள் கூட உன்னையும் விரும்பி விட்டால்…
நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம்…
பிறக்காத கனவுகள் பிறக்கும்…

பெண் : தன் வாசனை பூ அறியாது…
கண்ணாக்கு கண் கிடையாது…
அது புரியலாம் பின்பு தெரியலாம்…
அது வரையில் நடப்பது நடக்கும்…

BGM


Notes : Oru Naalaikkul Song Lyrics in Tamil. This Song from Yaaradi Nee Mohini (2008). Song Lyrics penned by Na. Muthu Kumar. ஒரு நாளுக்குள் பாடல் வரிகள்.


நெஞ்சை கசக்கி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்உதித் நாராயண் & சுசித்ராயுவன் ஷங்கர் ராஜாயாரடி நீ மோகினி

Nenjai Kasaki Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெஞ்சை கசக்கி பிழிந்துவிட்டு…
போற பொண்ணே ரதியே ரதியே…
பஞ்சில் தீ மூட்டிவிட்டு போறவளே…
கிளியே கிளியே…

ஆண் : அடி மயிலே மாமயிலே…
மதி மயக்கும் பூங்குயிலே…

ஆண் : நெஞ்சை கசக்கி பிழிந்துவிட்டு…
போற பொண்ணே ரதியே ரதியே… ஓஓ…
பஞ்சில் தீ மூட்டிவிட்டு போறவளே…
கிளியே கிளியே…

BGM

பெண் : கம்பங்காட்டில் களத்துமேட்டில்…
வண்டி ஓட்டும் ஆச மாமா…
கூச்சத்த தூக்கி குப்பையில் போடு…

ஆண் : ஏ பார்க்க பார்க்க மனசு ஏங்கும்…
பழகி பார்க்க வயசு கேட்கும்…
இதயத்தில் இடம் இங்கு இல்லையே…
அதை எடுத்தவள் கொடுக்கவும் இல்லையே…

பெண் : காதல் எனக்கு வேண்டாமே…
கவலை மறந்து வா மாமா…
கைய புடிச்சு கன்னம் தேச்சு…
கதைகள் பேச வா வா…

ஆண் : உள்ளம் கொடுப்பது ஒருமுறைதான்…
இனி வாழ்வோ சாவோ அவளுடன்தான்…

பெண் : வாய்ப்புகள் வருவது ஒருமுறைதான்…
நீ இலக்கணம் பார்த்தால் தலை வலிதான்…

ஆண் : நெஞ்சை கசக்கி பிழிந்துவிட்டு…
போற பொண்ணே ரதியே ரதியே…

பெண் : ஹம்ம்… பஞ்சில் தீ மூட்டிவிட்டு போறவளே…
கிளியே கிளியே…

BGM

ஆண் : பார்வை பார்த்து மயக்கி போனாள்…
பாவி நெஞ்சை பறித்து போனாள்…
ஆண்களின் ஜென்மம்…
அது என்றுமே துன்பம்…

பெண் : நெருங்கி வந்தால் விலகி போவோம்…
விலகி போனால் நெருங்கி வருவோம்…
பெண்களின் மனதில் என்னவோ…
அது பெண்ணுக்கும் புரிவது இல்லையே…

ஆண் : ஆசை வைத்தேன் உன்மேல்தான்…
வாழ்ந்து பார்ப்பேன் உன்னுடன்தான்…
பாதை தெரிந்தால் பயணம் புரிந்தால்…
பாறை இடுக்கில் ஒரு பூதான்…

பெண் : கனவுகள் காண்பது உன் உரிமை…
அது கலைந்தால் தெரியும் என் நிலைமை…

ஆண் : இரவும் பகலும் உன் மடியில்…
கண்மூடி கிடப்பேன் உன் அருகில்…

BGM


Notes : Nenjai Kasaki Song Lyrics in Tamil. This Song from Yaaradi Nee Mohini (2008). Song Lyrics penned by Na. Muthu Kumar. நெஞ்சை கசக்கி பாடல் வரிகள்.


வெண்மேகம் பெண்ணாக

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஹரன்யுவன் ஷங்கர் ராஜாயாரடி நீ மோகினி

Venmegam Pennaga Song Lyrics in Tamil


ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
லலல லலலலா…

ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ…
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ…
உன்னாலே பல ஞாபகம்…
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

ஆண் : வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன…
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன…
உன்னாலே பல ஞாபகம்…
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ…
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ…

BGM

ஆண் : மஞ்சள் வெயில் நீ…
மின்னல் ஒளி நீ…
உன்னைக் கண்டவரை கண் கலங்க…
நிற்க வைக்கும் தீ…

ஆண் : பெண்ணே என்னடி உண்மை சொல்லடி…
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி…
தேவதை வாழ்வது வீடில்லை கோயில்…
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்…
ஒன்றா இரண்டா உன் அழகை பாட…

ஆண் : கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்…
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்…
உன்னாலே பல ஞாபகம்…
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

BGM

ஆண் : எங்கள் மனதை கொள்ளை அடித்தாய்…
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்…
விழி அசைவில் வலை விரித்தாய்…
உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல…
கட்டளைகள் விதித்தாய்…

ஆண் : உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க…
உயிருடன் வாழ்கிறேன் நானடி…
என் காதலும் என்னாகுமோ…
உன் பாதத்தில் மண்ணாகுமோ…

BGM

ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ…
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ…

BGM


Notes : Venmegam Pennaga Song Lyrics in Tamil. This Song from Yaaradi Nee Mohini (2008). Song Lyrics penned by Na. Muthu Kumar. வெண்மேகம் பெண்ணாக பாடல் வரிகள்.


எங்கேயோ பார்த்த

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்உதித் நாராயண்யுவன் ஷங்கர் ராஜாயாரடி நீ மோகினி

Enkeyoo Partha Song Lyrics in Tamil


BGM

ஆண் : எங்கேயோ பார்த்த மயக்கம்…
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்…
தேவதை இந்த சாலை ஓரம்…
வருவது என்ன மாயம் மாயம்…
கண் திறந்து இவள் பார்க்கும் போது…
கடவுளை இன்று நம்பும் மனது…

ஆண் : இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்…
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்…
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்…
அறிவை மயக்கும் மாய தாகம்…
இவளைப் பார்த்த இன்பம் போதும்…
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்…

BGM

ஆண் : கனவுகளில் வாழ்ந்த நாளை…
கண் எதிரே பார்க்கிறேன்…
கதைகளிலே கேட்டப் பெண்ணா…
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்…

ஆண் : அங்கும் இங்கும் ஓடும் கால்கள்…
அசைய மறுத்து வேண்டுதே…
இந்த இடத்தில் இன்னும் நிற்க…
இதயம் கூட ஏங்குதே…

ஆண் : என்னானதோ ஏதானதோ…
கண்ணாடி போல் உடைந்திடும் மனது…
கவிதை ஒன்று பார்த்து போக…
கண்கள் கலங்கி நானும் ஏங்க…
மழையின் சாரல் என்னைத் தாக்க…
விடைகள் இல்லா கேள்வி கேட்க…

ஆண் : எங்கேயோ பார்த்த மயக்கம்…
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்…
தேவதை இந்த சாலை ஓரம்…
வருவது என்ன மாயம் மாயம்…
கண் திறந்து இவள் பார்க்கும் போது…
கடவுளை இன்று நம்பும் மனது…

BGM

ஆண் : ஆதி அந்தமும் மறந்து…
உன் அருகில் கரைந்து நான் போனேன்…
ஆண்கள் வெக்கபடும் தருணம்…
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்…

ஆண் : இடி விழுந்த வீட்டில் இன்று…
பூச்செடிகள் பூக்கிறதே…
இவள் தானே உந்தன் பாதி…
கடவுள் பதில் கேக்கிறதே…

ஆண் : வியந்து வியந்து…
உடைந்து உடைந்து…
சரிந்து சரிந்து…
மிரண்டு மிரண்டு…

ஆண் : இந்த நிமிடம் மீண்டும் பிறந்து…
உனக்குள் கலந்து…
தொலைந்து தொலைந்து…

BGM


Notes : Enkeyoo Partha Song Lyrics in Tamil. This Song from Yaaradi Nee Mohini (2008). Song Lyrics penned by Na. Muthu Kumar. எங்கேயோ பார்த்த பாடல் வரிகள்.