Category Archives: பூ

Dheena Song Lyrics in Tamil Poo

தீனானக்குனா தீனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஷங்கர் மகாதேவன் & ஹேமாம்பிகாஎஸ்.எஸ்.குமரன்பூ

Dheena Song Lyrics in Tamil


BGM

ஆண் : தீனானக்குனா தீனானக்குனா தீனானக்குனா தீனா…
தீனானக்குனா தீனானக்குனா தீனானக்குனா தீனா…
ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற மாரி…

ஆண் : கயத்தாறு காத்தாடி போல…
காத்தோடு போனானே மெல்ல…
ஏ… பஞ்சாரத்துக்கோழி கடிச்சி பார்ப்பது போல…
உன்னால நான் மாறி போனேன்…
உள்ளூர சூடேறி போனேன்…

பெண் : ஆசை வச்ச மாமனுக்கு ஆலமரமா…
காலம் பூரா காத்திருப்பேன் நான்…
சுடலைமாடன் கோவிலுக்கு நேத்துக்கிட்டுத்தான்…
சூடம் ஒன்னு ஏத்தி வைப்பேன் நான்…

ஆண் : ஏ ஏதோ ஏ ஏதோ ஏ ஏதோ பண்ணுற மாரி…
ஏ தீனா ஏ தீனா ஏ தீனானக்குனா தீனா…

BGM

ஆண் : ஊரோடு வாழ்ந்தும் தனியாகத்தானே…
வாழ்ந்தேனே நான்…
கூரைக்கு மேலே பூசணி பூவாய் பூத்தாயே நீ…

ஆண் : உன்னோடு பேசும் போது…
நெஞ்சில் உற்சாகம் குறையாது…

பெண் : சாதிசனம் கோடி இருக்கும்…
உன் நிழல் மட்டும் கூட இருக்கும்…

ஆண் : ஏ தீனா ஏ தீனா ஏ தீனானக்குனா தீனா…
ஏ ஏதோ ஏ ஏதோ ஏ ஏதோ பண்ணுற மாரி…

BGM

ஆண் : தாய் அன்று தந்த வெப்பத்தை இன்று…
தந்தாயே நீ…
தோள் சாயும் போது துன்பத்தையெல்லாம்…
வென்றாயே நீ…

ஆண் : என்னுள்ளே உன் வீடு…
நானும் நீயின்றி வெறும் கூடு…

பெண் : காத்து உள்ள காலம் வரைக்கும்…
உன்னை காதலிச்சே செத்து போகணும்…

ஆண் : தீனானக்குனா தீனானக்குனா தீனானக்குனா தீனா…
தீனானக்குனா தீனானக்குனா தீனானக்குனா தீனா…
ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற மாரி…

ஆண் : கயத்தாறு காத்தாடி போல…
காற்றோடு போனானே மெல்ல…
ஏ பஞ்சாரத்துக்கோழி கடிச்சி பார்ப்பது போல…
உன்னால நான் மாறி போனேன்…
உள்ளூர சூடேறி போனேன்…

பெண் : ஆசை வச்ச மாமனுக்கு ஆலமரமா…
காலம் பூரா காத்திருப்பேன் நான்…
சுடலைமாடன் கோவிலுக்கு நேத்துக்கிட்டுத்தான்…
சூடம் ஒன்னு ஏத்திவைப்பேன் நான்…

ஆண் : ஏ ஏதோ ஏ ஏதோ ஏ ஏதோ பண்ணுற மாரி…
ஏ தீனா ஏ தீனா ஏ தீனானக்குனா தீனா…


Notes : Dheena Song Lyrics in Tamil. This Song from Poo (2008). Song Lyrics penned by Na. Muthukumar. தீனானக்குனா தீனா பாடல் வரிகள்.


ஆவாரம் பூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சின்மயிஎஸ்.எஸ்.குமரன்பூ

Aavaram Poo Song Lyrics in Tamil


பெண் : ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே…
யாருக்கு காத்திருக்கு…
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே…
உனக்காக பூத்திருக்கு…

BGM

பெண் : சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை…
அது சொல்லாமல் போனாலும் புரியாதா…

பெண் : ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே…
யாருக்கு காத்திருக்கு…
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே…
உனக்காக பூத்திருக்கு…

BGM

பெண் : காற்றில் ஆடி தினந்தோறும்…
உனது திசையை தொடருதடா…
குழந்தை கால ஞாபகத்தில்…
இதழ்கள் விரித்தேக் கிடக்குதடா…

பெண் : நெடுநாள் அந்த நெருக்கம்…
நினைத்தே அது கிடக்கும்…
சருகுகள் சத்தம் போடும்…
தினம் சூழ்நிலை யுத்தம் போடும்…
அதன் வார்த்தை எல்லாம் மௌனமாகும்…

பெண் : சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை…
அது சொல்லாமல் போனாலும் புரியாதா…

பெண் : ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே…
யாருக்கு காத்திருக்கு…
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே…
உனக்காக பூத்திருக்கு…

BGM

பெண் : ஆயுள் முழுதும் தவம் கிடந்தே…
ஒற்றை காலில் நிற்குதடா…
மாலையாகி தவழ்ந்திடவே…
உனது மார்பை கேட்குதடா…

பெண் : பனியில் அது கிடக்கும்…
நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும்…
வண்ணங்கள் எல்லாம் நீதான்…
அதன் வாசங்கள் எல்லாம் நீதான்…
நீ விட்டு சென்றால் பட்டு போகும்…

பெண் : சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை…
அது சொல்லாமல் போனாலும் புரியாதா…

பெண் : ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே…
யாருக்கு காத்திருக்கு…
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே…
உனக்காக பூத்திருக்கு…


Notes : Aavaram Poo Song Lyrics in Tamil. This Song from Poo (2008). Song Lyrics penned by Na. Muthukumar. ஆவாரம் பூ பாடல் வரிகள்.


சிவகாசி ரதியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ். ஞானகரவேல்பெரிய கருப்பு தேவர்எஸ்.எஸ்.குமரன்பூ

Sivakasi Rathiyae Song Lyrics in Tamil


BGM

ஆண் : சிவகாசி ரதியே ஏ சிரிக்கின்ற வெடியே…
உன்னை எந்தகாலம் பார்த்தது தாயே…
இவ அந்தக்கால ஐஸ்வர்யாராயி…

BGM

ஆண் : முகத்திலே தெரியுற சுருக்கத்தை போலே…
அறுபது வயசில படுத்துறாளே…
உன்னை எந்தகாலம் பார்த்தது தாயே…
இவ அந்தக்கால ஐஸ்வர்யாராயி…

BGM

ஆண் : ஒத்தையடி பாதையிலே சுள்ளி பொறுக்க…
மத்தியானம் வருவானு பூத்து கிடந்தேன்…
ஒத்த பானை மேலே வந்த பேய பார்த்துதான்…
தலை தெறிக்க ஓட்டம் புடிச்சேன்…

ஆண் : ஏய்… அய்யனாரு சாமிய காவலுக்கு வேண்டித்தான்…
காதல நான் சொல்ல நினைச்சேன்…
அவ பாம்பாட்டி ஒருத்தனை பார்த்து பார்த்து சிரிச்சத…
எங்க போய் சொல்லி தொலைப்பேன்…

ஆண் : அந்த பந்தக்காலு பக்கத்துல பாரு…
இவ அந்தக்கால சொக்கத்தங்க தேரு…

BGM

ஆண் : சிவகாசி ரதியே ஏ சிரிக்கின்ற வெடியே…
உன்னை எந்தகாலம் பார்த்தது தாயே…
இவ அந்தக்கால ஐஸ்வர்யாராயி…

BGM

ஆண் : பம்புசெட்டு தண்ணியிலே அவ குளிக்க…
தென்னை மாற உச்சியில நானும் இருப்பேன்…
தென்னை மட்டை தேளு ஒன்னு என்னை கடிக்க…
கத்திக்கிட்டு பல்ல இளிப்பேன்…

ஆண் : ஏ கெண்ட மீனைப்போலத்தான்…
துள்ளிக்கிட்டு திரிஞ்சவ…
கருவாடா வந்து நிக்கிறா…

ஆண் : இப்ப நல்ல நேரம் பார்க்கல…
தாம்பூலமும் மாத்தள…
தாலியத்தான் கட்டப்போறேன்…

ஆண் : உன்னை எந்தக்காலம் பார்த்தது தாயே
இவ இத்துப்போன ஐஸ்வர்யாராயி…

BGM

ஆண் : சிவகாசி ரதியே ஏ சிரிக்கின்ற வெடியே…
உன்னை எந்தகாலம் பார்த்தது தாயே…
இவ அந்தக்கால ஐஸ்வர்யாராயி…

BGM


Notes : Sivakasi Rathiyae Song Lyrics in Tamil. This Song from Poo (2008). Song Lyrics penned by S. Gnanagaravel. சிவகாசி ரதியே பாடல் வரிகள்.


சூ சூ மாரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்மிருதுளா, பார்த்தசாரதி & ஸ்ரீமதிஎஸ்.எஸ்.குமரன்பூ

Choo Choo Maari Song Lyrics in Tamil


பெண் : டட்டா டட்டா டடட்டா…
டார டட்டா டடட்டட்டா…
சூ சூ மாரி… சூ சூ மாரி…

BGM

பெண் : தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள…
தவளை ரெண்டும் பொந்துக்குள்ள…
சூ சூ மாரி…

பெண் : குத்தாலத்து காட்டுக்குள்ள…
குரங்கு எல்லா வீட்டுக்குள்ள…
சூ சூ மாரி…

BGM

ஆண் : ஊத்த பல்லு ரெங்கம்மா…
உள்ளவாடி ரெங்கம்மா…
சூ சூ மாரி…

ஆண் : உனக்கு புருஷன் யாரம்மா…
ஊலமூக்கு ஆளம்மா…
சூ சூ மாரி… சூ சூ மாரி…

BGM

பெண் : அதோ பாரு ரயிலுடா…
ரயிலுக்குள்ள குயிலுடா…
சூ சூ மாரி…

பெண் : குயிலுகிட்ட நெருங்கினா…
ரெண்டு மாசம் ஜெயிலுடா…
சூ சூ மாரி…

BGM

ஆண் : சங்கிலி புங்கிலி கட்டிப்புடி…
நான் மாட்டேன் வேங்கைப்புலி…
சூ சூ மாரி…

ஆண் : சங்கரன் கோயில் சுந்தரி…
சப்பரம் வருது எந்திரி…
சூ சூ மாரி… சூ சூ மாரி…

BGM

பெண் : வேணாண்டா ராசு மாட்டிக்குவே…
வேணாண்டா டேய் ராசு டேய் ராசு…
ஆண் : போடி மாரி…

BGM

பெண் : தட்டான் தட்டான் லைட் அடி…
கோழி குஞ்சுக்கு லைட் அடி…
சூ சூ மாரி…

பெண் : குசும்பு பண்ணும் சேவல…
கொழம்பு வச்சு ஊத்தடி…
சூ சூ மாரி…

பெண் : பட்டைய பட்டைய எடுத்துக்கோ…
பரங்கி பட்டைய எடுத்துக்கோ…
சூ சூ மாரி…

பெண் : மொட்டையடிச்சது யாருன்னு…
முட்டைய பாத்து கேட்டுக்கோ…
சூ சூ மாரி… சூ சூ மாரி…

BGM

பெண் : தோசை பாத்து சிரிச்சுச்சாம்…
பூரி கண்ண அடிச்சிச்சாம்…
சூ சூ மாரி…

பெண் : இட்லி சண்டை போட்டுச்சாம்…
சட்டினி வெலக்கி விட்டுச்சாம்…
சூ சூ மாரி…

பெண் : கடுகு மிளகு திப்பிலி…
கருங்கொலத்தா போக்கிரி…
சூ சூ மாரி…

ஆண் : கொல்ல பக்கம் போகாத…
கொட்டி கெடக்கு ஜாங்கிரி…
பெண் : ஐய்ய சீய்ய்ய்…

பெண் : சூ சூ மாரி… சூ சூ மாரி…
சூ சூ மாரி… சூ சூ மாரி…

BGM


Notes : Choo Choo Maari Song Lyrics in Tamil. This Song from Poo (2008). Song Lyrics penned by Na. Muthukumar. சூ சூ மாரி பாடல் வரிகள்.