| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| நா. முத்துக்குமார் | சின்மயி | எஸ்.எஸ்.குமரன் | பூ |
Aavaram Poo Song Lyrics in Tamil
பெண் : ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே…
யாருக்கு காத்திருக்கு…
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே…
உனக்காக பூத்திருக்கு…
—BGM—
பெண் : சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை…
அது சொல்லாமல் போனாலும் புரியாதா…
பெண் : ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே…
யாருக்கு காத்திருக்கு…
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே…
உனக்காக பூத்திருக்கு…
—BGM—
பெண் : காற்றில் ஆடி தினந்தோறும்…
உனது திசையை தொடருதடா…
குழந்தை கால ஞாபகத்தில்…
இதழ்கள் விரித்தேக் கிடக்குதடா…
பெண் : நெடுநாள் அந்த நெருக்கம்…
நினைத்தே அது கிடக்கும்…
சருகுகள் சத்தம் போடும்…
தினம் சூழ்நிலை யுத்தம் போடும்…
அதன் வார்த்தை எல்லாம் மௌனமாகும்…
பெண் : சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை…
அது சொல்லாமல் போனாலும் புரியாதா…
பெண் : ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே…
யாருக்கு காத்திருக்கு…
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே…
உனக்காக பூத்திருக்கு…
—BGM—
பெண் : ஆயுள் முழுதும் தவம் கிடந்தே…
ஒற்றை காலில் நிற்குதடா…
மாலையாகி தவழ்ந்திடவே…
உனது மார்பை கேட்குதடா…
பெண் : பனியில் அது கிடக்கும்…
நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும்…
வண்ணங்கள் எல்லாம் நீதான்…
அதன் வாசங்கள் எல்லாம் நீதான்…
நீ விட்டு சென்றால் பட்டு போகும்…
பெண் : சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை…
அது சொல்லாமல் போனாலும் புரியாதா…
பெண் : ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே…
யாருக்கு காத்திருக்கு…
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே…
உனக்காக பூத்திருக்கு…
Notes : Aavaram Poo Song Lyrics in Tamil. This Song from Poo (2008). Song Lyrics penned by Na. Muthukumar. ஆவாரம் பூ பாடல் வரிகள்.


