Category Archives: மலைக்கோட்டை

மலைக்கோட்டை – Malaikottai (2007)

உயிரே உயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிரீட்டா & மணிசர்மாமணி சர்மாமலைக்கோட்டை

Uyire Uyire Song Lyrics in Tamil


ஆண் : உயிரே உயிரே உறைந்தேனே…
நான் உன்னை கண்ட அந்த நொடி…
உறவை உறவை துறந்தேனே…
நீ என்னை கண்ட இந்த நொடி…

ஆண் : உன் கண்ணோரம் வாழ…
கற்பூரம் போல அன்பே நான் கரைந்தேனே…
உன் கண்ணோரம் வாழ…
கற்பூரம் போல அன்பே நான் கரைந்தேனே…

ஆண் : எப்போதும் கேட்கும் என் பாடல் நீயென தெரியாதா…
எப்போதும் பூக்கும் என் பூவும் நீயே புரியாதா…
எப்போதும் வீசும் உன் தென்றல் நான் என அறிவாயா…
எப்போதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாயா…

ஆண் : உயிரே உயிரே உறைந்தேனே…
நான் உன்னை கண்ட அந்த நொடி…

BGM

ஆண் : உன் பட்டு கன்னம் புத்தகம்…
அதில் உதடுகள் எழுதுவதெப்படி…
உன் நெற்றிப் பொட்டு வெண்ணிலா…
அது பகலிலும் ஒளிர்வது எப்படி…

ஆண் : உன் வீதி சேர்ந்ததும் வருகிற பதட்டம்…
குறைப்பது குறைப்பது எப்படி…
உன் பாதி பார்வையில் பழகிய நெருக்கம்…
வருவது வருவது எப்படி…

ஆண் : என் வாழ்க்கையா என் வேட்கையா…
ரெண்டாகவும் தெரிந்தாயே…

ஆண் : எப்போதும் கேட்கும் என் பாடல் நீயென தெரியாதா…
எப்போதும் பூக்கும் என் பூவும் நீயே புரியாதா…
எப்போதும் வீசும் உன் தென்றல் நான் என அறிவாயா…
எப்போதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாயா…

ஆண் : உயிரே உயிரே உறைந்தேனே…
நான் உன்னை கண்ட அந்த நொடி…
உறவை உறவை துறந்தேனே…
நீ என்னை கண்ட இந்த நொடி…

BGM

ஆண் : உன் எச்சில் முத்தம் சம்மதம்…
அது தினசரி தொடர சம்மதம்…
உன் உச்சுகொட்டல் சம்மதம்…
அது உயிர் குழி பறிக்க சம்மதம்…

ஆண் : உன் காதின் ஓரமாய் புரளும் முடி போல்…
கலைய கோடி சம்மதம்…
உன் ஈர சேலையில் வழியும் துளி போல்…
உருள நானும் சம்மதம்…

ஆண் : இனி என் ஞாபகம் உன் பூ முகம்…
கண்டி போலே எனை காட்டும்…

ஆண் : எப்போதும் கேட்கும் என் பாடல் நீயென தெரியாதா…
எப்போதும் பூக்கும் என் பூவும் நீயே புரியாதா…
எப்போதும் வீசும் உன் தென்றல் நான் என அறிவாயா…
எப்போதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாயா…


Notes : Uyire Uyire Song Lyrics in Tamil. This Song from Malaikottai (2007). Song Lyrics penned by Yugabharathi. உயிரே உயிரே பாடல் வரிகள்.


ஓ பேபி நீ தேவாமிர்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிராகுல் நம்பியார்மணி சர்மாமலைக்கோட்டை

Oh Baby Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ பேபி நீ தேவாமிர்தம்…
பேபி நீ பஞ்சாமிர்தம்…
பேபி நீ புஷ்பத்தாவரம்…

ஆண் : ஓ பேபி நீ தீபாவளி…
பேபி நீ சூராவளி…
பேபி நீ வாச மார்கழி…

ஆண் : அம்மாடி அவ பாதம்பட்டா பாற பூவாகும்…
அப்பாடி அவ கையிபட்டா நீரும் சாராயம்…
ஐயோடி அவ என்ன என்ன தொட்டா என்னாகும்…

BGM

ஆண் : ஓ பேபி நீ தேவாமிர்தம்…
பேபி நீ பஞ்சாமிர்தம்…
பேபி நீ புஷ்பத்தாவரம்…

BGM

ஆண் : ஏ ஆலமர காக்கா அவ சோறு வைக்க ஏங்கும்…
ஏ ஓடக்கரை மீனு அவ கால கொத்த ஏங்கும்…
ஏ காஞ்சிபட்டுச் சேல அவ கட்டிக் கொள்ள ஏங்கும்…
ஏ நாகலிங்க பூவு அவ வாசத்துக்கு ஏங்கும்…

ஆண் : சோல காத்தாடியா செவத்தப்புள்ள நின்னாடா…
செத்துப்போன எல்லாருமே திரும்பி வந்தாண்டா…
காதல் பூசாரியா கனவு பூச செஞ்சாடா…
கல் விழுந்த கொளத்த போல அலம்ப வச்சாடா…

ஆண் : அம்மாடி அவ பாதம்பட்டா பாற பூவாகும்…
அப்பாடி அவ கையிபட்டா நீரும் சாராயம்…
ஐயோடி அவ என்ன என்ன தொட்டா என்னாகும்…

BGM

ஆண் : நான் காலமெல்லாம் வாழ அவ கண்ணழகு போதும்…
என் ஆசை எல்லாம் பேச அவ காதழகு போதும்…
நான் தாலிக்கட்டும் போது அவ தல குனிஞ்சா போதும்…
நான் நாலுபுள்ள கேக்க அவ நெகங்கடிச்சா போதும்…

ஆண் : ஊத்துத் தண்ணீரா உள்ளுக்குள்ள பூத்தாடா…
உலகெல்லாம் அவதான்னு உணர வச்சாடா…
காத்து கருப்பாட்டம் கண்ணோட சேர்ந்தாடா…
கனவுக்குள்ள ஸ்ரீதேவியா கதபடிச்சாடா…

ஆண் : அம்மாடி அவ பாதம்பட்டா பாற பூவாகும்…
அப்பாடி அவ கையிபட்டா நீரும் சாராயம்…
ஐயோடி அவ என்ன என்ன தொட்டா என்னாகும்…

BGM


Notes : Oh Baby Song Lyrics in Tamil. This Song from Malaikottai (2007). Song Lyrics penned by Yugabharathi. ஓ பேபி நீ தேவாமிர்தம் பாடல் வரிகள்.


தேவதையே வா வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவிஜய் யேசுதாஸ்மணி சர்மாமலைக்கோட்டை

Devathaye Va Va Song Lyrics in Tamil


BGM

ஆண் : தேவதையே வா வா என் தேவதையே வா வா…
உன் இரு விழி அசைவினில் எழுதிடும் கவிதை நான்…

ஆண் : பூமாலையே வா வா என் பூமாலையே வா வா…
உன் விரல் தொடும் தொலைவினும் விழுகிற அருவி நான்…

ஆண் : நீரிளில்லாமல் மீன்களும்…
வேரில்லாமல் பூக்களும்…
பாவம்தானே பூமியில்…
சிலுவையிலும் சிறகென பறந்திடும்…

ஆண் : தேவதையே வா வா என் தேவதையே வா வா…
உன் இரு விழி அசைவினில் எழுதிடும் கவிதை நான்…

BGM

ஆண் : விளையும் பூமி தண்ணீரை விலக சொல்லாது…
அலைகடல் சென்று பாயாமல் நதிகள் ஓயாது…
சிதைவுகள் இல்லை என்றாலே சிலைகள் இங்கேது…
வருவதை எல்லாம் ஏற்காமல் போனால் வாழ்வேது…

ஆண் : பாதை தேடும் கால்கள்தான் ஊரை சேரும்…
குழலை சேரும் தென்றல்தான் கீதம் ஆகும்…

ஆண் : சுற்றும் இந்த பூமியை சுழல செய்த காதலை…
கற்று கொண்டேன் உன்னிடம்…
இருவரும் இனி ஒரு உயிர் பிரிவில்லை…

BGM

ஆண் : அடைமழை நம்மை தொட்டாலே…
வெயிலே வா என்போம்…
அனலாய் வெயில் சுட்டாலே…
மலையே தூவென்போம்…

ஆண் : தனிமைகள் தொல்லை தந்தாலே…
துணையை கேட்கின்றோம்…
துணை வரும் நெஞ்சை கொள்ளாமல்…
தனியே தேய்கின்றோம்…

ஆண் : ஆசை மட்டும் இல்லையேல் ஏது நாட்கள்…
கைகள் தொட்டு சூடவே காதல் பூக்கள்…

ஆண் : கண்ணை விற்று ஓவியம் வாங்கும் இந்த ஊரிலே…
அன்பை வைத்து வாழலாம்…
சுகம் என தினம் சுமைகளில் மகிழ்ந்திரு…

ஆண் : தேவதையே வா வா என் தேவதையே வா வா…
உன் இரு விழி அசைவுகள் எழுதிடும் கவிதை நான்…

ஆண் : பூமாலையே வா வா என் பூமாலையே வா வா…
உன் விரல் தொடும் தொலைவினும் விழுகிற அருவி நான்…

ஆண் : நீரில்லாமல் மீன்களும்…
வேரில்லாமல் பூக்களும்…
பாவம்தானே பூமியில்…
சிலுவையிலும் சிறகென பறந்திடும்…


Notes : Devathaye Va Va Song Lyrics in Tamil. This Song from Malaikottai (2007). Song Lyrics penned by Yugabharathi. தேவதையே வா வா பாடல் வரிகள்.


ஏய் ஆத்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்திப்பு & அனுராதா ஸ்ரீராம்மணி சர்மாமலைக்கோட்டை

Yey Aatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா…
நான் பார்த்த பாக்காமலே போறியா…
அடியே ஆத்தா ஆத்தோரமா வாரியா…
நான் பார்த்த பாக்காமலே போறியா…

ஆண் : அடி அக்கம் பக்கம் யாரும் இல்ல…
அள்ளிக்கலாம் வா புள்ள…

ஆண் : ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா…
நான் பார்த்த பாக்காமலே போறியா…

BGM

ஆண் : ஆவாரம் பூவாக அள்ளாம கிள்ளாம…
அணைக்க துடிச்சிருக்கேன்…

பெண் : அச்சராம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு…
தனிச்சு தவிச்சிருக்கேன்…

ஆண் : ஆவாரம் பூவாக அல்லாமா கில்லாம…
அணைக்க துடிச்சிருக்கேன்…

பெண் : அச்சராம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு…
தனிச்சு தவிச்சிருக்கேன்…

ஆண் : தவிச்ச மனசுக்கு தண்ணி தர வேணாமா…
தளும்பும் நெனப்புக்கு அல்லிகிறேன் நீவாமா…

பெண் : மாருல குளிருது சேர்தென அணைச்சா…
தீருமடா குளிரும் கட்டிபுடிசுக்கோ… ஹே…

ஆண் : ஆத்தா ஆத்தோரமா வாரியா…
நான் பார்த்த பாக்காமலே போறியா…

BGM

பெண் : நான் போறேன் முன்னால நீ வாட பின்னால…
நாயகர் தோட்டத்துக்கு…

ஆண் : பேசாதே கண்ணாலே…
என்னடி அம்மாடி வாடுற வாட்டத்துக்கு…

பெண் : நான் போறேன் முன்னால நீ வாடா பின்னால…
நாயகர் தோட்டத்துக்கு…

ஆண் : பேசாதே கண்ணாலே…
என்னடி அம்மாடி வாடுற வாட்டதுக்கு…

பெண் : சிரிச்ச சிரிப்புல சில்லரையும் சிதறுது…
செவந்த முகம் கண்டு எம்மனசு பதறுது…

ஆண் : பவள பவள பவள வாயில தெரிகிற அழக…
பார்த்ததுமே மனசு பட்டு துடிக்குது…

ஆண் : ஹே… ஆத்தா ஆத்தோரமா வாரியா…
நான் பார்த்த பாக்காமலே போறியா…
அடியே ஆத்தா ஆத்தோரமா வாரியா…
ஆண் & பெண் : நான் பார்த்த பாக்காமலே போறியா…


Notes : Yey Aatha Song Lyrics in Tamil. This Song from Malaikottai (2007). Song Lyrics penned by Gangai Amaran. ஏய் ஆத்தா பாடல் வரிகள்.