Category Archives: கிரீடம்

விழியில் உன் விழியில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சோனு நிகம் & ஸ்வேதா மோகன்ஜி. வி. பிரகாஷ் குமார்கிரீடம்

Vizhiyil Song Lyrics in Tamil


ஆண் : கண்ணோடு கண் சேரும் போது…
வார்த்தைகள் எங்கே போகும்…
கண்ணே உன் முன்னே வந்தால்…
என் நெஞ்சம் குழந்தை ஆகும்…

BGM

ஆண் : விழியில் உன் விழியில்…
வந்து விழுந்தேன் அந்த நொடியில்…
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே…

BGM

பெண் : வழியில் உன் வழியில்…
வந்து நடந்தேன் அந்த நொடியில்…
என் வழித்துணை நீதான் என்று நிழல் சொன்னதே…

ஆண் : உன்னோடு வாழ்ந்திடதானே நான் வாழ்கிறேன்…

பெண் : உன் கையில் என்னை தந்து…
தோள் சாய்கிறேன்… ஓ… தோள் சாய்கிறேன்…

ஆண் : விழியில் உன் விழியில்…
வந்து விழுந்தேன் அந்த நொடியில்…
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே…

பெண் : ஆ… வழியில் உன் வழியில்…
வந்து நடந்தேன் அந்த நொடியில்…
என் வழித்துணை நீதான் என்று நிழல் சொன்னதே…

BGM

ஆண் : இதுவரை என் இருதயம்…
இந்த உணர்வினில் தடுமாறவில்லை…

பெண் : முதல்முறை இந்த இளமையின்…
சுகம் உணர்கிறேன் நான் தூங்கவில்லை…

ஆண் : குடையோடு நான் போனேன்…
வழியினில் ஏனோ நனைகின்றேன்…

பெண் : கடிகாரம் இருந்தாலும்…
காலடி சத்தத்தில் மணி பார்த்தேன்…

ஆண் : என் தனிமைக்கு தனிமைகள்…
நீ வந்து கொடுத்தாய்…

ஆண் : விழியில் உன் விழியில்…
வந்து விழுந்தேன் அந்த நொடியில்…
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே…

பெண் : வழியில் உன் வழியில்…
வந்து நடந்தேன் அந்த நொடியில்…
என் வழித்துணை நீதான் என்று நிழல் சொன்னதே…

BGM

ஆண் : சிரிப்பிலே உன் சிரிப்பிலே…
சிறை அடைக்கிறாய் நான் மீளவில்லை…

பெண் : உறவுகள் ஒன்று சேர்கையில்…
என்ன ஆகிறேன் என்று தெரியவில்லை…

ஆண் : உன்னோடு நான் பேசும்…
ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே…

பெண் : உரையாடல் தொடர்ந்தாலும்…
மௌனங்கள் கூட பிடிக்கிறதே…

ஆண் : என் கனவுக்கு கனவுகள்…
நீ வந்து கொடுத்தாய்…

ஆண் & பெண் : விழியில் உன் விழியில்…

ஆண் : வந்து விழுந்தேன் அந்த நொடியில்…
என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே…

பெண் : ம்ம்… வழியில் உன் வழியில்…
வந்து நடந்தேன் அந்த நொடியில்…
என் வழித்துணை நீதான் என்று நிழல் சொன்னதே…

ஆண் : உன்னோடு வாழ்ந்திடதானே நான் வாழ்கிறேன்…

பெண் : உன் கையில் என்னை தந்து…
தோள் சாய்கிறேன்… ஓ… தோள் சாய்கிறேன்…

ஆண் : விழியில் உன் விழியில்…
வந்து விழுந்தேன் அந்த நொடியில்…
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே…


Notes : Vizhiyil Song Lyrics in Tamil. This Song from Kireedam (2007). Song Lyrics penned by Na. Muthu Kumar. விழியில் உன் விழியில் பாடல் வரிகள்.


akkam-pakkam-song-lyrics

அக்கம் பக்கம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சாதனா சர்கம்ஜி. வி. பிரகாஷ் குமார்கிரீடம்

Akkam Pakkam Song Lyrics in Tamil


BGM

பெண் : அக்கம் பக்கம் யாருமில்லா…
பூலோகம் வேண்டும்…
அந்திபகல் உன்னருகே…
நான் வாழ வேண்டும்…

பெண் : என் ஆசை எல்லாம் உன் இருக்கத்திலே…
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே…
வேறென்ன வேண்டும் உலகத்திலே…
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே…
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்…

பெண் : அக்கம் பக்கம் யாருமில்லா…
பூலோகம் வேண்டும்…
அந்திபகல் உன்னருகே…
நான் வாழ வேண்டும்…

BGM

பெண் : நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து…
செய்வேன் அன்பே ஓர் அகராதி…
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்…
பார்ப்பேன் தினம் உன் தலைகோதி…

பெண் : காதோரத்தில் எப்போதுமே…
உன் மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்…
கையோடுதான் கைகோர்த்துதான்…
உன் மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன்…

பெண் : வேறென்ன வேண்டும் உலகத்திலே…
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே…
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்…

பெண் : அக்கம் பக்கம் யாருமில்லா…
பூலோகம் வேண்டும்…
அந்திபகல் உன்னருகே…
நான் வாழ வேண்டும்…

BGM

பெண் : நீயும் நானும் சேரும் முன்னே…
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே…
நேரம் காலம் தெரியாமல் நெஞ்சம் இன்று…
விண்ணில் மிதக்கிறதே…

பெண் : உன்னால் இன்று பெண்ணாகவே…
நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்து கொண்டேன்…
உன் தீண்டலில் என் தேகத்தில்…
புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன்…

பெண் : வேறென்ன வேண்டும் உலகத்திலே…
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே…
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்…

BGM


Notes : Akkam Pakkam Song Lyrics in Tamil. This Song from Kireedam (2007). Song Lyrics penned by Na. Muthu Kumar. அக்கம் பக்கம் பாடல் வரிகள்.