Category Archives: அன்பு

அவள் யார் அவள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கார்த்திக்வித்யாசாகர்அன்பு

Aval Yaar Aval Song Lyrics in Tamil


BGM

ஆண் : அவள் யார் அவள் அழகானவள்…
அடி நெஞ்சிலே மின்னல்…
ஒரு பார்வையால் ஒரு பார்வையால்…
முதல் காதலின் துள்ளல்…

ஆண் : எத்தனை எத்தனை நளினம்…
அடி என்னுயிர் எங்கும் சலனம்…
இருமுறை இருமுறை ஜனனம்…
அது உன்னை காண்டிட தருனம்…
ரத்தம் மொத்தம் உறைகின்றதே…

ஆண் : அவள் யார் அவள் அழகானவள்…
அடி நெஞ்சிலே மின்னல்…
ஒரு பார்வையால் ஒரு பார்வையால்…
முதல் காதலின் துள்ளல்…

BGM

ஆண் : அன்பே நீ என் நெஞ்சை போர் கப்பல் போல் வந்து…
சொல்லாமல் கொள்ளாமல் தாக்காதே…
குழு : தாக்காதே…

ஆண் : ஆணோடு எப்போதும் இம்சைகள் செய்கின்ற…
ஆதிக்க பெண்ணாக மாறாதே…
குழு : மாறாதே…

ஆண் : அந்தி நிலா ஆ அந்தி நிலா…
அல்லி மலர் அள்ளி அள்ளி எய்தவளா…
என்னவளா என்னவளா…
என்னை ஒரு அர்த்தமென செய்தவளா…

ஆண் : செவ்வரி ஊறிய விழிகள்…
அதில் செந்தமிழ் மிஞ்சிடும் மொழிகள்…
புன்னகை செய்யும் புயல் மேகமே…

ஆண் : அவள் யார் அவள் அழகானவள்…
அடி நெஞ்சிலே மின்னல்…
ஒரு பார்வையால் ஒரு பார்வையால்…
முதல் காதலின் துள்ளல்…

BGM

ஆண் : ஐந்தாறு கண்டங்கள் நீதாண்டி சென்றாலும்…
அங்கேயும் உனை வந்து பெண் பார்ப்பேன்…
செவ்வாயில் நீ சென்று வாழ்ந்தாலும்…
நான் உந்தன் செவ்வாயில் ஓரத்தில் தேன் வார்ப்பேன்…

ஆண் : என்னுயிரே என்னுயிரே…
மெய்யாக நான் இங்கு பொய்யானேன்…
என்னுயிரே என்னுயிரே…
பொய்யல்ல நான் இங்கு நீயானேன்…

ஆண் : சட்டென சட்டென இதயம்…
பல சில்லென சில்லென உடையும்…
அத்தனை சில்லிலும் உன் பிம்பமே…

ஆண் : அவள் யார் அவள் அழகானவள்…
அடி நெஞ்சிலே மின்னல்…
ஒரு பார்வையால் ஒரு பார்வையால்…
முதல் காதலின் துள்ளல்…

ஆண் : எத்தனை எத்தனை நளினம்…
அடி என்னுயிர் எங்கும் சலனம்…
இருமுறை இருமுறை ஜனனம்…
அது உன்னை காண்டிட தருனம்…
ரத்தம் மொத்தம் உறைகின்றதே…


Notes : Aval Yaar Aval Song Lyrics in Tamil. This Song from Anbu (2003). Song Lyrics penned by Pa. Vijay. அவள் யார் அவள் பாடல் வரிகள்.


thavamendri-song-lyrics-in-tamil

தவமின்றி கிடைத்த வரமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஹரன்வித்யாசாகர்அன்பு

Thavamendri Song Lyrics in Tamil


BGM

பெண் : தவமின்றி கிடைத்த வரமே…
இனி வாழ்வில் எல்லாம் சுகமே…
தவமின்றி கிடைத்த வரமே…
இனி வாழ்வில் எல்லாம் சுகமே…

ஆண் : நீ சூரியன் நான் வெண்ணிலா…
உன் ஒளியால்தானே வாழ்கிறேன்…

பெண் : நீ சூரியன் நான் தாமரை…
நீ வந்தால்தானே மலர்கிறேன்…

ஆண் : நீ சூரியன் நான் வான்முகில்…
நீ நடந்திடும் பாதையாகிறேன்…

பெண் : நீ சூரியன் நான் ஆழ்கடல்…
என் மடியில் உன்னை ஏந்தினேன்…

ஆண் : தவமின்றி கிடைத்த வரமே… ஹோ ஓ…

பெண் : இனி வாழ்வில் எல்லாம் சுகமே…

BGM

ஆண் : ஹோ… கடிவாளம் இல்லாத…
காற்றாக நான் மாற…
வேண்டாமா வேண்டாமா…

பெண் : கடிகாரம் இல்லாத…
ஊர் பார்த்து குடியேற…
வேண்டாமா வேண்டாமா…

ஆண் : கை கோர்க்கும் போதெல்லாம்…
கை ரேகை தேயட்டும்…
முத்தத்தின் எண்ணிக்கை…
முடிவின்றி போகட்டும்…

பெண் : பகலெல்லாம் இரவாகி போனாலென்ன…
இரவெல்லாம் விடியாமல் நீண்டாலென்ன…

ஆண் : நம் உயிர் ரெண்டும்…
உடல் ஒன்றில்…
வாழ்ந்தால் என்ன…

பெண் : தவமின்றி கிடைத்த வரமே…
இனி வாழ்வில் எல்லாம் சுகமே…

BGM

ஆண் : சூடான இடம் வேண்டும்…
சுகமாகவும் வேண்டும்…
தருவாயா தருவாயா…

BGM

பெண் : கண் என்ற போர்வைக்குள்…
கனவென்ற மெத்தைக்குள்…
வருவாயா வருவாயா…

-BGM

ஆண் : விழுந்தாழும் உன் கண்ணில்…
கனவாக நான் விழுவேன்…
எழுந்தாலும் உன் நெஞ்சில்…
நினைவாக நான் எழுவேன்…

பெண் : மடிந்தாலும் உன் மூச்சின்…
சூட்டால் மடிவேன்…
பிறந்தாலும் உனையேதான்…
மீண்டும் சேர்வேன்…

ஆண் : இனி உன் மூச்சை…
கடன் வாங்கி நான் வாழுவேன்…

பெண் : தவமின்றி கிடைத்த வரமே…
இனி வாழ்வில் எல்லாம் சுகமே…

ஆண் : நீ சூரியன் நான் வெண்ணிலா…
உன் ஒளியால்தானே வாழ்கிறேன்…

பெண் : நீ சூரியன் நான் தாமரை…
நீ வந்தால்தானே மலர்கிறேன்…

ஆண் : நீ சூரியன் நான் வான்முகில்…
நீ நடந்திடும் பாதையாகிறேன்…

பெண் : நீ சூரியன் நான் ஆழ்கடல்…
என் மடியில் உன்னை ஏந்தினேன்…

ஆண் : தவமின்றி கிடைத்த வரமே… ஹோ ஓ…

பெண் : இனி வாழ்வில் எல்லாம் சுகமே…


Notes : Thavamendri Song Lyrics in Tamil. This Song from Anbu (2003). Song Lyrics penned by Thamarai. தவமின்றி கிடைத்த வரமே பாடல் வரிகள்.