பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | ஹரிஹரன் | வித்யாசாகர் | அன்பு |
Thavamendri Song Lyrics in Tamil
—BGM—
பெண் : தவமின்றி கிடைத்த வரமே…
இனி வாழ்வில் எல்லாம் சுகமே…
தவமின்றி கிடைத்த வரமே…
இனி வாழ்வில் எல்லாம் சுகமே…
ஆண் : நீ சூரியன் நான் வெண்ணிலா…
உன் ஒளியால்தானே வாழ்கிறேன்…
பெண் : நீ சூரியன் நான் தாமரை…
நீ வந்தால்தானே மலர்கிறேன்…
ஆண் : நீ சூரியன் நான் வான்முகில்…
நீ நடந்திடும் பாதையாகிறேன்…
பெண் : நீ சூரியன் நான் ஆழ்கடல்…
என் மடியில் உன்னை ஏந்தினேன்…
ஆண் : தவமின்றி கிடைத்த வரமே… ஹோ ஓ…
பெண் : இனி வாழ்வில் எல்லாம் சுகமே…
—BGM—
ஆண் : ஹோ… கடிவாளம் இல்லாத…
காற்றாக நான் மாற…
வேண்டாமா வேண்டாமா…
பெண் : கடிகாரம் இல்லாத…
ஊர் பார்த்து குடியேற…
வேண்டாமா வேண்டாமா…
ஆண் : கை கோர்க்கும் போதெல்லாம்…
கை ரேகை தேயட்டும்…
முத்தத்தின் எண்ணிக்கை…
முடிவின்றி போகட்டும்…
பெண் : பகலெல்லாம் இரவாகி போனாலென்ன…
இரவெல்லாம் விடியாமல் நீண்டாலென்ன…
ஆண் : நம் உயிர் ரெண்டும்…
உடல் ஒன்றில்…
வாழ்ந்தால் என்ன…
பெண் : தவமின்றி கிடைத்த வரமே…
இனி வாழ்வில் எல்லாம் சுகமே…
—BGM—
ஆண் : சூடான இடம் வேண்டும்…
சுகமாகவும் வேண்டும்…
தருவாயா தருவாயா…
—BGM—
பெண் : கண் என்ற போர்வைக்குள்…
கனவென்ற மெத்தைக்குள்…
வருவாயா வருவாயா…
—-BGM—
ஆண் : விழுந்தாழும் உன் கண்ணில்…
கனவாக நான் விழுவேன்…
எழுந்தாலும் உன் நெஞ்சில்…
நினைவாக நான் எழுவேன்…
பெண் : மடிந்தாலும் உன் மூச்சின்…
சூட்டால் மடிவேன்…
பிறந்தாலும் உனையேதான்…
மீண்டும் சேர்வேன்…
ஆண் : இனி உன் மூச்சை…
கடன் வாங்கி நான் வாழுவேன்…
பெண் : தவமின்றி கிடைத்த வரமே…
இனி வாழ்வில் எல்லாம் சுகமே…
ஆண் : நீ சூரியன் நான் வெண்ணிலா…
உன் ஒளியால்தானே வாழ்கிறேன்…
பெண் : நீ சூரியன் நான் தாமரை…
நீ வந்தால்தானே மலர்கிறேன்…
ஆண் : நீ சூரியன் நான் வான்முகில்…
நீ நடந்திடும் பாதையாகிறேன்…
பெண் : நீ சூரியன் நான் ஆழ்கடல்…
என் மடியில் உன்னை ஏந்தினேன்…
ஆண் : தவமின்றி கிடைத்த வரமே… ஹோ ஓ…
பெண் : இனி வாழ்வில் எல்லாம் சுகமே…
Notes : Thavamendri Song Lyrics in Tamil. This Song from Anbu (2003). Song Lyrics penned by Thamarai. தவமின்றி கிடைத்த வரமே பாடல் வரிகள்.