Category Archives: டபுள்ஸ்

டபுள்ஸ் – Doubles (2000)

கலர்புல் நிலவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவசுந்தரா தாஸ் & ரம்மிஸ்ரீகாந்த் தேவாடபுள்ஸ்

Colourful Nilavu Song Lyrics in Tamil


BGM

பெண் : கலர்புல் நிலவு டிஜிட்டல் கனவு…
உனக்குள் தெரிகின்றதோ…
உள் ஒன்று இருக்க இன்னொன்றைதேடி…
உள்ளங்கை அரிக்கின்றதோ…

பெண் : என்னோடு நீ கண் வீசினால்…
உன்னோடு நான் கல் வீசுவேன்…

பெண் : நாம் நோக்கும் பிகர் நோக்காட்டா…
நாம் நோக்கி என்ன பயன்…
நாம் நோக்கும் பிகர் நோக்காட்டா…
நாம் நோக்கி என்ன பயன்…

BGM

பெண் : தோள் கிண்ணம் போல் நாயகி இருக்கையில்…
தேன் கிண்ணம் தேடி எதுக்கு அலைகிறாய்…
ரெண்டு குதுரையில் பயணங்கள் சரி படுமா சொல்லையா…

ஆண் : தோள் கிண்ணம் மாடல் பூஜைக்கு புரியாது…
எவர் சில்வர் தானே வசதிக்கு வருவது…
ரெட்டை குதிரைகள் பூட்டிய தேர் இல்லையா இல்லையா…

பெண் : ரெட்டை குதிரைகள் முட்டி கொண்டால்…
தேர் சென்று ஊர் சேர்ந்திடுமா…

பெண் : ஹா ஆஆ… கலர்புல் நிலவு டிஜிட்டல் கனவு…

BGM

பெண் : கல்யாணம் கொள்ளும் வரை காதலை காதலி…
கல்யாணம் கொண்ட பின்பும் மனைவியை காதலி…
சாதிக்க பிறந்தவன் ஒருவனுக்கு ஒருத்தியப்பா இல்லையா…

ஆண் : சாதிக்க பிறந்தவன் மனைவியும் அமைவதுண்டு…
சாதித்து முடித்ததும் துணைவியும் வைப்ப துண்டு…
மாணவிகள் சங்கம் வைத்து தசரதன்…
நானும் இல்லையா இல்லையா…

பெண் : ராமன் போல் அவன் வாழ்ந்திருந்தான்…
ராமாயணம் சோகம் இல்லையடா…

பெண் : ஹா ஆஆ… கலர்புல் நிலவு டிஜிட்டல் கனவு…

BGM

பெண் : கலர்புல் நிலவு டிஜிட்டல் கனவு…
உனக்குள் தெரிகின்றதோ…
உள் ஒன்று இருக்க இன்னொன்றை தேடி…
உள்ளங்கை அரிக்கின்றதோ…

பெண் : என்னோடு நீ கண் வீசினால்…
உன்னோடு நான் கல் வீசுவேன்…

பெண் : நாம் நோக்கும் பிகர் நோக்காட்டா…
நாம் நோக்கி என்ன பயன்…
நாம் நோக்கும் பிகர் நோக்காட்டா…
நாம் நோக்கி என்ன பயன்… யே ஹய் யே…

ஆண் : யூ ஆர் ரைட்…


Notes : Colourful Nilavu Song Lyrics in Tamil. This Song from Doubles (2000). Song Lyrics penned by Vairamuthu. கலர்புல் நிலவு பாடல் வரிகள்.


அடி காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிணி & பி. உன்னிகிருஷ்ணன்ஸ்ரீகாந்த் தேவாடபுள்ஸ்

Adi Kaadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி காதல் ஒரு கண்ணில்…
காமம் ஒரு கண்ணில்…
இதுதான் தேன் நிலா…

பெண் : சிறு முத்தம் தருகையில்…
மொத்தம் நனைவது…
அடடா தேன் நிலா…

ஆண் : நான் காலம் முழுதும் தூங்கும் தலையணை…
உந்தன் நெஞ்சிலா…

பெண் : உன் மூச்சுக்காற்று தேகம் கிள்ளும்…
மாலை தென்றலா…

ஆண் : கலந்திடவா…
பெண் : கரைந்திடவா…

ஆண் : அடி காதல் ஒரு கண்ணில்…
காமம் ஒரு கண்ணில்…
இதுதான் தேன் நிலா…

பெண் : சிறு முத்தம் தருகையில்…
மொத்தம் நனைவது…
அடடா தேன் நிலா…

ஆண் : நான் காலம் முழுதும் தூங்கும் தலையணை…
உந்தன் நெஞ்சிலா…

பெண் : உன் மூச்சுக்காற்று தேகம் கிள்ளும்…
மாலை தென்றலா…

ஆண் : கலந்திடவா…
பெண் : கரைந்திடவா…

BGM

பெண் : விரல்களை நுழைத்து கூந்தலை கலைத்து…
இதழ்களை அடைத்து இதயத்தை நிறுத்து…

ஆண் : தேகத்தை கொடுத்து தீபத்தை நிறுத்து…
வாரியே கொடுப்பேன் வசதியை பொறுத்து…

பெண் : பற பற பறவென…
மோக வெள்ளம் பாய்வது எதற்கு…

ஆண் : அடடடா டடடா ஆணி வேரும்…
இனிக்குது எனக்கு…

பெண் : என் மேனியில் மயில் இறகாக…
உன் மீசை ஆடியதென்ன…

ஆண் : உன் ஆடைகள் நழுவிய போது…
ஆடை நானே விடை சொல்லடி…
பதில் என்னடி…

BGM

ஆண் : இது நல்ல உணர்ச்சி இளமைக்கு பயிற்சி…
உடம்புக்குள் உயிரை தேடிடும் முயற்சி…

பெண் : நான் இன்று கண்டேன் இன்னொரு மலர்ச்சி…
நாளைக்கும் வேண்டும் சுகங்களின் தொடர்ச்சி…

ஆண் : வாலிபம் என்பது ஆற்று படுகை…
இரைத்ததும் சுரக்கும்…

பெண் : பாற்கடல் எல்லாம் தீர்ந்த பின்னும்…
தாகங்கள் இருக்கும்…

ஆண் : உன் தேவைகள் எவை என்று சொன்னால்…
தீர்த்து வைப்பேன் அது என் கடமை…

பெண் : பெண் தேவைகள் எவை என்று காண…
ஆணின் கடமை கண்டுபிடி கண்டுபிடி…

ஆண் : அடி காதல் ஒரு கண்ணில்…
காமம் ஒரு கண்ணில்…
இதுதான் தேன் நிலா…

பெண் : சிறு முத்தம் தருகையில்…
மொத்தம் நனைவது…
அடடா தேன் நிலா…

ஆண் : நான் காலம் முழுதும் தூங்கும் தலையணை…
உந்தன் நெஞ்சிலா…

பெண் : உன் மூச்சுக்காற்று தேகம் கிள்ளும்…
மாலை தென்றலா…

ஆண் : கலந்திடவா…
பெண் : கரைந்திடவா… ஓ…

BGM


Notes : Adi Kaadhal Song Lyrics in Tamil. This Song from Doubles (2000). Song Lyrics penned by Vairamuthu. அடி காதல் பாடல் வரிகள்.