| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | ஹரிணி & பி. உன்னிகிருஷ்ணன் | ஸ்ரீகாந்த் தேவா | டபுள்ஸ் |
Adi Kaadhal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அடி காதல் ஒரு கண்ணில்…
காமம் ஒரு கண்ணில்…
இதுதான் தேன் நிலா…
பெண் : சிறு முத்தம் தருகையில்…
மொத்தம் நனைவது…
அடடா தேன் நிலா…
ஆண் : நான் காலம் முழுதும் தூங்கும் தலையணை…
உந்தன் நெஞ்சிலா…
பெண் : உன் மூச்சுக்காற்று தேகம் கிள்ளும்…
மாலை தென்றலா…
ஆண் : கலந்திடவா…
பெண் : கரைந்திடவா…
ஆண் : அடி காதல் ஒரு கண்ணில்…
காமம் ஒரு கண்ணில்…
இதுதான் தேன் நிலா…
பெண் : சிறு முத்தம் தருகையில்…
மொத்தம் நனைவது…
அடடா தேன் நிலா…
ஆண் : நான் காலம் முழுதும் தூங்கும் தலையணை…
உந்தன் நெஞ்சிலா…
பெண் : உன் மூச்சுக்காற்று தேகம் கிள்ளும்…
மாலை தென்றலா…
ஆண் : கலந்திடவா…
பெண் : கரைந்திடவா…
—BGM—
பெண் : விரல்களை நுழைத்து கூந்தலை கலைத்து…
இதழ்களை அடைத்து இதயத்தை நிறுத்து…
ஆண் : தேகத்தை கொடுத்து தீபத்தை நிறுத்து…
வாரியே கொடுப்பேன் வசதியை பொறுத்து…
பெண் : பற பற பறவென…
மோக வெள்ளம் பாய்வது எதற்கு…
ஆண் : அடடடா டடடா ஆணி வேரும்…
இனிக்குது எனக்கு…
பெண் : என் மேனியில் மயில் இறகாக…
உன் மீசை ஆடியதென்ன…
ஆண் : உன் ஆடைகள் நழுவிய போது…
ஆடை நானே விடை சொல்லடி…
பதில் என்னடி…
—BGM—
ஆண் : இது நல்ல உணர்ச்சி இளமைக்கு பயிற்சி…
உடம்புக்குள் உயிரை தேடிடும் முயற்சி…
பெண் : நான் இன்று கண்டேன் இன்னொரு மலர்ச்சி…
நாளைக்கும் வேண்டும் சுகங்களின் தொடர்ச்சி…
ஆண் : வாலிபம் என்பது ஆற்று படுகை…
இரைத்ததும் சுரக்கும்…
பெண் : பாற்கடல் எல்லாம் தீர்ந்த பின்னும்…
தாகங்கள் இருக்கும்…
ஆண் : உன் தேவைகள் எவை என்று சொன்னால்…
தீர்த்து வைப்பேன் அது என் கடமை…
பெண் : பெண் தேவைகள் எவை என்று காண…
ஆணின் கடமை கண்டுபிடி கண்டுபிடி…
ஆண் : அடி காதல் ஒரு கண்ணில்…
காமம் ஒரு கண்ணில்…
இதுதான் தேன் நிலா…
பெண் : சிறு முத்தம் தருகையில்…
மொத்தம் நனைவது…
அடடா தேன் நிலா…
ஆண் : நான் காலம் முழுதும் தூங்கும் தலையணை…
உந்தன் நெஞ்சிலா…
பெண் : உன் மூச்சுக்காற்று தேகம் கிள்ளும்…
மாலை தென்றலா…
ஆண் : கலந்திடவா…
பெண் : கரைந்திடவா… ஓ…
—BGM—
Notes : Adi Kaadhal Song Lyrics in Tamil. This Song from Doubles (2000). Song Lyrics penned by Vairamuthu. அடி காதல் பாடல் வரிகள்.
