பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதா | இளையராஜா | தர்மா |
Sembaruthi Poovukku Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : செம்பருத்திப் பூவுக்கு சேலையொன்னு செல்லம்மா…
நானிருக்கேன் கட்டிக்கோ நாணமென்ன சொல்லம்மா…
—BGM—
ஆண் : பூங்காத்து நெருப்பாச்சு…
அது உள்ளுக்குள்ளே கொதிப்பாச்சு…
குத்தாலக் குயிலே துணை நீதானம்மா…
துணை நீதானம்மா…
பெண் : செம்பருத்திப் பூவுக்கு சேலையொன்னு தாரியா…
கை புடிச்சு அழகா கட்டி விட வாரியா…
—BGM—
ஆண் : வட்ட வட்ட நிலாவுக்கு பொட்டு வச்சு…
வஞ்சி வஞ்சி வந்தா நெஞ்ச தொட்டு வச்சு…
குழு : ஒத்துக்கிட்டா தப்பு என்ன…
ஆண் : கொஞ்சம் வெட்டி வெட்டி சிட்டு போகையிலே…
வச்ச வச்ச கண்ண ஊரு வாங்கலையே…
குழு : வசியம் பண்ணுது உம் மனசு…
மெல்ல வளைச்சு போடுது உன் சிரிப்பு…
பெண் : உம் பேர எழுதி ஒரு நூறு தரம் படிச்சேன்…
உம் பேர எழுதி ஒரு நூறு தரம் படிச்சேன்…
பாய் விரிக்கும் பொழுது உன் நெனப்பு வருது…
என்னன்னு சொல்லுவேன் ராசா…
ஆண் : செம்பருத்திப் பூவுக்கு சேலையொன்னு செல்லம்மா…
நானிருக்கேன் கட்டிக்கோ நாணமென்ன சொல்லம்மா…
—BGM—
பெண் : பூங்காத்து நெருப்பாச்சு…
அது உள்ளுக்குள்ளே கொதிப்பாச்சு…
குத்தாலக் குயிலே துணை நீதானையா…
துணை நீதானையா…
பெண் : செம்பருத்திப் பூவுக்கு சேலையொன்னு தாரியா…
கை புடிச்சு அழகா கட்டி விட வாரியா…
—BGM—
பெண் : சின்னப் பட்டி தொட்டி எங்கும் உன் பேரையா…
நெத்திப் பொட்டு ஒண்ணு வச்சு நீ வாரியா…
குழு : பச்சக் கிளி வச்சு விடு…
பெண் : வில்லு வில்லு வண்டி கட்டி வந்தா என்ன…
இந்தப் பொண்ண கட்டிக்கிட்டு போனா என்ன…
குழு : மயக்கும் கண்ணிலே தந்தி கொடு…
அவன் மனசு போல நீ முந்தி கொடு…
ஆண் : சொன்னாலே மணக்கும்…
இந்த நெஞ்சுக்குள்ளே இனிக்கும்…
சொன்னாலே மணக்கும்…
இந்த நெஞ்சுக்குள்ளே இனிக்கும்…
ஆண் : மஞ்சத் தாலி இருக்கு…
மால கூட இருக்கு…
மங்கள வாத்தியம் வேணும்…
பெண் : செம்பருத்திப் பூவுக்கு சேலையொன்னு தாரியா…
கை புடிச்சு அழகா கட்டி விட வாரியா…
ஆண் : பூங்காத்து நெருப்பாச்சு…
அது உள்ளுக்குள்ளே கொதிப்பாச்சு…
குத்தாலக் குயிலே துணை நீதானம்மா…
துணை நீதானம்மா…
Notes : Sembaruthi Poovukku Song Lyrics in Tamil. This Song from Dharma (1998). Song Lyrics penned by Pulamaipithan. செம்பருத்திப் பூவுக்கு பாடல் வரிகள்.