Category Archives: அரவிந்தன்

அரவிந்தன் – Aravindhan (1997)

பூவாட்டம் காயாட்டம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காதல் மதிடி.எல். மகாராஜன் & சுவர்ணலதாயுவன் ஷங்கர் ராஜாஅரவிந்தன்

Poovattam Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூவாட்டம் காயாட்டம் கன்னித்தோட்டம்…
மானாட்டம் மீனாட்டம் துள்ளுதே…
பாலாட்டம் தேனாட்டம் பந்தலாட்டம்…
நெஞ்சுக்குள் போராட்டம் பண்ணுதே…

பெண் : ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கூட்டம்…
வாட்டம் பார்த்து கைதாவுதே…
சட்டந்திட்டம் சம்பந்தம் நீதி…
ஜாதி பூவும் கைதாகுதே…

பெண் : பூவாட்டம் காயாட்டம் கன்னித்தோட்டம்…
மானாட்டம் மீனாட்டம் துள்ளுதே…
பாலாட்டம் தேனாட்டம் பந்தலாட்டம்…
நெஞ்சுக்குள் போராட்டம் பண்ணுதே…

BGM

பெண் : ஆசை ஊறுது அந்தரங்கமா…
ஆடி காத்துக்கு பஞ்சு தப்புமா…

ஆண் : சேலை மூடுது மேகமூட்டமா…
தொட்டு ஒரசிட மின்னல் வெட்டுமா…

பெண் : வேல வெட்டிக்கு விடுமுறைதானா…
வீணா திரிஞ்சாலே காதல் வருமா…

ஆண் : வெட்டி வேருக்கு விளம்பரம் வேணாம்…
வாசம் எழுந்தாலே அடங்கிடுமா…

பெண் : மெட்டி அணிய விரலைத் தரவா…
மொட்டுத் தித்திக்க முத்தங்கள் இடவா…

ஆண் : பூவாட்டம் காயாட்டம் கன்னித்தோட்டம்…
மானாட்டம் மீனாட்டம் துள்ளுதே…
பாலாட்டம் தேனாட்டம் பந்தலாட்டம்…
நெஞ்சுக்குள் போராட்டம் பண்ணுதே…

BGM

ஆண் : மொட்டுத் தாமரை தத்தளிக்குமா…
சொட்டும் வேர்வையில் முக்குளிக்குமா…

பெண் : கட்டும் சேலைக்கு கப்பம் கட்டுமா…
கன்னப் பாறையில் சிற்பம் வெட்டுமா…

ஆண் : முத்தம் கொடுத்திட பனித்துளிதானா…
மச்சான் கொடுத்தாலே கசந்திடுமா…

பெண் : கட்டில் விளிம்புல தவிக்கிறேன் நாளா…
கட்டிப் பிடிச்சாலே கசந்திடுமா…

ஆண் : கள்ளி நெலவே காதல் மலரே…
பார்வை தீயில நெஞ்சுக்குள் குளிரே…

பெண் : பூவாட்டம் காயாட்டம் கன்னித்தோட்டம்…
மானாட்டம் மீனாட்டம் துள்ளுதே…
பாலாட்டம் தேனாட்டம் பந்தலாட்டம்…
நெஞ்சுக்குள் போராட்டம் பண்ணுதே…

ஆண் : ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கூட்டம்…
வாட்டம் பார்த்து கைதாவுதே…
சட்டம் திட்டம் சம்பந்தம் நீதி…
ஜாதி பூவும் கைதாகுதே…

ஆண் : பூவாட்டம் காயாட்டம் கன்னித்தோட்டம்…
மானாட்டம் மீனாட்டம் துள்ளுதே…
பாலாட்டம் தேனாட்டம் பந்தலாட்டம்…
நெஞ்சுக்குள் போராட்டம் பண்ணுதே…

BGM


Notes : Poovattam Song Lyrics in Tamil. This Song from Aravindhan (1997). Song Lyrics penned by Kadhal Mathi. பூவாட்டம் காயாட்டம் பாடல் வரிகள்.


ஈர நிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & மகாநதி ஷோபனாயுவன் ஷங்கர் ராஜாஅரவிந்தன்

Eera Nila Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே…
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே…
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ…
அழகே கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்…

பெண் : ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே…

BGM

பெண் : நீருக்கு நிறம் ஏது நேசத்தில் பேதம் வராது…
உன் அன்பில் அழுதாலும் கண்ணீர் இனிக்கும்…

பெண் : முள் மீது என் பாதை பூவாகும் உந்தன் பார்வை…
நீ பாடும் தாலாட்டில் சோகம் உறங்கும்…

பெண் : நம்மை விழி சேர்த்ததோ…
இல்லை விதி சேர்த்ததோ…
உள்ளம் ஒன்றானதே…
போதும் இன்பம் போதும்…

ஆண் : ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே…

BGM

ஆண் : தாயான பூமாது தோள் மீது சாய்ந்திடும் போது…
என் நெஞ்சில் பால் ஊரும் அன்பு தவிப்பு…

பெண் : தலைமுறை கண்டாலும் காணாது உந்தன் அன்பு…
எப்போதும் வேண்டும் உன் இன்ப அணைப்பு…

ஆண் : சேரும் நதி ரெண்டுதான்…
பாதை இனி ஒன்றுதான்…
வெள்ளை மழை மண்ணிலே…
கூடும் வண்ணம் சூடும்…

ஆண் & பெண் : ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே…

BGM


Notes : Eera Nila Song Lyrics in Tamil. This Song from Aravindhan (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. ஈர நிலா பாடல் வரிகள்.