Category Archives: இன்னிசை மழை

இன்னிசை மழை – Innisai Mazhai (1992)

வா வா கண்மணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஇன்னிசை மழை

Vaa Vaa Kanmani Song Lyrics in Tamil


BGM

ஆண் : வா வா கண்மணி… வா வா கண்மணி…
வா வா கண்மணி வாசல் தேடி வா…
வா வா கண்மணி வாசல் தேடி வா…
வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா…

பெண் : வா வா மன்னவா வாசல் தேடி வா…
வா வா மன்னவா வாசல் தேடி வா…
வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா…

ஆண் : வா வா கண்மணி…

BGM

பெண் : தொடங்கியது இசை மழை இங்கே…
தொடர்ந்து வந்த பகைவர்கள் எங்கே…
முழங்குவது சுதந்திர கீதம்…
வழங்குவது சுகம் தரும் நாதம்…

ஆண் : சுதிகளின் ஒலியை யார் சிறைகளில் அடைப்பது…
பெண் : சுரங்களை யார் அவன் கரங்களில் பிடிப்பது…

ஆண் : இசையின் வழி இதயங்கள் கூட…
இடையில் சில தடைகளை போட…
கடந்து வரும் கலைஞனின் பாட்டு…
தடுப்பதெவர் விலங்குகள் போட்டு…

பெண் : ஆயிரம் ரசிகர்கள் யாவரும் நம் வசம்…

ஆண் : ஆனந்த கீதத்தில் தோன்றிடும் பரவசம்…
வாவா வாவா அன்பே…

பெண் : வா வா மன்னவா வாசல் தேடி வா…
ஆண் : வா வா கண்மணி வாசல் தேடி வா…

BGM

ஆண் : இருவர் நெஞ்சில் பல வகை காயம்…
இசையில் அவை மறைந்திடும் மாயம்…
இரண்டு குயில் இணைந்திடும் நாளும்…
இரவு பகல் இசைத்திடும் கானம்…

பெண் : தேவனின் தீர்ப்பிது யார் இதை மறுப்பது…
ஆண் : காதல்தான் என்றுமே கடைசியில் ஜெயிப்பது…

பெண் : உனது நிழல் எனக்கில்லை என்று…
உயிரை விட நினைத்தது உண்டு…
உனது துணை கிடைத்தது இங்கு…
உயிரை விட உயர்ந்தது என்று…

ஆண் : ராகமும் தாளமும் ஓர் வகை மூலிகை…
சோகங்கள் தீர்ந்தன பூத்தது பூ நகை…
வாவா வாவா அன்பே…

BGM

ஆண் : வா வா கண்மணி வாசல் தேடி வா…
பெண் : வா வா மன்னவா வாசல் தேடி வா…

BGM

ஆண் : வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா…
பெண் : வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா…

ஆண் : வா வா கண்மணி வாசல் தேடி வா…
பெண் : வா வா மன்னவா வாசல் தேடி வா…


Notes : Vaa Vaa Kanmani Song Lyrics in Tamil. This Song from Innisai Mazhai (1992). Song Lyrics penned by Vaali. வா வா கண்மணி பாடல் வரிகள்.


அடி நேற்றிரவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஇன்னிசை மழை

Adi Netriravu Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ…
பெண் : இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ…

ஆண் : தித்தித்தது நெஞ்சம்…
பெண் : சம்சம் சம்…
ஆண் : தென்பட்டது கொஞ்சம்…
பெண் : சம்சம் சம்…

பெண் : உள்ளதெல்லாம் சொல்லித் தந்தேனே…
சொல்லியது பத்தாதோ…

ஆண் : அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ…
பெண் : இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ…

BGM

ஆண் : பத்து விரல் பட்டால் என்ன…
முத்த மழை இட்டால் என்ன…
பெண் : ஆஹா ஆஹா ஆஹா… பொன்னே மணியே…

ஆண் : பட்டு உடல் சுட்டால் என்ன…
வெட்கம் அதை விட்டால் என்ன…
பெண் : ஆஹா ஆஹா ஆஹா… அன்பே அமுதே…

ஆண் : கங்கை நதி நீராட கண்ணன் வரத்தான்…
பெண் : மங்கை மடி சீராட மன்னன் வரத்தான்…

ஆண் : ஒரு புதிய மயக்கம் உனக்கும் எனக்கும்…
கூடி வரும் நாள் இது நேற்றிரவு…

ஆண் : நேற்றிரவு… அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ…
பெண் : இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ…

ஆண் : தித்தித்தது நெஞ்சம்…
பெண் : சம்சம் சம்…
ஆண் : தென்பட்டது கொஞ்சம்…
பெண் : சம்சம் சம்…

பெண் : உள்ளதெல்லாம் சொல்லித் தந்தேனே…
சொல்லியது பத்தாதோ…

ஆண் : அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ…
பெண் : இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ…

BGM

பெண் : அந்தப்புர சந்தோஷங்கள்…
அர்த்த ஜாம சங்கீதங்கள்…
ஆண் : ஆஹா ஓஹோ ஏஹே… உன்னால் வந்ததே…

பெண் : தென்பொதிகைச் சாரல் என…
சின்ன மணித் தூரல் என…
ஆண் : ம்ஹும் ஆஹா ஓஹோ… இன்பம் தந்ததே…

பெண் : முன் பின் மனம் காணாத அன்பின் விளக்கம்…
ஆண் : முற்றுப் புள்ளி இல்லாமல் இங்கே கிடைக்கும்…

பெண் : இனி முதுமை வரையில் நமது உறவு…
ஓடி வரக் கூடுமே…

ஆண் : நேற்றிரவு… அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ…
பெண் : இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ…

ஆண் : தித்தித்தது நெஞ்சம்…
பெண் : சம்சம் சம்…
ஆண் : தென்பட்டது கொஞ்சம்…
பெண் : சம்சம் சம்…

பெண் : உள்ளதெல்லாம் சொல்லித் தந்தேனே…
சொல்லியது பத்தாதோ…

ஆண் : அடி நேற்றிரவு நடந்ததென்ன… ஆஹ ஹஹா ஹா…
பெண் : இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ…


Notes : Adi Netriravu Song Lyrics in Tamil. This Song from Innisai Mazhai (1992). Song Lyrics penned by Vaali. அடி நேற்றிரவு பாடல் வரிகள்.