பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | இன்னிசை மழை |
Adi Netriravu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ…
பெண் : இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ…
ஆண் : தித்தித்தது நெஞ்சம்…
பெண் : சம்சம் சம்…
ஆண் : தென்பட்டது கொஞ்சம்…
பெண் : சம்சம் சம்…
பெண் : உள்ளதெல்லாம் சொல்லித் தந்தேனே…
சொல்லியது பத்தாதோ…
ஆண் : அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ…
பெண் : இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ…
—BGM—
ஆண் : பத்து விரல் பட்டால் என்ன…
முத்த மழை இட்டால் என்ன…
பெண் : ஆஹா ஆஹா ஆஹா… பொன்னே மணியே…
ஆண் : பட்டு உடல் சுட்டால் என்ன…
வெட்கம் அதை விட்டால் என்ன…
பெண் : ஆஹா ஆஹா ஆஹா… அன்பே அமுதே…
ஆண் : கங்கை நதி நீராட கண்ணன் வரத்தான்…
பெண் : மங்கை மடி சீராட மன்னன் வரத்தான்…
ஆண் : ஒரு புதிய மயக்கம் உனக்கும் எனக்கும்…
கூடி வரும் நாள் இது நேற்றிரவு…
ஆண் : நேற்றிரவு… அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ…
பெண் : இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ…
ஆண் : தித்தித்தது நெஞ்சம்…
பெண் : சம்சம் சம்…
ஆண் : தென்பட்டது கொஞ்சம்…
பெண் : சம்சம் சம்…
பெண் : உள்ளதெல்லாம் சொல்லித் தந்தேனே…
சொல்லியது பத்தாதோ…
ஆண் : அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ…
பெண் : இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ…
—BGM—
பெண் : அந்தப்புர சந்தோஷங்கள்…
அர்த்த ஜாம சங்கீதங்கள்…
ஆண் : ஆஹா ஓஹோ ஏஹே… உன்னால் வந்ததே…
பெண் : தென்பொதிகைச் சாரல் என…
சின்ன மணித் தூரல் என…
ஆண் : ம்ஹும் ஆஹா ஓஹோ… இன்பம் தந்ததே…
பெண் : முன் பின் மனம் காணாத அன்பின் விளக்கம்…
ஆண் : முற்றுப் புள்ளி இல்லாமல் இங்கே கிடைக்கும்…
பெண் : இனி முதுமை வரையில் நமது உறவு…
ஓடி வரக் கூடுமே…
ஆண் : நேற்றிரவு… அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ…
பெண் : இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ…
ஆண் : தித்தித்தது நெஞ்சம்…
பெண் : சம்சம் சம்…
ஆண் : தென்பட்டது கொஞ்சம்…
பெண் : சம்சம் சம்…
பெண் : உள்ளதெல்லாம் சொல்லித் தந்தேனே…
சொல்லியது பத்தாதோ…
ஆண் : அடி நேற்றிரவு நடந்ததென்ன… ஆஹ ஹஹா ஹா…
பெண் : இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ…
Notes : Adi Netriravu Song Lyrics in Tamil. This Song from Innisai Mazhai (1992). Song Lyrics penned by Vaali. அடி நேற்றிரவு பாடல் வரிகள்.