பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | இளையராஜா | இளையராஜா | உன்னை சொல்லி குற்றமில்லை |
Kettu Pattanam Song Lyrics in Tamil
ஆண் : கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…
கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…
ஆண் : காவேரி வாசம் விட்டு…
கூவத்தின் வாசம் கண்டேன்…
காவேரி வாசம் விட்டு…
கூவத்தின் வாசம் கண்டேன்…
ஆண் : என் கதை அம்மம்மம்மா…
உன் கிட்டச் சொல்லட்டுமா…
ஆண் : கெட்டும் பட்டணம் போய்…
கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…
கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…
—BGM—
ஆண் : தவறு நெருங்காமல் தடமும் புரளாமல்…
நெருப்பாய் நான் இருந்தேன்…
தரும நெறி காக்கும் மனிதர் பல பேர்க்கு…
செருப்பாய் நான் இருந்தேன்…
ஆண் : கடமை நடை போடும் காவல் துறையோடு…
துருப்பாய் நான் இருந்தேன்…
களவு புரிவோரை உளவு பார்க்கின்ற…
பொறுப்பாய் நான் இருந்தேன்…
ஆண் : நல்லது நடக்கலே பொதுவாக…
நிம்மதி கலைந்தது மெதுவாக…
இங்கொரு குடும்பமே பலியாக…
என் மனம் எனக்குத்தான் பகையாக…
ஆண் : போயாச்சு என் தூக்கங்கள்…
வேராச்சு என் நோக்கங்கள்…
ஆண் : என் கதை அம்மம்மம்மா…
உன் கிட்டச் சொல்லட்டுமா…
ஆண் : கெட்டும் பட்டணம் போய்…
கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…
கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…
—BGM—
ஆண் : நியாயம் அழிந்தாலும் நீதி இறந்தாலும்…
நமக்கேன் என்றிருந்தேன்…
நாட்டை எவனாலும் திருத்த முடியாது…
என நான் தெரிந்து கொண்டேன்…
ஆண் : விழிகள் இமை மூடி…
விளைந்த பல கோடி…
கனவில் வாழ்ந்திருந்தேன்…
ஆண் : நேற்று நிலை வேறு…
இன்று நிலை வேறு…
அடி நான் கண்டு கொண்டேன்…
ஆண் : எண்ணிய வழி எல்லாம் கால் போச்சு…
இப்படித் தானம்மா நாள் போச்சு…
அப்படி சூழ்நிலை உருவாச்சு…
நான் அதன் கைகளில் விழுந்தாச்சு…
ஆண் :வாழ்க்கைதான் முன் போல் இல்லை…
குற்றம்தான் என் மேல் இல்லை…
ஆண் : என் கதை அம்மம்மம்மா…
இன்னமும் சொல்லணுமா…
ஆண் : கெட்டும் பட்டணம் போய்…
கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…
கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…
ஆண் : காவேரி வாசம் விட்டு…
கூவத்தின் வாசம் கண்டேன்…
காவேரி வாசம் விட்டு…
கூவத்தின் வாசம் கண்டேன்…
ஆண் : என் கதை அம்மம்மம்மா…
இன்னமும் சொல்லனுமா…
ஆண் : கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…
கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…
Notes : Kettu Pattanam Song Lyrics in Tamil. This Song from Unnai Solli Kuttramillai (1990). Song Lyrics penned by Vaali. கெட்டும் பட்டணம் பாடல் வரிகள்.