Category Archives: உன்னை சொல்லி குற்றமில்லை

உன்னை சொல்லி குற்றமில்லை – Unnai Solli Kutramillai (1990)

கெட்டும் பட்டணம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜாஇளையராஜாஉன்னை சொல்லி குற்றமில்லை

Kettu Pattanam Song Lyrics in Tamil


ஆண் : கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…
கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…

ஆண் : காவேரி வாசம் விட்டு…
கூவத்தின் வாசம் கண்டேன்…
காவேரி வாசம் விட்டு…
கூவத்தின் வாசம் கண்டேன்…

ஆண் : என் கதை அம்மம்மம்மா…
உன் கிட்டச் சொல்லட்டுமா…

ஆண் : கெட்டும் பட்டணம் போய்…
கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…
கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…

BGM

ஆண் : தவறு நெருங்காமல் தடமும் புரளாமல்…
நெருப்பாய் நான் இருந்தேன்…
தரும நெறி காக்கும் மனிதர் பல பேர்க்கு…
செருப்பாய் நான் இருந்தேன்…

ஆண் : கடமை நடை போடும் காவல் துறையோடு…
துருப்பாய் நான் இருந்தேன்…
களவு புரிவோரை உளவு பார்க்கின்ற…
பொறுப்பாய் நான் இருந்தேன்…

ஆண் : நல்லது நடக்கலே பொதுவாக…
நிம்மதி கலைந்தது மெதுவாக…
இங்கொரு குடும்பமே பலியாக…
என் மனம் எனக்குத்தான் பகையாக…

ஆண் : போயாச்சு என் தூக்கங்கள்…
வேராச்சு என் நோக்கங்கள்…

ஆண் : என் கதை அம்மம்மம்மா…
உன் கிட்டச் சொல்லட்டுமா…

ஆண் : கெட்டும் பட்டணம் போய்…
கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…
கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…

BGM

ஆண் : நியாயம் அழிந்தாலும் நீதி இறந்தாலும்…
நமக்கேன் என்றிருந்தேன்…
நாட்டை எவனாலும் திருத்த முடியாது…
என நான் தெரிந்து கொண்டேன்…

ஆண் : விழிகள் இமை மூடி…
விளைந்த பல கோடி…
கனவில் வாழ்ந்திருந்தேன்…

ஆண் : நேற்று நிலை வேறு…
இன்று நிலை வேறு…
அடி நான் கண்டு கொண்டேன்…

ஆண் : எண்ணிய வழி எல்லாம் கால் போச்சு…
இப்படித் தானம்மா நாள் போச்சு…
அப்படி சூழ்நிலை உருவாச்சு…
நான் அதன் கைகளில் விழுந்தாச்சு…

ஆண் :வாழ்க்கைதான் முன் போல் இல்லை…
குற்றம்தான் என் மேல் இல்லை…

ஆண் : என் கதை அம்மம்மம்மா…
இன்னமும் சொல்லணுமா…

ஆண் : கெட்டும் பட்டணம் போய்…
கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…
கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…

ஆண் : காவேரி வாசம் விட்டு…
கூவத்தின் வாசம் கண்டேன்…
காவேரி வாசம் விட்டு…
கூவத்தின் வாசம் கண்டேன்…

ஆண் : என் கதை அம்மம்மம்மா…
இன்னமும் சொல்லனுமா…

ஆண் : கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…
கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…


Notes : Kettu Pattanam Song Lyrics in Tamil. This Song from Unnai Solli Kuttramillai (1990). Song Lyrics penned by Vaali. கெட்டும் பட்டணம் பாடல் வரிகள்.


சொர்க்கத்தின் வாசற்படி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ். சித்ராஇளையராஜாஉன்னை சொல்லி குற்றமில்லை

Sorgathin Vaasapadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்…
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்…

ஆண் : பெண்ணல்ல நீ எனக்கு வண்ணக் களஞ்சியமே…
சின்ன மலர்க் கொடியே…
நெஞ்சில் சிந்தும் பனித் துளியே…

பெண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்…
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்…

BGM

ஆண் : உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள்…
ஒன்றிரண்டு அல்லவே…

பெண் : ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள்…
என்றும் இரண்டல்லவே…

ஆண் : சிற்றன்ன வாசலின் ஓவியமே…
சிந்தைக்குள் ஊறிய காவியமே…

பெண் : எங்கே நீ அங்கேதான் நானிருப்பேன்…
எப்போதும் நீயாடத் தோள் கொடுப்பேன்…

ஆண் : மோகத்தில் நான் படிக்கும் மாணிக்க வாசகமே
நான் சொல்லும் பாடலெல்லாம் நீ தந்த யாசகமே…

பெண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்…
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்…

பெண் : பெண்ணல்ல நான் உனக்கு வண்ணக் களஞ்சியமே…
சிந்தும் பனித் துளியே…
என்னைச் சேரும் இளங்கிளியே…

ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்…

BGM

பெண் : உன்னாலே நான் கொண்ட காயங்களை…
முன்னும் பின்னும் அறிவேன்…

ஆண் : கண்ணாலே நீ செய்யும் மாயங்களை…
இன்றும் என்றும் அறிவேன்…

பெண் : மின்சாரம் போல் எனை தாக்குகிறாய்…
மஞ்சத்தை போர்க்களம் ஆக்குகிறாய்…

ஆண் : கண்ணே உன் கண்ணென்ன வேலினமோ…
கை தொட்டால் மெய் தொட்டால் மீட்டிடுமோ…

பெண் : கோட்டைக்குள் நீ புகுந்து வேட்டைகள் ஆடுகிறாய்…
நானிங்கு தோற்று விட்டேன் நீ என்னை ஆளுகிறாய்…

ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்…
பெண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்…

ஆண் : பெண்ணல்ல நீ எனக்கு வண்ணக் களஞ்சியமே…
பெண் : சிந்தும் பனித் துளியே…
என்னைச் சேரும் இளங்கிளியே…

ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்…
பெண் : சொர்க்கத்தின் வாசற்படி…


Notes : Sorgathin Vaasapadi Song Lyrics in Tamil. This Song from Unnai Solli Kuttramillai (1990). Song Lyrics penned by Vaali. சொர்க்கத்தின் வாசற்படி பாடல் வரிகள்.