Category Archives: தாலாட்டு பாடவா

வராது வந்த நாயகன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழி & எஸ். ஜானகிஇளையராஜாதாலாட்டு பாடவா

Varaathu Vantha Song Lyrics in Tamil


ஆண் : முதாக ராத்த மோதகம்…
சதா விமுக்தி சாதகம்…
கலா தறாவ தம் சகம்…
விலாசி லோக ரக்ஷகம்…
அனாயகைக நாயகம்…
வினாசி தேப்ர தைத்யகம்…

பெண் : நதாசு பாசு நாஷ்யகம்…
நமாமி தம் விநாயகம்…
முதாக ராத்த மோதகம்…
சதா விமுக்தி சாதகம்…

பெண் : வராது வந்த நாயகன்…
ஒரே சிறந்த ஓர் வரன்…

BGM

பெண் : வராது வந்த நாயகன்…
ஒரே சிறந்த ஓர் வரன்…
தராதரம் புரிந்தவன்…
நிரந்தரம் நிறைந்தவன்…

பெண் : வரம் தரும் உயர்ந்தவன்…
கரம் கரம் இணைந்தவன்…
இவன் தலைவி நாயகன்…

பெண் : வராது வந்த நாயகன்…
ஒரே சிறந்த ஓர் வரன்…
தராதரம் புரிந்தவன்…
நிரந்தரம் நிறைந்தவன்…

BGM

ஆண் : தொடாமலும் படாமலும் உலாவும் காதல் வாகனம்…
வராமலும் தராமலும் விடாது இந்த வாலிபம்…

பெண் : உன்னோடுதான் பின்னோடுதான் வந்தாடும் இந்த மோகனம்…
கையோடுதான் மெய்யோடுதான் கொஞ்சாமல் என்ன தாமதம்…

ஆண் : உன் பார்வை யாவும் நூதனம்…
பெண்பாவை நீயும் சீதனம்…

பெண் : உன் வார்த்தை அன்பின் சாசனம்…
பெண் உள்ளம் உந்தன் ஆசனம்…

ஆண் : அள்ளாமலும் கிள்ளாமலும் தள்ளாடும் இந்த பூவனம்…

பெண் : வராது வந்த நாயகன்…
ஒரே சிறந்த ஓர் வரன்…
தராதரம் புரிந்தவன்…
நிரந்தரம் நிறைந்தவன்…

ஆண் : வரம் தரும் உயர்ந்தவன்…
கரம் கரம் இணைந்தவன்…
இவன் தலைவி நாயகன்…

பெண் : வராது வந்த நாயகன்…
ஒரே சிறந்த ஓர் வரன்…

ஆண் : தராதரம் புரிந்தவன்…
நிரந்தரம் நிறைந்தவன்…

BGM

பெண் : கல்யாணமும் வைபோகமும்…
கொண்டாடும் நல்ல நாள் வரும்…
அந்நாளிலே பொன்னாளிலே…
என் மாலை உந்தன் தோள் வரும்…

ஆண் : சல்லாபமும் உல்லாசமும்…
கண் காணும் நேரம் ஷோபனம்…
சொல்லாமலும் கொள்ளாமலும்…
திண்டாடும் பாவம் பெண்மனம்…

பெண் : இந்நேரம் அந்த ஞாபகம்…
உண்டாக நீயும் காரணம்…

ஆண் : கண்ணார நாமும் காணலாம்…
செவ்வாழை பந்தல் தோரணம்…

பெண் : என் ஆசையும் உன் ஆசையும்…
அந்நாளில்தானே பூரணம்…

ஆண் : வராது வந்த நாயகன்…
ஒரே சிறந்த ஓர் வரன்…
தராதரம் புரிந்தவன்…
நிரந்தரம் நிறைந்தவன்…

பெண் : வரம் தரும் உயர்ந்தவன்…
கரம் கரம் இணைந்தவன்…
இவன் தலைவி நாயகன்…

ஆண் : வராது வந்த நாயகன்…
ஒரே சிறந்த ஓர் வரன்…

பெண் : தராதரம் புரிந்தவன்…
நிரந்தரம் நிறைந்தவன்…


Notes : Varaathu Vantha Song Lyrics in Tamil. This Song from Thalattu Padava (1990). Song Lyrics penned by Vaali. வராது வந்த நாயகன் பாடல் வரிகள்.


வெண்ணிலவுக்கு வானத்தை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்அருண்மொழி & எஸ். ஜானகிஇளையராஜாதாலாட்டு பாடவா

Vennilavukku Vaanatha Song Lyrics in Tamil


ஆண் : வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா…
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா…

BGM

ஆண் : வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா…
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா…
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா…
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா…

ஆண் : தென்றலே கொஞ்சம் நீ கேளு…
இந்த சேதிய அங்கு நீ கூறு…
ஏ… தென்றலே கொஞ்சம் நீ கேளு…
இந்த சேதிய அங்கு நீ கூறு…
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது…

ஆண் : வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா…
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா…

BGM

பெண் : உன்னை விட சொந்தம் எது…
அன்பை விட சொர்க்கம் எது…
உன்னைவிட்டு நெஞ்சம் இது…
எங்கே வாழப் போகின்றது…

ஆண் : கண்ணைத் தொட்டு வாழும் இமை…
என்றும் தனியாகாதம்மா…
உன்னையன்றி என் ஜீவன்தான்…
இங்கே இனி வாழாதம்மா…

பெண் : உன்னோடு இல்லாத என் வாழ்வு…
எப்போதும் ஏது ஏது…
ஆண் : ஒன்றான பின்னாலும் கண்மூட…
நேரங்கள் ஏது ஏது…
பெண் : இது வானம் என வாழும் இனி மாறாது…

ஆண் : வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா…
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா…
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா…
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா…

BGM

ஆண் : சிந்தும் மழைச் சாரல் விழ…
அங்கம் அதில் மோகம் எழ…
சொந்தம் ஒரு போர்வை தர…
சொர்க்கம் அது நேரில் வர…

பெண் : கன்னம் மது தேனைத் தர…
கண்ணன் அதை நேரில் பெற…
கன்னிக் குயில் தோளில் வர…
இன்பம் சுகம் இங்கே வர…

ஆண் : எந்நாளும் இல்லாத எண்ணங்கள்…
முன்னோட ஏக்கம் கூட…
பெண் : என்னுள்ளம் காணாத வண்ணங்கள்…
வந்தாட தூக்கம் ஓட…
ஆண் : அலை போல மனம் ஓட புதுப் பண் பாட…

பெண் : வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா…
இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா…
வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா…
இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா…

பெண் : தென்றலே கொஞ்சம் நீ கேளு…
இந்த சேதிய அங்கு நீ கூறு…
ஏ… தென்றலே கொஞ்சம் நீ கேளு…
இந்த சேதிய அங்கு நீ கூறு…
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது…

பெண் : வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா…
இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா…


Notes : Vennilavukku Vaanatha Song Lyrics in Tamil. This Song from Thalattu Padava (1990). Song Lyrics penned by Gangai Amaran. வெண்ணிலவுக்கு வானத்தை பாடல் வரிகள்.


Neethana Neethana Song Lyrics in Tamil

நீதானா நீதானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகி & அருண்மொழிஇளையராஜாதாலாட்டு பாடவா

Neethana Neethana Song Lyrics in Tamil


BGM

பெண் : நீதானா நீதானா நெஞ்சே நீதானா…
நீ இன்றி நானேதான் இங்கே வாழ்வேனா…

பெண் : அன்பே அன்பே எந்தன் அன்பே…
வாழும் ஜீவன் நீதான் அன்பே…
துணை நீயே அன்பே…

பெண் : நீதானா நீதானா நெஞ்சே நீதானா…
நீ இன்றி நானேதான் இங்கே வாழ்வேனா…

BGM

பெண் : காவிரியும் வழி மறந்து…
வேறு திசை நடப்பதில்லை…
கன்னி இளம் நினைவுகளை…
காதல் மனம் மறப்பதில்லை…

பெண் : காதல் அலை வீசும் கடல்தான் மனது…
காலம் பல காலம் இது வாழுவது…

பெண் : தூங்காமல் என் கண்கள் வாடும் பொழுது…
தோள் மீது சாய்ந்தாட ஏங்கியது…
நீ இன்றி நானேது…
நேசமோடு வாழும் மாது…

பெண் : நீதானா நீதானா நெஞ்சே நீதானா…
ஆண் : நீ இன்றி நானேதான் இங்கே வாழ்வேனா…

ஆண் : அன்பே அன்பே எந்தன் அன்பே…
வாழும் ஜீவன் நீதான் அன்பே…
துணை நீயே அன்பே…

ஆண் : நீதானா நீதானா நெஞ்சே நீதானா…
நீ இன்றி நானேதான் இங்கே வாழ்வேனா…

BGM

ஆண் : கூவி வரும் புதுக் குயிலின்…
குரல் வழியே ஒரு துயரம்…
பாடி வரும் மொழிதனிலே…
பாதியிலே ஒரு சலனம்…

ஆண் : ஓடும் நதி நீரில் மலர் பூப்பதில்லை…
உண்மை இதை கண்டும் மனம் கேட்பதில்லை…

ஆண் : காலங்கள் நேரங்கள் பாலம் அமைக்கும்…
கையோடு கையென்று சேர்ந்திருக்கும்…
வாடாதே வாடாதே வாசம் இந்த பூவைத் தேடும்…

ஆண் : நீதானா நீதானா நெஞ்சே நீதானா…
பெண் : நீ இன்றி நானேதான் இங்கே வாழ்வேனா…

ஆண் : அன்பே அன்பே எந்தன் அன்பே…
பெண் : வாழும் ஜீவன் நீதான் அன்பே…
துணை நீயே அன்பே…

பெண் : நீதானா நீதானா நெஞ்சே நீதானா…
ஆண் : நீ இன்றி நானேதான் இங்கே வாழ்வேனா…


Notes : Neethana Neethana Song Lyrics in Tamil. This Song from Thalattu Padava (1990). Song Lyrics penned by Gangai Amaran. நீதானா நீதானா பாடல் வரிகள்.