Category Archives: உன் கண்ணில் நீர் வழிந்தால்

உன் கண்ணில் நீர் வழிந்தால் – Un Kannil Neer Vazhindal (1985)

கண்ணில் என்ன கார்காலம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஉன் கண்ணில் நீர் வழிந்தால்

Kannil Enna Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணில் என்ன கார்காலம்…
கன்னங்களில் நீர்க்கோலம்…
மனமே நினைவே மறந்துவிடு…
துணை நான் அழகே துயரம்விடு…

ஆண் : விழியில் விழும் துளி…
என் மார்பில் வீழ்ந்ததே கண்ணே…
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா…
நியாயமா பெண்ணே… ஓ…

ஆண் : கண்ணில் என்ன கார்காலம்…
கன்னங்களில் நீர்க்கோலம்…

BGM

பெண் : நானே உன் சுமையாக ஏன் வந்தேன்…
சிறகெல்லாம் சிதையாக வாழ்கின்றேன்…
நான் உறங்கும் நாள் வேண்டும்…
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்…

பெண் : நான் உறங்கும் நாள் வேண்டும்…
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்…
என் கண்ணில் நீர் வேண்டும்…
சுகமாக அழ வேண்டும்…

ஆண் : கண்ணில் என்ன கார்காலம்…
கன்னங்களில் நீர்க்கோலம்…

BGM

பெண் : இருள் மூடும் கடலோடு நானிங்கே…
என் தோணி கரை சேரும் நாளெங்கே…
பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம்…
பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம்…
நிழலாக நீ வந்தால் இது போதும் பேரின்பம்…

ஆண் : கண்ணில் என்ன கார்காலம்…
கன்னங்களில் நீர்க்கோலம்…
மனமே நினைவே மறந்துவிடு…
துணை நான் அழகே துயரம்விடு…

ஆண் : விழியில் விழும் துளி…
என் மார்பில் வீழ்ந்ததே கண்ணே…
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா…
நியாயமா பெண்ணே… ஓ…

ஆண் : கண்ணில் என்ன கார்காலம்…
கன்னங்களில் நீர்க்கோலம்…


Notes : Kannil Enna Song Lyrics in Tamil. This Song from Un Kannil Neer Vazhindal (1985). Song Lyrics penned by Vairamuthu. கண்ணில் என்ன கார்காலம் பாடல் வரிகள்.