Category Archives: ராணுவவீரன்

ராணுவவீரன் – Ranuva Veeran (1981)

மல்லிகப்பூ வாசத்திலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மலேசியா வாசுதேவன் & எம்.எஸ்.விஸ்வநாதன்எம்.எஸ்.விஸ்வநாதன்ராணுவவீரன்

Malligai Poo Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ… மல்லிகப்பூ வாசத்திலே…
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி…
செங்கரும்பு அங்கங்களை கண்ணிரெண்டும்…
தின்னுவிட பாக்குதடி… ஆஹ்ஹ் ஏ…

ஆண் : தண்ணியப் போட்டதும் கன்னியப் பாத்ததும்…
எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகிறதே…
தண்ணியப் போட்டதும் கன்னியப் பாத்ததும்…
எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகிறதே…

ஆண் : ஓ… மல்லிகப்பூ வாசத்திலே…
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி…
மல்லுக்கட்ட தோணுதடி…

BGM

ஆண் : மோகம் கங்கையென நெஞ்சினில் பொங்குது கேளு…
தேகம் தீயெனவே காயுது நீ தொட்டுப் பாரு…

ஆண் : திருப்பதி லட்டாட்டம் கருப்பட்டி வட்டாட்டம்…
தேராட்டம் வந்தாளய்யா சிங்காரப் பொண்ணு…

ஆண் : திருப்பதி லட்டாட்டம்… ஆ…
கருப்பட்டி வட்டாட்டம்… ஆஹ் ஆ…
தேராட்டம் வந்தாளய்யா சிங்காரப் பொண்ணு…

ஆண் : முன்னாலே போகையிலே… அய்யோ…
முந்தானை ஆடயிலே… ஆ…
பின்னாலே ஓடுதய்யா என்னோட கண்ணு…

ஆண் : மாதுளை கன்னங்கள் மாம்பழ வண்ணங்கள்…
தாமரை மொட்டுக்கள் சந்தோசம் உண்டாக்குதே…

ஆண் : ஓ… மல்லிகப்பூ வாசத்திலே…
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி…
மல்லுக்கட்ட தோணுதடி… ஹா…

BGM

ஆண் : ஆடு மின்னலிடை துள்ளிட தாளங்கள் போடு…

BGM

ஆண் : ஆடு மின்னலிடை துள்ளிட தாளங்கள் போடு…
பாடு மாலையிடும் மாப்பிள்ளை நான் என்று பாடு…

ஆண் : ஆத்தோரம் தீரத்திலே… ஆ…
காத்தாடும் நேரத்திலே… ஆ…
சேர்த்தாட நானும் வந்தேன் எங்கேடி போறே…

ஆண் : ஆளான காலம் முதல்… அய்யோ…
தாளாமல் ஏங்குகிறேன்…
அஞ்சாமல் கொஞ்சம் நில்லு அச்சாரம் தாரேன்…

ஆண் : ரத்தின கம்பள சித்திரை மேனியில்…
முத்திரை தந்திட மெத்தைகள் போடட்டுமா…

ஆண் : ஓ… மல்லிகப்பூ வாசத்திலே…
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி…
செங்கரும்பு அங்கங்களை கண்ணிரெண்டும்…
தின்னுவிட பாக்குதடி… ஆஹ்ஹ் ஏ…

குழு : தண்ணியப் போட்டதும் கன்னியப் பாத்ததும்…
எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகிறதே…
தண்ணியப் போட்டதும் கன்னியப் பாத்ததும்…
எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகிறதே…


Notes : Malligai Poo Song Lyrics in Tamil. This Song from Raanuva Veeran (1981). Song Lyrics penned by Pulamaipithan. மல்லிகப்பூ வாசத்திலே பாடல் வரிகள்.


சொன்னால்தானே தெரியும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி. சைலஜாஎம்.எஸ்.விஸ்வநாதன்ராணுவவீரன்

Sonalthane Theriyum Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொன்னால்தானே தெரியும்…
என்னை கண்ணால் பாரு புரியும்…
அழகி உனக்கு கோபம் எதற்கு…
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு…

ஆண் : சொன்னால் தானே தெரியும்…
என்னை கண்ணால் பாரு புரியும்…
அழகி உனக்கு கோபம் எதற்கு…
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு…

BGM

பெண் : மான்விழி தங்கை மணமகளாக…
மாப்பிள்ளை பார்த்தாயே…
தேன்மொழி மங்கை திருமணம் காண…
சிந்தையில் மறந்தாயே…

பெண் : மான்விழி தங்கை மணமகளாக…
மாப்பிள்ளை பார்த்தாயே…
தேன்மொழி மங்கை திருமணம் காண…
சிந்தையில் மறந்தாயே…
சிந்தையில் மறந்தாயே…

ஆண் : பூமழை வான் மேகம் பூமியை மறக்காது…
பூமழை வான் மேகம் பூமியை மறக்காது…
காலங்கள் கனிந்தாலே இன்பமும் மலர்ந்திடும் தெரியாதோ…
இன்பமும் மலர்ந்திடும் தெரியாதோ…

பெண் : கண்ணா உன்னை தெரியும்…
உன் காதல் வேஷம் புரியும்…
உனது சிரிப்பு மனதில் துடிப்பு…
இன்று அறிந்தேன் உந்தன் நடிப்பு…

BGM

பெண் : கோழியுமிங்கே சேவலுமிங்கே…
குடும்பத்தை பாரிங்கே…
ஜோடிகளின்றி பறவைகள் கூட…
வாழ்வதுதான் எங்கே…

பெண் : கோழியுமிங்கே சேவலுமிங்கே…
குடும்பத்தை பாரிங்கே…
ஜோடிகளின்றி பறவைகள் கூட…
வாழ்வது தான் எங்கே…
வாழ்வது தான் எங்கே…

ஆண் : பறவையின் நிலை வேறு…
மனிதனின் கதை வேறு…
பறவையின் நிலை வேறு…
மனிதனின் கதை வேறு…

ஆண் : மனிதர்களினம் போலே…
பறவைகள் கடமையை அறியாது…
பறவைகள் கடமையை அறியாது…

ஆண் : சொன்னால்தானே தெரியும்…
என்னை கண்ணால் பாரு புரியும்…

BGM

ஆண் : நதியினில் வெள்ளம் வருகிற போது…
நாணலை நீ பாரு…
நாணலை போலே வாழவும் தெரிந்தால்…
வாழ்க்கையில் துயரேது…
வாழ்க்கையில் துயரேது…

பெண் : நாணலும் நானில்லை நானொரு பெண்பிள்ளை…
வாலிபம் போனாலே வாழ்க்கையில் வசந்தமும் வாராது…
வாழ்க்கையில் வசந்தமும் வாராது

ஆண் : சொன்னால்தானே தெரியும்…
என்னை கண்ணால் பாரு புரியும்…
அழகி உனக்கு கோபம் எதற்கு…
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு…


Notes : Sonalthane Theriyum Song Lyrics in Tamil. This Song from Raanuva Veeran (1981). Song Lyrics penned by Pulamaipithan. சொன்னால்தானே தெரியும் பாடல் வரிகள்.