| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| புலமைப்பித்தன் | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி. சைலஜா | எம்.எஸ்.விஸ்வநாதன் | ராணுவவீரன் |
Sonalthane Theriyum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சொன்னால்தானே தெரியும்…
என்னை கண்ணால் பாரு புரியும்…
அழகி உனக்கு கோபம் எதற்கு…
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு…
ஆண் : சொன்னால் தானே தெரியும்…
என்னை கண்ணால் பாரு புரியும்…
அழகி உனக்கு கோபம் எதற்கு…
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு…
—BGM—
பெண் : மான்விழி தங்கை மணமகளாக…
மாப்பிள்ளை பார்த்தாயே…
தேன்மொழி மங்கை திருமணம் காண…
சிந்தையில் மறந்தாயே…
பெண் : மான்விழி தங்கை மணமகளாக…
மாப்பிள்ளை பார்த்தாயே…
தேன்மொழி மங்கை திருமணம் காண…
சிந்தையில் மறந்தாயே…
சிந்தையில் மறந்தாயே…
ஆண் : பூமழை வான் மேகம் பூமியை மறக்காது…
பூமழை வான் மேகம் பூமியை மறக்காது…
காலங்கள் கனிந்தாலே இன்பமும் மலர்ந்திடும் தெரியாதோ…
இன்பமும் மலர்ந்திடும் தெரியாதோ…
பெண் : கண்ணா உன்னை தெரியும்…
உன் காதல் வேஷம் புரியும்…
உனது சிரிப்பு மனதில் துடிப்பு…
இன்று அறிந்தேன் உந்தன் நடிப்பு…
—BGM—
பெண் : கோழியுமிங்கே சேவலுமிங்கே…
குடும்பத்தை பாரிங்கே…
ஜோடிகளின்றி பறவைகள் கூட…
வாழ்வதுதான் எங்கே…
பெண் : கோழியுமிங்கே சேவலுமிங்கே…
குடும்பத்தை பாரிங்கே…
ஜோடிகளின்றி பறவைகள் கூட…
வாழ்வது தான் எங்கே…
வாழ்வது தான் எங்கே…
ஆண் : பறவையின் நிலை வேறு…
மனிதனின் கதை வேறு…
பறவையின் நிலை வேறு…
மனிதனின் கதை வேறு…
ஆண் : மனிதர்களினம் போலே…
பறவைகள் கடமையை அறியாது…
பறவைகள் கடமையை அறியாது…
ஆண் : சொன்னால்தானே தெரியும்…
என்னை கண்ணால் பாரு புரியும்…
—BGM—
ஆண் : நதியினில் வெள்ளம் வருகிற போது…
நாணலை நீ பாரு…
நாணலை போலே வாழவும் தெரிந்தால்…
வாழ்க்கையில் துயரேது…
வாழ்க்கையில் துயரேது…
பெண் : நாணலும் நானில்லை நானொரு பெண்பிள்ளை…
வாலிபம் போனாலே வாழ்க்கையில் வசந்தமும் வாராது…
வாழ்க்கையில் வசந்தமும் வாராது
ஆண் : சொன்னால்தானே தெரியும்…
என்னை கண்ணால் பாரு புரியும்…
அழகி உனக்கு கோபம் எதற்கு…
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு…
Notes : Sonalthane Theriyum Song Lyrics in Tamil. This Song from Raanuva Veeran (1981). Song Lyrics penned by Pulamaipithan. சொன்னால்தானே தெரியும் பாடல் வரிகள்.
