Category Archives: ராசாவே உன்னெ நம்பி

ராசாவே உன்னெ நம்பி – Raasave Unnai Nambi (1988)

சீதைக்கோரு ராவணந்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோஇளையராஜாராசாவே உன்னெ நம்பி

Seethaikoru Ravananthaan Song Lyrics in Tamil


BGM

ஆண் : சீதைக்கோரு ராவணந்தான் தீக்குளிக்க தேதி வச்சான்…
ராமன் அந்த தேதியிலே ஊருக்கெல்லாம் நீதி வச்சான்…
சந்தேகம் தீர்ந்ததுன்னா பொறக்குமய்யா நியாயம்…
சங்கடங்கள் சேர்ந்ததுன்னா வாழ்க்கை எல்லாம் காயம்…
சந்தேகம் தீர்ந்ததுன்னா பொறக்குமய்யா நியாயம்…
சங்கடங்கள் சேர்ந்ததுன்னா வாழ்க்கை எல்லாம் காயம்…

ஆண் : சீதைக்கோரு ராவணந்தான் தீக்குளிக்க தேதி வச்சான்…
ராமன் அந்த தேதியிலே ஊருக்கெல்லாம் நீதி வச்சான்…

BGM

ஆண் : அன்பாலே அடிச்ச அடி எப்போதும் வலித்ததில்லை…
இப்போதும் பொறந்தவலி என்னான்னு தெரியவில்லை…
பூ மேலே முள்ளு பட்டா போய் உறைக்க வழக்குமில்ல…
எம்மேலே குத்தமில்ல இந்தப்புள்ள சின்னப்புள்ள…

ஆண் : கண்ணாடி போல தெளிவான மனம்தானே…

BGM

ஆண் : கல் மீது விழுந்து உடைஞ்சாச்சு அடி மானே…

BGM

ஆண் : சந்தேக திரை விழுந்து மறைஞ்ஜதையா நீதி…
சம்சார வாழ்க்கையிலே முடிஞ்ஜதையா பாதி…

ஆண் : சீதைக்கோரு ராவணந்தான் தீக்குளிக்க தேதி வச்சான்…
ராமன் அந்த தேதியிலே ஊருக்கெல்லாம் நீதி வச்சான்…
சந்தேகம் தீர்ந்ததுன்னா பொறக்குமய்யா நியாயம்…
சங்கடங்கள் சேர்ந்ததுன்னா வாழ்க்கை எல்லாம் காயம்…
சந்தேகம் தீர்ந்ததுன்னா பொறக்குமய்யா நியாயம்…
சங்கடங்கள் சேர்ந்ததுன்னாவாழ்க்கை எல்லாம் காயம்…

BGM

ஆண் : முன்னால பிரிவுருந்தா பின்னால உறவிருகும்…
இப்போது துயர் இருந்தா தப்பாம சுகம் இருக்கும்…
ராமனோட சீதை நின்னா காட்டு வழி கஷ்ட்டப்பட்டா…
ஆனாலும் ராமன்கிட்ட எப்போதும் இஷ்ட்டப்பட்டா…

ஆண் : புண்ணாச்சு மனசு இளம் வயசு அது பாவம்…

BGM

ஆண் : அண்ணாச்சி உனக்கு இவன் மேலேஎன்ன கோபம்…

BGM

ஆண் : கையால அடிச்ச அடி வலிக்கவில்லை ராசா…
சொல்லால அடிச்சுபுட்டா துடைச்சுவிடு லேசா…

ஆண் : சீதைக்கோரு ராவணந்தான் தீக்குளிக்க தேதி வச்சான்…
ராமன் அந்த தேதியிலே ஊருக்கெல்லாம் நீதி வச்சான்…
சந்தேகம் தீர்ந்ததுன்னா பொறக்குமய்யா நியாயம்…
சங்கடங்கள் சேர்ந்ததுன்னா வாழ்க்கை எல்லாம் காயம்…
சந்தேகம் தீர்ந்ததுன்னா பொறக்குமய்யா நியாயம்…
சங்கடங்கள் சேர்ந்ததுன்னா வாழ்க்கை எல்லாம் காயம்…


Notes : Seethaikoru Ravananthaan Song Lyrics in Tamil. This Song from Raasave Unnai Nambi (1988). Song Lyrics penned by Gangai Amaran. சீதைக்கோரு ராவணந்தான் பாடல் வரிகள்.


காலை நேர ராகமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.எஸ். சித்ராஇளையராஜாராசாவே உன்னெ நம்பி

Kaalai Nera Raagame Song Lyrics in Tamil


BGM

பெண் : காலை நேர ராகமே…
காற்றில் சேர்ந்து கேட்குமே…

பெண் : புள்ளினங்கள் மெல்லிசையும்…
தென்றல் இடும் இன்னிசையும்…
வந்து வந்து இந்த நெஞ்சை சொந்தமென பாடுமே…

பெண் : காலை நேர ராகமே…
காற்றில் சேர்ந்து கேட்குமே…

BGM

பெண் : கட்டிலிலே சொல்லி தந்த ராகங்களை…
காலையிலே எண்ணி கொள்ள ஆனந்தமே…
மெத்தையிலே போட்ட விதை…
தொட்டிலிலே பூத்து வரும்…

பெண் : இஷ்ட பட்டு கேட்ட கதை…
இன்பங்களை சேர்த்து வரும்…
அன்பு மனம் ஒன்றை ஒன்று கொண்டாடும்…
அந்த சுகம் வந்து நின்றதே…
இன்று முதல் என்னுலகில் சந்தோசம்…
இன்னிசையை பாடுகின்றதே…

BGM

பெண் : காலை நேர ராகமே…
காற்றில் சேர்ந்து கேட்குமே…

BGM

பெண் : அன்பு என்னும் சின்ன சின்ன நூல் எடுத்து…
துன்பங்களை எண்ணி எண்ணி கோர்த்து வைத்தேன்…

பெண் : போட்டு வைத்தேன் கோலம் ஒன்று…
உன் மனதில் நானும் இன்று…
கேட்கும் வரம் இன்று ஒன்று…
காலமெல்லாம் நாமும் ஒன்று…

பெண் : பாசத்துக்கு இன்றுமுதல் வெள்ளோட்டம்…
பந்தமென்னும் பாதை தன்னிலே…
நேசம் அதில் அன்பு என்னும் முன்னோட்டம்…
நித்தம் வந்து ஒட்டி கொண்டதே…

BGM

பெண் : காலை நேர ராகமே…
காற்றில் சேர்ந்து கேட்குமே…

பெண் : புள்ளினங்கள் மெல்லிசையும்…
தென்றல் இடும் இன்னிசையும்…
வந்து வந்து இந்த நெஞ்சை சொந்தமென பாடுமே…

பெண் : காலை நேர ராகமே…
காற்றில் சேர்ந்து கேட்குமே…


Notes : Kaalai Nera Raagame Song Lyrics in Tamil. This Song from Raasave Unnai Nambi (1988). Song Lyrics penned by Gangai Amaran. காலை நேர ராகமே பாடல் வரிகள்.