Category Archives: நட்பு

நட்பு – Natpu (1986)

அதிகாலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிஇளையராஜாநட்பு

Adhikaalai Song Lyrics in Tamil


BGM

பெண் : அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…
அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…

ஆண் : காதல் சொன்ன காகிதம்…
பூவாய்ப் போனது…
வானில் போன தேவதை…
வாழ்த்துச் சொன்னது…

பெண் : ஒரு தத்தை கடிதத்தை…
தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க…

பெண் : அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…

ஆண் : அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…

BGM

ஆண் : அன்பே வா வா அணைக்கவா…
நீ நிலவுக்குப் பிறந்தவளா…

பெண் : போதை வண்டே பொறுத்திரு…
இன்று மலருக்குத் திறப்பு விழா…

ஆண் : உன்னை வந்து பாராமல்…
தூக்கம் தொல்லையே…

பெண் : உன்னை வந்து பார்த்தாலும்…
தூக்கம் இல்லையே…

ஆண் : ஒரு பாரம் உடை மீறும்…
நிறம் மாறும் கனியே…

பெண் : இதழோரம் அமுதூறும் பரிமாறும் இனியே…
ஆண் : அடி தப்பி போகக்கூடாது…

ஆண் : அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…

பெண் : அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…

BGM

பெண் : தென்றல் வந்து தீண்டினால்…
இந்தத் தளிர் என்ன தடை சொல்லுமா…

ஆண் : பெண்மை பாரம் தாங்குமா…
அந்த இடை ஒரு விடை சொல்லுமா…

பெண் : என்னைச் சேர்ந்த உன்னுள்ளம்…
ஈரம் மாறுமா…

ஆண் : தங்கம் என்ன சுட்டாலும்…
சாரம் போகுமா…

பெண் : இளங்கோதை ஒரு பேதை…
இவள் பாதை உனது…

ஆண் : மலர் மாலை அணியாமல்…
உறங்காது மனது…

பெண் : இது போதும் சொர்க்கம் வேறேது…

பெண் : அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…

ஆண் : அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…

பெண் : காதல் சொன்ன காகிதம்…
பூவாய்ப் போனது…
வானில் போன தேவதை…
வாழ்த்துச் சொன்னது…

ஆண் : ஒரு தத்தை கடிதத்தை…
தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க…

ஆண் : அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…

ஆண் & பெண் : அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…


Notes : Adhikaalai Song Lyrics in Tamil. This Song from Natpu (1986). Song Lyrics penned by Vairamuthu. அதிகாலை பாடல் வரிகள்.


ஆசை வச்சேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. சுசீலாஇளையராஜாநட்பு

Aasa Vachen Unmela Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆசை வச்சேன் உன் மேல…
மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே…
ஆசை வச்சேன் உன் மேல…
மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே…

பெண் : ஆதரிச்சா நல்லதையா…
இல்ல அரளி வெதை உள்ளதையா…
அரளி வெதை உள்ளதையா…

பெண் : ஆசை வச்சேன் உன் மேல…
உன் மேல…

BGM

பெண் : சண்ட போட்ட கெண்டை மீனு…
ரெண்டும் சேந்து ஒண்ணாச்சு…
ரெண்டும் சேந்து கொஞ்சும் போது…
ஏரித் தண்ணி தேனாச்சு…

பெண் : தூண்டியிலே சிக்கவில்ல…
சுத்தி வர கொக்கும் இல்ல…
மீனு ரெண்டும் தூங்கயில…
அக்கம் பக்கம் யாரும் இல்ல…

பெண் : ரெண்டு மீனும் கண் முழிச்சா…
ஏரியில தண்ணி இல்ல…
ஏரியில தண்ணி இல்ல…

பெண் : ஆசை வச்சேன் உன் மேல…
மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே…
ஆசை வச்சேன் உன் மேல…
உன் மேல…

BGM

பெண் : தென்னந்தோப்பில் என்னப் பாத்து…
சொன்ன வார்த்த என்னாச்சு…
அப்பன் பேசும் பேச்சக் கேட்டு…
காது ரெண்டும் புண்ணாச்சு…

பெண் : ரெக்கை எல்லாம் வெட்டிப்புட்டு…
நிக்குதையா பச்சக் கிளி…
ஊருக்குள்ள ஓமலிப்பு…
வாடுதையா வஞ்சிக் கொடி…

பெண் : கட்டிலிலே தேங்கி நிக்கும்…
கண்ணீர் மட்டும் ரெண்டு படி…
கண்ணீர் மட்டும் ரெண்டு படி…

பெண் : ஆசை வச்சேன் உன் மேல…
மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே…
ஆசை வச்சேன் உன் மேல…
மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே…

பெண் : ஆதரிச்சா நல்லதையா…
இல்ல அரளி வெதை உள்ளதையா…
அரளி வெதை உள்ளதையா…

பெண் : ஆசை வச்சேன் உன் மேல…
உன் மேல…


Notes : Aasa Vachen Unmela Song Lyrics in Tamil. This Song from Natpu (1986). Song Lyrics penned by Vairamuthu. ஆசை வச்சேன் பாடல் வரிகள்.