பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | கே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகி | இளையராஜா | நட்பு |
Adhikaalai Song Lyrics in Tamil
—BGM—
பெண் : அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…
அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…
ஆண் : காதல் சொன்ன காகிதம்…
பூவாய்ப் போனது…
வானில் போன தேவதை…
வாழ்த்துச் சொன்னது…
பெண் : ஒரு தத்தை கடிதத்தை…
தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க…
பெண் : அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…
ஆண் : அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…
—BGM—
ஆண் : அன்பே வா வா அணைக்கவா…
நீ நிலவுக்குப் பிறந்தவளா…
பெண் : போதை வண்டே பொறுத்திரு…
இன்று மலருக்குத் திறப்பு விழா…
ஆண் : உன்னை வந்து பாராமல்…
தூக்கம் தொல்லையே…
பெண் : உன்னை வந்து பார்த்தாலும்…
தூக்கம் இல்லையே…
ஆண் : ஒரு பாரம் உடை மீறும்…
நிறம் மாறும் கனியே…
பெண் : இதழோரம் அமுதூறும் பரிமாறும் இனியே…
ஆண் : அடி தப்பி போகக்கூடாது…
ஆண் : அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…
பெண் : அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…
—BGM—
பெண் : தென்றல் வந்து தீண்டினால்…
இந்தத் தளிர் என்ன தடை சொல்லுமா…
ஆண் : பெண்மை பாரம் தாங்குமா…
அந்த இடை ஒரு விடை சொல்லுமா…
பெண் : என்னைச் சேர்ந்த உன்னுள்ளம்…
ஈரம் மாறுமா…
ஆண் : தங்கம் என்ன சுட்டாலும்…
சாரம் போகுமா…
பெண் : இளங்கோதை ஒரு பேதை…
இவள் பாதை உனது…
ஆண் : மலர் மாலை அணியாமல்…
உறங்காது மனது…
பெண் : இது போதும் சொர்க்கம் வேறேது…
பெண் : அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…
ஆண் : அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…
பெண் : காதல் சொன்ன காகிதம்…
பூவாய்ப் போனது…
வானில் போன தேவதை…
வாழ்த்துச் சொன்னது…
ஆண் : ஒரு தத்தை கடிதத்தை…
தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க…
ஆண் : அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…
ஆண் & பெண் : அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…
Notes : Adhikaalai Song Lyrics in Tamil. This Song from Natpu (1986). Song Lyrics penned by Vairamuthu. அதிகாலை பாடல் வரிகள்.