பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | இளையராஜா & கே.எஸ். சித்ரா | இளையராஜா | கிராமத்து மின்னல் |
Rettai Kili Song Lyrics in Tamil
ஆண் : ஏ… விடியாத பொழுதாச்சு…
அடியே விழி கூட சுமையாச்சு…
கண்ணீரு கடலாச்சு… உன் எண்ணம் படகாச்சு…
நீ உள்ள மனம்தானே எப்போதும் சிறையாச்சு…
—BGM—
பெண் : ரெட்டக்கிளி சுத்தி வந்த தோப்புக்குள்ள…
ஒத்தையில இந்தக்கிளி சுத்துதம்மா…
பெண் : தனியா இது இருந்தா மனம் உறங்காது…
துணையே உன்னை இழந்தா இங்கு வாழ்வேது…
பெண் : என் ஆசை ராசா அன்பென்ன லேசா…
என் ஆசை ராசா இவ அன்பென்ன லேசா…
பெண் : ரெட்டக்கிளி சுத்தி வந்த தோப்புக்குள்ள…
ஒத்தையில இந்தக்கிளி சுத்துதம்மா…
—BGM—
பெண் : காத்தாலே ஆடி வரும் சிறு ஓலைக் காத்தாடி…
கயிறு அறுந்து போனதென்ன ராசா உன் கையாலே…
காத்தாலே ஆடி வரும் சிறு ஓலைக் காத்தாடி…
கயிறு அறுந்து போனதென்ன ராசா உன் கையாலே…
ஆண் : ஏ… தேனே ஒன்னாலதானே புண்ணாகித்தான்…
போனேன் இப்போது நானே…
ஆண் : பூவான நெஞ்சம் இது வீணாச்சு உன்னால…
பூ மாலை வெயிலில சருகாச்சு தன்னால…
ஆண் : என் வீட்டு ரோசா அன்பென்ன லேசா…
என் வீட்டு ரோசா என் அன்பென்ன லேசா…
பெண் : ரெட்டக்கிளி சுத்தி வந்த தோப்புக்குள்ள…
—BGM—
ஆண் : கண்ணீரு வந்து வந்து காவேரி போலாச்சு…
கண்ணான பொண் மனசு கல்லாகிப் போயாச்சு…
கண்ணீரு வந்து வந்து காவேரி போலாச்சு…
கண்ணான பொண் மனசு கல்லாகிப் போயாச்சு…
பெண் : பூங்காத்து இப்ப என்னப் பாத்து வதைக்கிறது…
என்ன என்ன கூத்து தண்ணி கொஞ்சம் ஊத்து…
ஆண் : போராடும் நெஞ்சுக்குள்ளே ஏதேதோ உண்டாச்சு…
நீரோடும் கங்கை நதி ஏன் இப்போ ரெண்டாச்சு…
பெண் : என் ஆசை ராசா அன்பென்ன லேசா…
என் ஆசை ராசா இவ அன்பென்ன லேசா…
பெண் : ரெட்டக்கிளி சுத்தி வந்த தோப்புக்குள்ள…
ஒத்தையில இந்தக்கிளி சுத்துதம்மா…
பெண் : தனியா இது இருந்தா மனம் உறங்காது…
துணையே உன்னை இழந்தா இங்கு வாழ்வேது…
பெண் : என் ஆசை ராசா அன்பென்ன லேசா…
என் ஆசை ராசா இவ அன்பென்ன லேசா…
Notes : Rettai Kili Song Lyrics in Tamil. This Song from Gramatthu Minnal (1987). Song Lyrics penned by Gangai Amaran. ரெட்டக்கிளி பாடல் வரிகள்.