பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | எஸ். ஜானகி | இளையராஜா | ஈட்டி (1985) |
Orunaal Oru Pozhuthu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஒரு நாள் ஒரு பொழுது உன நான் பிரிஞ்சதில்ல…
உயிரில் உயிர வச்ச ஒறவ மறந்ததில்ல…
தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன…
தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன…
பெண் : அட வாய்யா மடியில சாஞ்சு…
என் ராசா ஒரு முறை தூங்கு…
பெண் : ஒரு நாள் ஒரு பொழுது உன நான் பிரிஞ்சதில்ல…
—BGM—
பெண் : தாளமலக் காட்டிலே…
தந்தனத்தோம் பாட்டிலே…
தொட்டு வெளையாண்டதும்…
தோளில் வந்து சாஞ்சதும்…
பெண் : வானம் அறியும் மேகம் அறியும்…
துள்ளி ஓடும் மானும் அறியும்…
பெண் : ஆகாசம் பூலோகம்…
ஆகாசம் பூலோகம் சாட்சி சொல்லும் கேட்போமா…
அய்யா அது என்ன பொய்யா…
அய்யா அது என்ன பொய்யா…
பெண் : ஒரு நாள் ஒரு பொழுது உன நான் பிரிஞ்சதில்ல…
—BGM—
பெண் : நந்தவனம் தீஞ்சதா…
காவேரிதான் காஞ்சதா…
நம்ம சொந்தம் போனதா…
கட்டுக் கதை ஆனதா…
பெண் : பாயில் படுத்த காதல் மனசு…
நோயில் துடிச்சா தாயின் மனசு…
பெண் : ராசாவே வாடாதே…
ராசாவே வாடாதே ஊஞ்சல் நானும் போடுவேன்…
ராசா ஒரு முறை தூங்கு…
என் ராசா ஒரு முறை தூங்கு…
பெண் : ஒரு நாள் ஒரு பொழுது உன நான் பிரிஞ்சதில்ல…
உயிரில் உயிர வெச்ச ஒறவ மறந்ததில்ல…
தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன…
தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன…
பெண் : அட வாய்யா மடியில சாஞ்சு…
என் ராசா ஒரு முறை தூங்கு…
பெண் : ஒரு நாள் ஒரு பொழுது உன நான் பிரிஞ்சதில்ல…
Notes : Orunaal Oru Pozhuthu Song Lyrics in Tamil. This Song from Eetti (1985). Song Lyrics penned by Pulamaipithan. ஒரு நாள் பாடல் வரிகள்.