Category Archives: மைதிலி என்னை காதலி

ராக்கால வேளையில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிடி.ராஜேந்தர்மைதிலி என்னை காதலி

Rakkaala Velaiyila Song Lyrics in Tamil


BGM

பெண் : ராக்கால வேளையில…
ராசா நீ வாடயில…
ராக்கால வேளையில…
ராசா நீ வாடயில…

பெண் : இள மேனி சூடாகுது…
இதம் தேடி போராடுது…
இள மேனி சூடாகுது…
அஹ் இதம் தேடி போராடுது…

ஆண் : ராக்கால வேளையிலே…
என் ராசாத்தி ஆடையிலே…
என் மேனி சூடாகுது…
இடம் தேடி போராடுது…

BGM

பெண் : தேக வில்லை வளைத்தவனே…
மோக கணை தொடுத்தவனே…
வஞ்சி என்னை வதைப்பவனே…
கொஞ்சி என்னை சிதைப்பவனே…

ஆண் : உணர்வுகள் தவிக்குது…
உன்னை இங்கு அழைக்குது அம்மாடியோ…
பெண் : ஹாஆ…
ஆண் : உதடுகள் துடிக்குது உள்ளமோ…
வெடிக்குது அம்மாடியோ…

பெண் : ராக்கால வேளையில…
ஆண் : ஆஆஹ்… ஆஹா…
பெண் : ராசா நீ வாடயில…
ஆண் : ஆஆஹ்… ஆஹா…

ஆண் : என் மேனி சூடாகுது…
பெண் : ஆஹ்…
ஆண் : இடம் தேடி போராடுது…

BGM

ஆண் : ஹே… தேவதையின் திருவடியில்…
தவம் கிடந்து வரம் கேட்கவோ…
மாதுளையின் மலர் மேனியில்…
தவழ்ந்து வந்து சுகம் சேர்க்கவோ…

பெண் : பூஜையை தொடர்ந்திட…
பூச்சரம் உதிர்ந்திட அம்மாடியோ…
ஆண் : ஆஆஅ…
பெண் : ஆவலை தூண்டிட…
காவலை தாண்டிட அம்மாடியோ…

ஆண் : ராக்கால வேளையிலே…
பெண் : ஆஆஹ்… ஆஹா…
ஆண் : என் ராசாத்தி ஆடையிலே…
பெண் : ஆஆஹ்… ஆஹா…

பெண் : இள மேனி சூடாகுது…
ஆண் : ஆஆஹ்…
பெண் : இதம் தேடி போராடுது…

ஆண் : ராக்கால வேளையிலே…
பெண் : ராசா நீ வாடயில…
ஆண் : என் மேனி சூடாகுது…
பெண் : இதம் தேடி போராடுது…


Notes : Rakkaala Velaiyila Song Lyrics in Tamil. This Song from Mythili Ennai Kaathali (1986). Song Lyrics penned by T. Rajendar. ராக்கால வேளையில பாடல் வரிகள்.


Oru Ponmaanai Song Lyrics in Tamil

ஒரு பொன் மானை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்எஸ். பி. பாலசுப்ரமணியம்டி.ராஜேந்தர்மைதிலி என்னை காதலி

Oru Ponmaanai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்…
ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்…

ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது…
சங்கீதம் நீ பாடு…
சலங்கை இட்டாள் ஒரு மாது…
சங்கீதம் நீ பாடு…

ஆண் : அவள் விழிகளில் ஒரு பழரசம்…
அதை காண்பதில் எந்தன் பரவசம்…

ஆண் : ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்…
ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்…

ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது…
சங்கீதம் நீ பாடு…

BGM

ஆண் : தடாகத்தில் மீன் இன்று காமத்தில் தடுமாறி…
தாமரை பூ மீது விழுந்தனவோ…
இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்…
படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ…

ஆண் : காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துக்கிளி…
கால்கள் முளைத்ததென்று நடைப்போட்டாள்…

BGM

ஆண் : ஜதி என்னும் மழையினிலே ரதி இவள் நனைந்திடவே…
அதில் பரதம்தான் துளிர் விட்டு…
பூப்போல பூத்தாட மனம் எங்கும் மணம் வீசுது…
எந்தன் மனம் எங்கும் மணம் வீசுது…

ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது…
சங்கீதம் நீ பாடு…

BGM

ஆண் : சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்…
அரங்கேற அதுதானே உன் கன்னம்…
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்…
நடத்திடும் வானவில் உன் வண்ணம்…

ஆண் : இடையின் பின் அழகில் இரண்டு குடத்தை கொண்ட…
புதிய தம்பூராவை மீட்டி சென்றாள்…

BGM

ஆண் : கலை நிலா மேனியிலே சுளை பலா சுவையை கண்டேன்…
அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி…
மதி தன்னில் கவி சேர்க்குது…
எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது…

ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது…
சங்கீதம் நீ பாடு…
அவள் விழிகளில் ஒரு பழரசம்…
அதை காண்பதில் எந்தன் பரவசம்…

ஆண் : ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்…
ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்…

ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது…
சங்கீதம் நீ பாடு…


Notes : Oru Ponmaanai Song Lyrics in Tamil. This Song from Mythili Ennai Kaathali (1986). Song Lyrics penned by T. Rajendar. ஒரு பொன் மானை பாடல் வரிகள்.


நானும் உந்தன் உறவை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்எஸ். பி. பாலசுப்ரமணியம்டி.ராஜேந்தர்மைதிலி என்னை காதலி

Naanum Undhan Uravai Song Lyrics in Tamil


BGM

ஆண் : நானும் உந்தன் உறவை…
நாடி வந்த பறவை…

BGM

ஆண் : நானும் உந்தன் உறவை…
நாடி வந்த பறவை…
நானும் உந்தன் உறவை…
நாடி வந்த பறவை…

ஆண் : தேடி வந்த வேளை…
வேடன் செய்த லீலை…
தேடி வந்த வேளை…
வேடன் செய்த லீலை…

ஆண் : சிறகுகள் உடைந்ததடி…
குருதியில் நனைந்ததடி…
உயிரே… ஏ… உயிரே… ஏ…

BGM

ஆண் : இதய கதவுகளை திறக்க ஓடி வந்தேன்…
சிறையில் சிக்கிக் கொண்டேன் ஏனம்மா…

BGM

ஆண் : வலையில் விழுந்த உன்னை மீட்க ஓடி வந்தேன்…
வழியில் மாட்டிக் கொண்டேன் நானம்மா…

BGM

ஆண் : காதல் நெஞ்சங்களை கசக்கி பிழிவதிலே…
இனிமை காணுவது விதியம்மா…

BGM

ஆண் : அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்திலே…
துவைத்து சிதைப்பது சதியம்மா…

BGM

ஆண் : உடல்களை அழித்திட…
ஊருக்குள் பலருண்டு பாரம்மா…
உள்ளத்தை பிரித்திட…
பாருக்குள் எவருண்டு சொல்லம்மா…

ஆண் : நானும் உந்தன் உறவை…
நாடி வந்த பறவை…

BGM

ஆண் : வீணை ஏரிகிறது…
விரல்கள் வேகிறது…
நாதம் மீட்டுகிறேன் வாராயோ…

BGM

ஆண் : புயலும் வலுக்கிறது…
கடலும் கொதிக்கிறது…
படகை செலுத்துகிறேன் வாராயோ…

BGM

ஆண் : எண்ணை இழந்த பின்னும்…
எரிய துடிக்க எண்ணும்…
தீபம் போல மனம் அலைகிறது…

BGM

ஆண் : என்னை இழந்த பின்னும்…
உன்னை காக்க எண்ணும்…
இதய அரங்கம் இங்கு அழைக்கிறது…

BGM

ஆண் : வாழ்வது ஒரு முறை…
உனக்கென வாழ்வதே முழுமை என்பேன்…
சாவது ஒரு முறை…
உனக்கென சாவதே பெருமை என்பேன்…

ஆண் : நானும் உந்தன் உறவை…
நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை…
வேடன் செய்த லீலை…

ஆண் : சிறகுகள் உடைந்ததடி…
குருதியில் நனைந்ததடி…
உயிரே… ஏ… உயிரே… ஏ…

BGM


Notes : Naanum Undhan Uravai Song Lyrics in Tamil. This Song from Mythili Ennai Kaathali (1986). Song Lyrics penned by T. Rajendar. நானும் உந்தன் உறவை பாடல் வரிகள்.