ஒரு பொன் மானை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்எஸ். பி. பாலசுப்ரமணியம்டி.ராஜேந்தர்மைதிலி என்னை காதலி

Oru Ponmaanai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்…
ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்…

ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது…
சங்கீதம் நீ பாடு…
சலங்கை இட்டாள் ஒரு மாது…
சங்கீதம் நீ பாடு…

ஆண் : அவள் விழிகளில் ஒரு பழரசம்…
அதை காண்பதில் எந்தன் பரவசம்…

ஆண் : ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்…
ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்…

ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது…
சங்கீதம் நீ பாடு…

BGM

ஆண் : தடாகத்தில் மீன் இன்று காமத்தில் தடுமாறி…
தாமரை பூ மீது விழுந்தனவோ…
இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்…
படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ…

ஆண் : காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துக்கிளி…
கால்கள் முளைத்ததென்று நடைப்போட்டாள்…

BGM

ஆண் : ஜதி என்னும் மழையினிலே ரதி இவள் நனைந்திடவே…
அதில் பரதம்தான் துளிர் விட்டு…
பூப்போல பூத்தாட மனம் எங்கும் மணம் வீசுது…
எந்தன் மனம் எங்கும் மணம் வீசுது…

ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது…
சங்கீதம் நீ பாடு…

BGM

ஆண் : சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்…
அரங்கேற அதுதானே உன் கன்னம்…
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்…
நடத்திடும் வானவில் உன் வண்ணம்…

ஆண் : இடையின் பின் அழகில் இரண்டு குடத்தை கொண்ட…
புதிய தம்பூராவை மீட்டி சென்றாள்…

BGM

ஆண் : கலை நிலா மேனியிலே சுளை பலா சுவையை கண்டேன்…
அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி…
மதி தன்னில் கவி சேர்க்குது…
எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது…

ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது…
சங்கீதம் நீ பாடு…
அவள் விழிகளில் ஒரு பழரசம்…
அதை காண்பதில் எந்தன் பரவசம்…

ஆண் : ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்…
ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்…

ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது…
சங்கீதம் நீ பாடு…


Notes : Oru Ponmaanai Song Lyrics in Tamil. This Song from Mythili Ennai Kaathali (1986). Song Lyrics penned by T. Rajendar. ஒரு பொன் மானை பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top