பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஆபாவாணன் | எஸ்.என். சுரேந்தர் & பி.எஸ். சசிரேகா | மனோஜ் கியான் | ஊமை விழிகள் |
Maamarathu Poo Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா…
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா…
கண்ணே புது நாடகம்…
விரைவில் அரங்கேறிடும்…
ஆண் : மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா…
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா…
—BGM—
பெண் : கூந்தலில் பூச்சூடினேன்…
கூடலையே நாடினேன்…
கூடிவிட மனது துடிக்குது… ஓஓ…
கூடவந்த நாணம் தடுக்குது…
பெண் : கூந்தலில் பூச்சூடினேன்…
கூடலையே நாடினேன்…
கூடிவிட மனது துடிக்குது… ஓஓ…
கூடவந்த நாணம் தடுக்குது…
ஆண் : கடலோடு பிறந்தாலும் இந்த அலைகள் ஏங்குது…
உடலோடு பிறந்தாலும் இந்த மனமும் ஏங்குது…
ஆண் : மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா…
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா…
—BGM—
ஆண் : சித்திரப்பூவிழி பாரம்மா…
சிற்றிடை மெலிந்ததேனம்மா…
பத்துவிரல் அணைக்கத்தானம்மா… ஓஓ…
முத்து ரதம் எனக்குத்தானம்மா…
ஆண் : சித்திரப்பூவிழி பாரம்மா…
சிற்றிடை மெலிந்ததேனம்மா…
பத்துவிரல் அணைக்கத்தானம்மா… ஓஓ…
முத்து ரதம் எனக்குத்தானம்மா…
பெண் : உனக்காக உயிர் வாழ இந்த பிறவி எடுத்தது…
உயிரோடு உயிரான இந்த உறவு நிலைத்தது…
பெண் : மாமரத்து பூ எடுத்து மங்கை என்னை தேடிவா…
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி ஓடிவா…
கண்ணா புது நாடகம்…
விரைவில் அரங்கேறட்டும்…
ஆண் & பெண் : மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடலாம்…
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடலாம்…
—BGM—
Notes : Maamarathu Poo Song Lyrics in Tamil. This Song from Oomai Vizhihal (1986). Song Lyrics penned by Abavanan. மாமரத்து பூ எடுத்து பாடல் வரிகள்.