பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பஞ்சு அருணாச்சலம் | மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகி | இளையராஜா | மண்வாசனை |
Aanantha Thenn Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…
—BGM—
ஆண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…
ஆயிரம் சீர்கொண்டு வந்தேன் அம்மா…
காதல் வேகம் அந்தசோகம் கண்டுகொள்ள…
கொஞ்சம் இங்கே வந்தால் என்னம்மா…
பெண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…
ஆயிரம் சீர்கொண்டு வந்தவரே…
காதல் வேகம் அந்த சோகம் கண்டு கொள்ள…
மஞ்சள் போட்டு தந்தால் என்னையா…
ஆண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…
—BGM—
ஆண் : நீ நடந்து போகையிலே…
பூ நடந்து போகக்கண்டேன்…
நீ சிரிக்கும் பொன்னழகில்…
பால் வடிந்து ஓட கண்டேன்…
பெண் : முத்தோ மணியோ எல்லாம் கவிதை…
எங்கே கற்றுக்கொண்ட வித்தை இது…
ஆண் : சொல்லித்தந்தது உந்தன் பார்வை…
அள்ளித்தந்தது உந்தன் ஜாடை…
பெண் : அன்பில் ஆடும் உள்ளம் கண்டேன்…
ஆண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…
ஆயிரம் சீர்கொண்டு வந்தேன் அம்மா…
—BGM—
பெண் : நேரமுண்டு காலமுண்டு மாலையிட சொந்தமுண்டு…
மாலையிட்ட பின்னால் இந்த சோலைக்கிளி கொஞ்சும் வந்து…
ஆண் : பொன்னே பூவே எல்லாம் குறும்பு…
எங்கே கற்றுக்கொண்ட வித்தை இது…
பெண் : அச்சம்தந்தது உந்தன் வேகம்…
வெட்கம் தந்தது உந்தன் மோகம்…
ஆண் : அன்பில் ஆடும் உள்ளம் கண்டேன்…
பெண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…
ஆயிரம் சீர்கொண்டு வந்தவரே…
காதல் வேகம் அந்த சோகம் கண்டு கொள்ள…
மஞ்சள் போட்டு தந்தால் என்னையா…
ஆண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…
ஆயிரம் சீர்கொண்டு வந்தேன் அம்மா…
Notes : Aanantha Thenn Song Lyrics in Tamil. This Song from Mann Vasanai (1983). Song Lyrics penned by Panchu Arunachalam. ஆனந்த தேன் பாடல் வரிகள்.