Category Archives: மண்வாசனை 

ஆனந்த தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஇளையராஜாமண்வாசனை 

Aanantha Thenn Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…

BGM

ஆண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…
ஆயிரம் சீர்கொண்டு வந்தேன் அம்மா…
காதல் வேகம் அந்தசோகம் கண்டுகொள்ள…
கொஞ்சம் இங்கே வந்தால் என்னம்மா…

பெண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…
ஆயிரம் சீர்கொண்டு வந்தவரே…
காதல் வேகம் அந்த சோகம் கண்டு கொள்ள…
மஞ்சள் போட்டு தந்தால் என்னையா…

ஆண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…

BGM

ஆண் : நீ நடந்து போகையிலே…
பூ நடந்து போகக்கண்டேன்…
நீ சிரிக்கும் பொன்னழகில்…
பால் வடிந்து ஓட கண்டேன்…

பெண் : முத்தோ மணியோ எல்லாம் கவிதை…
எங்கே கற்றுக்கொண்ட வித்தை இது…

ஆண் : சொல்லித்தந்தது உந்தன் பார்வை…
அள்ளித்தந்தது உந்தன் ஜாடை…
பெண் : அன்பில் ஆடும் உள்ளம் கண்டேன்…

ஆண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…
ஆயிரம் சீர்கொண்டு வந்தேன் அம்மா…

BGM

பெண் : நேரமுண்டு காலமுண்டு மாலையிட சொந்தமுண்டு…
மாலையிட்ட பின்னால் இந்த சோலைக்கிளி கொஞ்சும் வந்து…

ஆண் : பொன்னே பூவே எல்லாம் குறும்பு…
எங்கே கற்றுக்கொண்ட வித்தை இது…

பெண் : அச்சம்தந்தது உந்தன் வேகம்…
வெட்கம் தந்தது உந்தன் மோகம்…
ஆண் : அன்பில் ஆடும் உள்ளம் கண்டேன்…

பெண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…
ஆயிரம் சீர்கொண்டு வந்தவரே…
காதல் வேகம் அந்த சோகம் கண்டு கொள்ள…
மஞ்சள் போட்டு தந்தால் என்னையா…

ஆண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…
ஆயிரம் சீர்கொண்டு வந்தேன் அம்மா…


Notes : Aanantha Thenn Song Lyrics in Tamil. This Song from Mann Vasanai (1983). Song Lyrics penned by Panchu Arunachalam. ஆனந்த தேன் பாடல் வரிகள்.


Poththi Vachcha Song Lyrics in Tamil

பொத்தி வச்ச மல்லிக மொட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாமண்வாசனை 

Poththi Vachcha Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொத்தி வச்ச மல்லிக மொட்டு…
பூத்திருச்சு வெக்கத்த விட்டு…
பேசி பேசி ராசியானதே…

ஆண் : மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே…
ரொம்ப நாளானதே…

பெண் : பொத்தி வச்ச மல்லிக மொட்டு…
பூத்திருச்சு வெக்கத்த விட்டு…
பொத்தி வச்ச மல்லிக மொட்டு…
பூத்திருச்சு வெக்கத்த விட்டு…
பேசி பேசி ராசியானதே…

பெண் : மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே…
ஆண் : ஹா ஹான்…
பெண் : ரொம்ப நாளானதே…
ஆண் : ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

BGM

ஆண் : மாலையிட காத்து அல்லி இருக்கு…
தாலிசெய்ய நேத்து சொல்லி இருக்கு…

பெண் : இது சாயங்காலமா மடிசாயும் காலமா…
ஆண் : முல்ல பூசூடு மெல்ல பாய்போடு…

பெண் : அட வாட காத்து சூடுயேத்துது…

ஆண் : பொத்தி வச்ச மல்லிக மொட்டு…
பூத்திருச்சு வெக்கத்த விட்டு…

பெண் : பேசி பேசி ராசியானதே…
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே…
ரொம்ப நாளானதே…

BGM

பெண் : ஆத்துக்குள்ள நேத்து உன்ன நெனச்சேன்…
வெக்க நேரம் போக மஞ்ச குளிச்சேன்…

ஆண் : கொஞ்சம் மறஞ்சு பாா்க்கவா…
இல்ல முதுகு தேய்க்கவா…

பெண் : அது கூடாது… இது தாங்காது…
ஆண் : சின்ன காம்புதான பூவதாங்குது…

பெண் : பொத்தி வச்ச மல்லிக மொட்டு…
பூத்திருச்சு வெக்கத்த விட்டு…

ஆண் : பேசி பேசி ராசியானதே…
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே…
ரொம்ப நாளானதே…

பெண் : ஆளானதே ரொம்ப நாளானதே…


Notes : Poththi Vachcha Song Lyrics in Tamil. This Song from Mann Vasanai (1983). Song Lyrics penned by Panchu Arunachalam. பொத்தி வச்ச மல்லிக மொட்டு பாடல் வரிகள்.