Category Archives: தில்லானா மோகனாம்பாள்

Marainthirunthu Parkum Song Lyrics in Tamil

மறைந்திருந்து பார்க்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாகே.வி. மகாதேவன்தில்லானா மோகனாம்பாள்

Marainthirunthu Parkum Song Lyrics in Tamil


BGM

பெண் : மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன… ஸ்வாமி…
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…

பெண் : அழகர் மலை அழகா…
இந்த சிலை அழகா…
என்று மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…

பெண் : அழகர் மலை அழகா…
இந்த சிலை அழகா…
என்று மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…

பெண் : நவரசமும்…

BGM

பெண் : முகத்தில் நவரசமும்…
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்…
செக்க சிவந்திருக்கும் இதழில் கனி ரசமும்…
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்…
செக்க சிவந்திருக்கும் இதழில் கனி ரசமும்…
கண்டு…

பெண் : மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…

BGM

பெண் : எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்…
உன்னை என்னையல்லால் வேறு யார் அறிவார்…
எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்…
உன்னை என்னையல்லால் வேறு யார் அறிவார்…

பெண் : பாவையின் பதம் காண நாணமா…
பாவையின் பதம் காண நாணமா…
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா…
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா…

பெண் : மாலவா… வேலவா… மாயவா…
ஷண்முகா…

பெண் : மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…

BGM

பெண் : நாதத்திலே தலைவன் குழல் கேட்டேன்…
அந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன்…
நாதத்திலே தலைவன் குழல் கேட்டேன்…
அந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன்…

பெண் : மோகத்திலே என்னை மூழ்க வைத்து…
மோகத்திலே என்னை மூழ்க வைத்து…
ஒரு ஓரத்திலே நின்று கள்வனை போல்…
ஒரு ஓரத்திலே நின்று கள்வனை போல்…

பெண் : மாலவா… வேலவா… மாயவா…
ஷண்முகா…

பெண் : மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…

BGM

பெண் : மானாட மலராட மதி ஆட நதி ஆட…
மங்கை இவள் நடனமாட…
வானாட மண்ணாட கொடி ஆட இடை ஆட…
வஞ்சி இவள் கைகள் ஆட…

பெண் : சுவையோடு நானாட…
என்னை நாடி இதுவேளை இரவினில்…
துணையாக ஓடி வருவாய்…

பெண் : தூயனே மாலவா மாயனே வேலவா…
என்னை ஆளும் ஷண்முகா வா…

பெண் : மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…

பெண் : அழகர் மலை அழகா…
இந்த சிலை அழகா…
என்று மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…

BGM


Notes : Marainthirunthu Parkum Song Lyrics in Tamil. This Song from Thillana Mohanambal (1968). Song Lyrics penned by Kannadasan. மறைந்திருந்து பார்க்கும் பாடல் வரிகள்.


நலந்தானா நலந்தானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாகே.வி. மகாதேவன்தில்லானா மோகனாம்பாள்

Nalandhana Nalandhana Song Lyrics in Tamil


BGM

பெண் : நலந்தானா நலந்தானா…
உடலும் உள்ளமும் நலந்தானா…

BGM

பெண் : நலந்தானா நலந்தானா…
உடலும் உள்ளமும் நலந்தானா…

BGM

பெண் : நலந்தானா நலந்தானா…
உடலும் உள்ளமும் நலந்தானா…

BGM

பெண் : நலம் பெற வேண்டும் நீயென்று…
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு…

BGM

பெண் : இலை மறை காய் போல் பொருள் கொண்டு…
எவரும் அறியாமல் சொல் இன்று…

பெண் : நலந்தானா…
உடலும் உள்ளமும் நலந்தானா…

BGM

பெண் : கண் பட்டதால் உந்தன் மேனியிலே…
புண் பட்டதோ அதை நானறியேன்…

BGM

பெண் : என் கண் பட்டதால் உந்தன் மேனியிலே…
புண் பட்டதோ அதை நானறியேன்…

பெண் : புண் பட்ட சேதியை கேட்டவுடன்…

BGM

பெண் : இந்த பெண் பட்ட பாட்டை…
யார் அறிவார்…

BGM

பெண் : நலந்தானா…
உடலும் உள்ளமும் நலந்தானா…

பெண் : நடந்ததெல்லாம் மறந்திருப்போம்…
நடப்பதையே நினைத்திருப்போம்…

பெண் : நடந்ததெல்லாம் மறந்திருப்போம்…
நடப்பதையே நினைத்திருப்போம்…

பெண் : கட்டுண்டோம் பொறுத்திருப்போம்…
காலம் மாறும் சந்திப்போம்…


Notes : Nalandhana Nalandhana Song Lyrics in Tamil. This Song from Thillana Mohanambal (1968). Song Lyrics penned by Kannadasan. நலந்தானா நலந்தானா பாடல் வரிகள்.