பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | பி. சுசீலா | கே.வி. மகாதேவன் | தில்லானா மோகனாம்பாள் |
Marainthirunthu Parkum Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன… ஸ்வாமி…
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…
பெண் : அழகர் மலை அழகா…
இந்த சிலை அழகா…
என்று மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…
பெண் : அழகர் மலை அழகா…
இந்த சிலை அழகா…
என்று மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…
பெண் : நவரசமும்…
—BGM—
பெண் : முகத்தில் நவரசமும்…
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்…
செக்க சிவந்திருக்கும் இதழில் கனி ரசமும்…
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்…
செக்க சிவந்திருக்கும் இதழில் கனி ரசமும்…
கண்டு…
பெண் : மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…
—BGM—
பெண் : எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்…
உன்னை என்னையல்லால் வேறு யார் அறிவார்…
எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்…
உன்னை என்னையல்லால் வேறு யார் அறிவார்…
பெண் : பாவையின் பதம் காண நாணமா…
பாவையின் பதம் காண நாணமா…
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா…
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா…
பெண் : மாலவா… வேலவா… மாயவா…
ஷண்முகா…
பெண் : மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…
—BGM—
பெண் : நாதத்திலே தலைவன் குழல் கேட்டேன்…
அந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன்…
நாதத்திலே தலைவன் குழல் கேட்டேன்…
அந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன்…
பெண் : மோகத்திலே என்னை மூழ்க வைத்து…
மோகத்திலே என்னை மூழ்க வைத்து…
ஒரு ஓரத்திலே நின்று கள்வனை போல்…
ஒரு ஓரத்திலே நின்று கள்வனை போல்…
பெண் : மாலவா… வேலவா… மாயவா…
ஷண்முகா…
பெண் : மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…
—BGM—
பெண் : மானாட மலராட மதி ஆட நதி ஆட…
மங்கை இவள் நடனமாட…
வானாட மண்ணாட கொடி ஆட இடை ஆட…
வஞ்சி இவள் கைகள் ஆட…
பெண் : சுவையோடு நானாட…
என்னை நாடி இதுவேளை இரவினில்…
துணையாக ஓடி வருவாய்…
பெண் : தூயனே மாலவா மாயனே வேலவா…
என்னை ஆளும் ஷண்முகா வா…
பெண் : மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…
பெண் : அழகர் மலை அழகா…
இந்த சிலை அழகா…
என்று மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…
—BGM—
Notes : Marainthirunthu Parkum Song Lyrics in Tamil. This Song from Thillana Mohanambal (1968). Song Lyrics penned by Kannadasan. மறைந்திருந்து பார்க்கும் பாடல் வரிகள்.