Category Archives: எதிர்நீச்சல் (1968)

Thamarai Kannangal Song Lyrics in Tamil

தாமரை கன்னங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி.பி. ஸ்ரீனிவாஸ் & பி. சுசீலாவி. குமார்எதிர்நீச்சல் (1968)

Thamarai Kannangal Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாமரை கன்னங்கள்…
தேன் மலர் கிண்ணங்கள்…
தாமரை கன்னங்கள்…
தேன் மலர் கிண்ணங்கள்…

ஆண் : எத்தனை வண்ணங்கள்…
முத்தமாய் சிந்தும்போது…
பொங்கிடும் எண்ணங்கள்…

பெண் : மாலையில் சந்தித்தேன்…
மையலில் சிந்தித்தேன்…
மாலையில் சந்தித்தேன்…
மையலில் சிந்தித்தேன்…

பெண் : மங்கை நான் கன்னித்தேன்…
காதலன் தீண்டும்போது…
கைகளை மன்னித்தேன்…
கைகளை மன்னித்தேன்…

பெண் : மாலையில் சந்தித்தேன்…

BGM

ஆண் : கொத்து மலர் குழல்…
பாதம் அளந்திடும் சித்திரமோ…
பெண் : ஆஆ… ஆஆ…

ஆண் : முத்து நகை தரும்…
மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ…
பெண் : ஆஆ… ஆஆ…

ஆண் : கொத்து மலர் குழல்…
பாதம் அளந்திடும் சித்திரமோ…
பெண் : ஆஆ… ஆஆ…

ஆண் : முத்து நகை தரும்…
மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ…

பெண் : துயில் கொண்ட வேளையிலே…
குளிர் கண்ட மேனியிலே…
துணை வந்து சேரும்போது…
சொல்லவோ இன்பங்கள்…

பெண் : மாலையில் சந்தித்தேன்…
மையலில் சிந்தித்தேன்…
மங்கை நான் கன்னித்தேன்…
காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்…

—BGM—

பெண் : ஆலிலை மேலொரு கண்ணனைப்போல்…
இவன் வந்தவனோ…
நூலிடை மேலொரு…
நாடகம் ஆடிட நின்றவனோ…

பெண் : ஆலிலை மேலொரு கண்ணனைப்போல்…
இவன் வந்தவனோ…
நூலிடை மேலொரு…
நாடகம் ஆடிட நின்றவனோ…

ஆண் : சுமை கொண்ட பூங்கொடியின்…
சுவை கொண்ட தேன் கனியை…
உடை கொண்டு மூடும்போது…
உறங்குமோ உன்னழகு…

ஆண் : தாமரை கன்னங்கள்…
தேன் மலர் கிண்ணங்கள்…

ஆண் : எத்தனை வண்ணங்கள்…
முத்தமாய் சிந்தும்போது…
பொங்கிடும் எண்ணங்கள்…

பெண் : ஆஆ… மாலையில் சந்தித்தேன்…
மையலில் சிந்தித்தேன்…
மங்கை நான் கன்னித்தேன்…
காதலன் தீண்டும்போது…
கைகளை மன்னித்தேன்…


Notes : Thamarai Kannangal Song Lyrics in Tamil. This Song from Edhir Neechal (1968). Song Lyrics penned by Vaali. தாமரை கன்னங்கள் பாடல் வரிகள்.


அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாவி. குமார்எதிர்நீச்சல் (1968)

Aduthathu Ambujatha Song Lyrics in Tamil


பெண் : ஏன்னா நீங்க சமத்தா இல்ல அசடா…
சமத்தா இருந்தா கொடுப்பேலாம்…
அசடா இருந்தா மறுப்பேலாம்… ஆண் : ஏன்டி புதுசா கேக்குற…
என்ன பார்த்து…

பெண் : அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா…
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா… ஏன்னா…
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா…
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா…

பெண் : அடிச்சாலும் புடிச்சாலும்…
அவா ஒன்னா சேர்ந்துக்கறா…
அடிச்சாலும் புடிச்சாலும்…
அவா ஒன்னா சேர்ந்துக்கறா…

பெண் : அடிச்சதுக்கொன்னு… புடிச்சதுக்கொன்னு…
பொடவய வாங்கிக்கிறா…
பட்டு பொடவய வாங்கிக்கிறா…

பெண் : அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா…
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா…

BGM

ஆண் : அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேன்டி…
அவன் சம்பளம் பாதி…
கிம்பளம் பாதி வாங்கறான்டி… பட்டூ…

ஆண் : அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேன்டி…
அவன் சம்பளம் பாதி…
கிம்பளம் பாதி வாங்கறான்டி…

ஆண் : மூன்றெழுத மூணு ஷோவும்…
பாத்தது நீதான்டி…
மூன்றெழுத மூணு ஷோவும்…
பாத்தது நீதான்டி…

ஆண் : சினிமாவுக்கே சம்பளம் போனா…
புடவைக்கேதடி…
பட்டூ புடவைக்கேதடி…
அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேன்டி…

BGM

பெண் : உங்களுக்கு தான் வாக்கப்பட்டு…
என்னத்த கண்டா பட்டு…
உங்களுக்கு தான் வாக்கப்பட்டு…
என்னத்த கண்டா பட்டு…

ஆண் : பட்டு கிட்டு பேரைச்சொல்ல…
பொறந்திருக்கே ஒரு லட்டு…
பட்டு கிட்டு பேரைச்சொல்ல…
பொறந்திருக்கே ஒரு லட்டு…

பெண் : நாளும் கிழமையும் போட்டுக்க…
ஒரு நகைநட்டுண்டா நேக்கு…
நாளும் கிழமையும் போட்டுக்க…
ஒரு நகைநட்டுண்டா நேக்கு…

பெண் : எட்டுக்கல்லு பேசாரி…
போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு…
எட்டுக்கல்லு பேசாரி போட்டா…
எடுப்பா இருக்கும் மூக்கு…

ஆண் : சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும்…
தெரியாதோடி நோக்கு…
சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும்…
தெரியாதோடி நோக்கு…

பெண் : எப்போ இருந்தது இப்போ வர்றதுக்கு…
எதுக்கெடுத்தாலும் சாக்கு… ம்கும்…

பெண் : அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா…
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா…

BGM

ஆண் : ஏட்டிக்கு போட்டி பேசாதடி பட்டூ…

BGM

பெண் : பேசினா என்ன வைப்பேளா…
ஒரு குட்டு…

BGM

ஆண் : ஆத்திரம் வந்தா பொல்லாதவன்டி கிட்டு…

BGM

பெண் : என்னத்த செய்வேள்…
ஆண் : சொன்னத செய்வேன்…

பெண் : வேரென்ன செய்வேள்…
ஆண் : அடக்கி வைப்பேன்…

பெண் : அதுக்கும் மேலே…
ஆண் : ம்ம்… பல்ல உடைப்பேன்…

பெண் : ஆஆஆஆ…
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா…
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா…

ஆண் : பட்டூ அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேன்டி…
பட்டூ நமக்கேன்டி… பட்டூ நமக்கேன்டி…


Notes : Aduthathu Ambujatha Song Lyrics in Tamil. This Song from Edhir Neechal (1968). Song Lyrics penned by Vaali. அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா பாடல் வரிகள்.