தாமரை கன்னங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி.பி. ஸ்ரீனிவாஸ் & பி. சுசீலாவி. குமார்எதிர்நீச்சல் (1968)

Thamarai Kannangal Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாமரை கன்னங்கள்…
தேன் மலர் கிண்ணங்கள்…
தாமரை கன்னங்கள்…
தேன் மலர் கிண்ணங்கள்…

ஆண் : எத்தனை வண்ணங்கள்…
முத்தமாய் சிந்தும்போது…
பொங்கிடும் எண்ணங்கள்…

பெண் : மாலையில் சந்தித்தேன்…
மையலில் சிந்தித்தேன்…
மாலையில் சந்தித்தேன்…
மையலில் சிந்தித்தேன்…

பெண் : மங்கை நான் கன்னித்தேன்…
காதலன் தீண்டும்போது…
கைகளை மன்னித்தேன்…
கைகளை மன்னித்தேன்…

பெண் : மாலையில் சந்தித்தேன்…

BGM

ஆண் : கொத்து மலர் குழல்…
பாதம் அளந்திடும் சித்திரமோ…
பெண் : ஆஆ… ஆஆ…

ஆண் : முத்து நகை தரும்…
மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ…
பெண் : ஆஆ… ஆஆ…

ஆண் : கொத்து மலர் குழல்…
பாதம் அளந்திடும் சித்திரமோ…
பெண் : ஆஆ… ஆஆ…

ஆண் : முத்து நகை தரும்…
மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ…

பெண் : துயில் கொண்ட வேளையிலே…
குளிர் கண்ட மேனியிலே…
துணை வந்து சேரும்போது…
சொல்லவோ இன்பங்கள்…

பெண் : மாலையில் சந்தித்தேன்…
மையலில் சிந்தித்தேன்…
மங்கை நான் கன்னித்தேன்…
காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்…

—BGM—

பெண் : ஆலிலை மேலொரு கண்ணனைப்போல்…
இவன் வந்தவனோ…
நூலிடை மேலொரு…
நாடகம் ஆடிட நின்றவனோ…

பெண் : ஆலிலை மேலொரு கண்ணனைப்போல்…
இவன் வந்தவனோ…
நூலிடை மேலொரு…
நாடகம் ஆடிட நின்றவனோ…

ஆண் : சுமை கொண்ட பூங்கொடியின்…
சுவை கொண்ட தேன் கனியை…
உடை கொண்டு மூடும்போது…
உறங்குமோ உன்னழகு…

ஆண் : தாமரை கன்னங்கள்…
தேன் மலர் கிண்ணங்கள்…

ஆண் : எத்தனை வண்ணங்கள்…
முத்தமாய் சிந்தும்போது…
பொங்கிடும் எண்ணங்கள்…

பெண் : ஆஆ… மாலையில் சந்தித்தேன்…
மையலில் சிந்தித்தேன்…
மங்கை நான் கன்னித்தேன்…
காதலன் தீண்டும்போது…
கைகளை மன்னித்தேன்…


Notes : Thamarai Kannangal Song Lyrics in Tamil. This Song from Edhir Neechal (1968). Song Lyrics penned by Vaali. தாமரை கன்னங்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading