பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | ஹரிசரண் | ஹாரிஸ் ஜெயராஜ் | தாம் தூம் |
Azhiyilae Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஆழியிலே முக்குளிக்கும் அழகே…
ஆவியிலே தத்தளிக்கும் அழகே…
ஆண் : உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி…
முந்தானை படியேறவா மூச்சோடு குடியேறவா…
உன் இடையோடு நடமாடும் உடையாக நான் மாறி…
எந்நாளும் சூடேறவா என் ஜென்மம் ஈடேறவா…
—BGM—
ஆண் : ஆழியிலே முக்குளிக்கும் அழகே…
ஆவியிலே தத்தளிக்கும் அழகே…
ஆண் : உன் விம்மென்ற கன்னத்தில் திம்மென்ற நெஞ்சத்தில்…
இச்சென்று இதழ் வைக்கவா இச்சைக்கோர் விலை வைக்கவா…
உன் உம் என்ற சொல்லுக்கும் இம்மென்ற சொல்லுக்கும்…
இப்போதே தடை வைக்கவா மௌவுனத்தில் குடி வைக்கவா…
—BGM—
ஆண் : அகம் பாதி முகம் பாதி நகம் பாயும் சுகம் மீதி…
மறைத்தாலும் மறக்காது அழகே…
ஆண் : அடிவானம் சிவந்தாலும் கோடிப்பூக்கள் பிறந்தாலும்…
உனைப் போல இருக்காது அழகே…
அடிவானம் சிவந்தாலும் கோடிப்பூக்கள் பிறந்தாலும்…
உனைப் போல இருக்காது அழகே…
அழகே அழகே வியக்கும் அழகே…
அழகே அழகே வியக்கும் அழகே…
—BGM—
Notes : Azhiyilae Song Lyrics in Tamil. This Song from Dhaam Dhoom (2008). Song Lyrics penned by Na. Muthu Kumar. ஆழியிலே முக்குளிக்கும் பாடல் வரிகள்.