அந்த வானத்தப் போல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி. உதயகுமார்இளையராஜாஇளையராஜாசின்ன கவுண்டர்

Antha Vanatha Pola Song Lyrics in Tamil


ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே…
பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே…

ஆண் : மஞ்சளிலே ஒரு நூலெடுத்து…
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு…
சொன்னது யாரு அது மன்னவன் பேரு…

ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே…
பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே…

BGM

ஆண் : மாறிப் போன போதும் இது தேரு போகும் வீதி…
வாரி வாரித் தூற்றும் இனி யாரு உனக்கு நாதி…
பாசம் வைத்ததாலே நீ பயிரைக் காத்த வேலி…
பயிரைக் காத்த போதும் வீண் பழியைச் சுமந்த நீதி…
சாமி வந்து கேட்டிடுமா வீண் பழியைத் தீர்த்திடுமா…

ஆண் : விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு…
சொன்னது யாரு அது மன்னவன் பேரு…

ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே…
பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே…

BGM

ஆண் : நெஞ்சம் என்னும் கூடு அதில் நெருப்பு வைத்ததாரு…
துன்பம் வந்த போதும் அதைத் துடைப்பதிங்கு யாரு…
கலங்கும் போது சேறு அது தெளியும் போது நீரு…
கடவுள் போட்ட கோடு அதைத் திருத்தப் போவதாரு…
வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனைதான் தீர்ந்திடுமா…

ஆண் : விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு…
சொன்னது யாரு அது மன்னவன் பேரு…

ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே…
பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே…

ஆண் : மஞ்சளிலே ஒரு நூலெடுத்து…
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு…
சொன்னது யாரு அது மன்னவன் பேரு…

ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே…
பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே…


Notes : Antha Vanatha Pola Song Lyrics in Tamil. This Song from Chinna Gounder (1992). Song Lyrics penned by R.V. UdhayaKumar. அந்த வானத்தப் போல பாடல் வரிகள்.