அன்று கேட்பவன் அரசன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
தமிழ் நம்பிடி.எம்.சௌந்தரராஜன்டி.எம்.சௌந்தரராஜன்முருகன் பாடல்கள்

Andru Ketpavan Song Lyrics in Tamil


BGM

ஆண் : அன்று கேட்பவன் அரசன் மறந்தால்…
நின்று கேட்பவன் இறைவன்…
அன்று கேட்பவன் அரசன் மறந்தால்…
நின்று கேட்பவன் இறைவன்…

ஆண் : நடுவில் மனிதன் வாழுகிறான்…
நடுவில் மனிதன் வாழுகிறான்…
வீணில் மனம் தடுமாறுகிறான்…
இறைவா… இறைவா…

ஆண் : அன்று கேட்பவன் அரசன் மறந்தால்…
நின்று கேட்பவன் இறைவன்…

BGM

ஆண் : மனம் போல் மாங்கல்யம் என்பார்…
தன்மனமே சகலமும் என்பார்…
மனம் போல் மாங்கல்யம் என்பார்…
தன்மனமே சகலமும் என்பார்…

ஆண் : தெரிந்தும் குணத்தை இழக்கிறான்…
தெரிந்தும் குணத்தை இழக்கிறான்…
இதயம் குலைந்து தவிக்கிறான்…
இறைவா… இறைவா…

ஆண் : அன்று கேட்பவன் அரசன் மறந்தால்…
நின்று கேட்பவன் இறைவன்…

BGM

ஆண் : அடிக்கும் அவன் கை அணைக்கும்…
புவி அனைத்தும் தலைவன் இயக்கம்…
அடிக்கும் அவன் கை அணைக்கும்…
புவி அனைத்தும் தலைவன் இயக்கம்…

ஆண் : தலைவன் அணைத்தால் சிரிக்கிறான்…
தலைவன் அணைத்தால் சிரிக்கிறான்…
தன்னை அடித்தால் பழிக்கிறான்…
இறைவா… இறைவா…

ஆண் : அன்று கேட்பவன் அரசன் மறந்தால்…
நின்று கேட்பவன் இறைவன்…

BGM

ஆண் : கற்றது கைமண் அளவு…
கரை கண்டவர் இங்கே குறைவு…
கற்றது கைமண் அளவு…
கரை கண்டவர் இங்கே குறைவு…

ஆண் : கண்டு அறிந்தவர் ஓர் தலைவன்…
கண்டு அறிந்தவர் ஓர் தலைவன்…
யாவும் அருள்வான் நம் இறைவன்…
இறைவா… இறைவா…

ஆண் : அன்று கேட்பவன் அரசன் மறந்தால்…
நின்று கேட்பவன் இறைவன்…
நடுவில் மனிதன் வாழுகிறான்…
வீணில் மனம் தடுமாறுகிறான்…
இறைவா இறைவா இறைவா இறைவா…

BGM


Notes : Andru Ketpavan Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Tamil Nambi. அன்று கேட்பவன் அரசன் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top