| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
| மாணிக்கவாசகர் | சிவ தாமோதரன் | Unknown | சிவன் பாடல்கள் |
Anandha Maalai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மின்னே ரனைய பூங்கழல்கள் அடைந்தார் கடந்தார் வியனுலகம்…
பொன்னே ரனைய மலர்கொண்டு போற்றா நின்றார் அமரரெல்லாம்…
கல் நேரனைய மனக்கடையாய்க் கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த…
என்னே ரனையேன் இனியுன்னைக் கூடும் வண்ணம் இயம்பாயே…
ஆண் : என்னால் அறியாப் பதம்தந்தாய் யான தறியா தேகெட்டேன்…
உன்னால் ஒன்றுங் குறைவில்லை உடையாய் அடிமைக் காரென்பேன்…
பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும் பழைய அடியா ரொடுங்கூடா…
தென்நா யகமே பிற்பட்டிங் கிருந்தென் நோய்க்கு விருந்தாயே…
ஆண் : சீல மின்றி நோன்பின்றிச் செறிவே யின்றி அறிவின்றி…
தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை…
மாலுங் காட்டி வழிகாட்டி வாரா உலக நெறியேற…
கோலங் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே…
ஆண் : கெடுவென் கெடுமா கெடுகின்றேன் கேடி லாதாய் பழிகொண்டாய்…
படுவேன் படுவ தெல்லாம்நான் பட்டாற் பின்னைப் பயனென்னே…
கொடுமா நரகத் தழுந்தாமே காத்தாட் கொள்ளுங் குருமணியே…
நடுவாய் நில்லா தொழிந்தக்கால் நன்றோ எங்கள் நாயகமே…
ஆண் : தாயாய் முலையைத் தருவானே தாரா தொழிந்தாற் சவலையாய்…
நாயேன் கழிந்து போவேனோ நம்பி யினித்தான் நல்குதியே…
தாயே யென்றுன் தாளடைந்தேன் தயாநீ என்பால் இல்லையே…
நாயேன் அடிமை உடனாக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ…
ஆண் : கோவே யருள வேண்டாவோ கொடியேன் கெடவே அமையுமே…
ஆவா வென்னா விடிலென்னை அஞ்சேல் என்பார் ஆரோதான்…
சாவா ரெல்லாம் என்னளவோ தக்க வாறன் றென்னாரோ…
தேவே தில்லை நடமாடீ திகைத்தேன் இனித்தான் தேற்றாயே…
ஆண் : நரியைக் குதிரைப் பரியாக்கி ஞால மெல்லாம் நிகழ்வித்து…
பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய்…
அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே…
தெரிய அரிய பரஞ்சோதி செய்வ தொன்றும் அறியேனே…
—BGM—
Notes : Anandha Maalai Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Manikkavacakar. ஆனந்தமாலை பாடல் வரிகள்.

