பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | மனோ & மின்மினி | இளையராஜா | அரண்மனை கிளி |
Adi Punguyile Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு…
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு…
—BGM—
ஆண் : அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு…
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு…
யாரிடத்தில் உன் மனசு போச்சு…
நூல போல உன் உடம்பு ஆச்சு…
பெண் : அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு…
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு…
யாரிடத்தில் உன் மனசு போச்சு…
நூல போல உன் உடம்பு ஆச்சு…
பெண் : வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு…
வாய விட்டு போனதென்ன பேச்சு…
குழு : பூங்குயிலே பூங்குயிலே கேளு…
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு…
—BGM—
ஆண் : ஆத்தங்கரை அந்தப்புறம் ஆக்கி கொள்ளவா…
அந்த அக்கரைக்கும் இக்கரைக்கும் கோட்டை கட்டவா…
—BGM—
பெண் : மாமன் கையில் பூவை தந்து…
சூடி கொள்ளவா…
அடி ஆசைஎன்னும் ஊஞ்சல் கட்டி…
ஆடி கொள்ளவா…
ஆண் : சொல்லு சொல்லு திட்டம் என்ன…
சொல்லுவது கஷ்டமா…
பொத்தி பொத்தி வச்சதென்ன…
என்ன என்னவோ இஷ்டமா…
பெண் : கூவாம கூவுறியே கூக்கூ கூக்கூ பாட்டு…
மாட்டாம மாட்டிபுட்ட சொக்கு பொடி போட்டு…
ஆண் : யாரிடத்தில் உன் மனசு போச்சு…
நூல போல உன் உடம்பு ஆச்சு…
குழு : பூங்குயிலே பூங்குயிலே கேளு…
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு…
—BGM—
பெண் : ஊரை எல்லாம் சுத்தி வந்த ஒத்தக்கிளியே…
இப்போ ஓரிடத்தில் நின்றதென்ன சொல்லு கிளியே…
ஆண் : சொந்த பந்தம் யாரும் இன்றி…
வந்த கிளியே…
ஒரு சொந்தம் இப்போ வந்ததென்ன…
வாசல் வழியே…
பெண் : வேரு விட்ட ஆலம் கன்னு…
வானம் தொட பாா்க்குது…
வானம் தொடும் ஆசையில…
மெல்ல மெல்ல பூக்குது…
ஆண் : பூ பூவா பூக்க வச்ச…
மாமன் அவன் யாரு…
பாடுகிற பாட்டுலதான் நீயும் அதை கூறு…
பெண் : யாரிடத்தில் உன் மனசு போச்சு…
நூல போல உன் உடம்பு ஆச்சு…
குழு : பூங்குயிலே பூங்குயிலே கேளு…
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு…
பெண் : யாரிடத்தில் உன் மனசு போச்சு…
நூல போல உன் உடம்பு ஆச்சு…
ஆண் : வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு…
வாய விட்டு போனதென்ன பேச்சு…
குழு : பூங்குயிலே பூங்குயிலே கேளு…
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு…
Notes : Adi Punguyile Song Lyrics in Tamil. This Song from Aranmanai Kili (1993). Song Lyrics penned by Vaali. அடி பூங்குயிலே பாடல் வரிகள்.