பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ்.பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | இதயத் தாமரை |
Yarodu Yaar Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : யாரோடு யாரென்ற கேள்வி…
விதி வந்து விடை சொல்லுமா…
கடலோடு நதிகூட காயும்…
என் கண்ணீர் காயாதம்மா…
ஆண் : யாரோடு யாரென்ற கேள்வி…
விதி வந்து விடை சொல்லுமா…
கடலோடு நதிகூட காயும்…
என் கண்ணீர் காயாதம்மா…
—BGM—
ஆண் : நேற்று என் நெஞ்சில் பூ வைத்தவள்…
இன்று என் நெஞ்சில் தீ வைப்பதா…
நேற்று என் வீட்டில் பால் வைத்தவள்…
நாளை வாழ்வுக்கு நாள் வைப்பதா…
ஆண் : நிழல் தேடி வந்தாள் நிஜமாகினாள்…
நிஜம் வந்த நேரம் நிழலாகினாள்…
கண்ணோடு சேர்த்தேன் கனவாக ஆனாள்…
ஆண் : யாரோடு யாரென்ற கேள்வி…
விதி வந்து விடை சொல்லுமா…
கடலோடு நதிகூட காயும்…
என் கண்ணீர் காயாதம்மா…
—BGM—
ஆண் : மீன்கள் எப்போதும் தண்ணீரிலே…
ஞானம் இப்போது கண்ணீரிலே…
கால்கள் எப்போதும் கண்போக்கிலே…
காதல் எப்போதும் பெண்போக்கிலே…
ஆண் : மேகங்கள் இல்லா வானம் உண்டு…
சோகங்களில்லா வாழ்வும் உண்டா…
அலையில்லை என்னும் கடலொன்று உண்டா…
ஆண் : யாரோடு யாரென்ற கேள்வி…
விதி வந்து விடை சொல்லுமா…
கடலோடு நதிகூட காயும்…
என் கண்ணீர் காயாதம்மா…
—BGM—
Notes : Yarodu Yaar Song Lyrics in Tamil. This Song from Idhaya Thamarai (1990). Song Lyrics penned by Vairamuthu. யாரோடு யாரென்ற பாடல் வரிகள்.